6221.
ஆச்சப்பா தென்காசி பதியில்தானும் வப்பனே கன்னியா குமரியாகும்
நீச்சான வளையலென்ற குப்பிதன்னை நேர்மையுடன் தான்முடிக்கும் காளாஸ்திரிதானும்
மூச்சுடனே நெடுந்தூரஞ் சென்றாலப்பா முனையான பாளமென்ற கோயம்புத்தூர்
வீச்சுடைய பூமியது பள்ளநாடு வீரான கல்லழகர் நாடுதாமே
6222.
நாடான நற்மதா தேசமப்பா நலமான சித்தூரஞ் சிங்கிநாடு
பாடாண்மை கொண்டதொரு சீனதேசம் பாங்கான முப்பூவுக் கிடமேயாகும்
கோடான கோடிமனு மாண்பர்க்கெல்லாம் கொற்றவர்க்கு இந்நாடே வஞ்சிநாடு
தாடாண்மை கொண்டதொரு தேசமப்பா தாரணியில் பூவழலை யெடுக்கும்நாடே
6223.
எடுப்பதற்கு இந்நாடு சிந்துதேசம் எழிலான தேசமெல்லாம் பின்னாடாகும்
கொடுப்பதற்கு சிவயோகி மாண்பருக்கு கோடான கோடிமுறை யிதிலொப்பாகும்
தடுப்பதற்கு யிப்பூமி விட்டாலப்பா தாக்கான பூமிவள தமக்குமில்லை
உடுக்கையென்ற பிரகக்கல் தானுமப்பா வுத்தமனே எடுக்கும் வகை செப்பினேனே
6224.
செப்பினேன் வழலையது யெடுப்பதற்கும் செயலான காடியது முடிப்பதற்கும்
ஒப்பான முப்பூவின் மார்க்கந்தன்னை ஒழுங்குடனே முடிப்பதற்கு வழிதான்சொன்னேன்
தப்பிதங்கள் இல்லாமல் குருமுடித்தல் தண்மையுள்ள முப்பூவும் முடியும்பாரே
6225.
பாரேதான் பூநீறு சுத்திசெய்து பாகமுட னெடுப்பதற்கு வகையைக்கேளும்
நேரேதான் பூநீரு படிதானப்பா நிலையான முன்சொன்ன காடிதானும்
சீரேதான் பூநீரில் விட்டுமைந்தா சிறப்புடனே கலக்கியதை தெளுநிறுத்து
கூரேதான் ரவிதனிலே காயவைத்து கொப்பெனவே யுப்பதனை யெடுத்திடாயே
6226.
எடுத்துமே யிப்படியே பத்துமுறை கலக்கி யெளிதான ரவிதனிலே காயவைத்து
தொடுத்ததொரு வுப்பதனைப் பதனம்பண்ணு தோறாமல் பத்துமுறை செய்தவுப்பை
கெடுத்திடா வண்ணமது பீங்கான்தன்னில் கவனமுடன் பதனமாய்ச் செய்துகொண்டு
நடுத்தெருவாங் கருமியென்ற மாண்பருக்கு நவிலாதே நவின்றிட்டால் சாபமாமே
6227.
சாபமா மின்னமொரு மார்க்கங்கேளு தப்பாது காலாங்கி வாக்குதானும்
பாபமது நேராது புண்யவானே பாருலகில் சித்துமுனி சொல்லார்தாமும்
கோபமது கொண்டல்லோ முனிவர்தாமும் கூறாரே சிவமுப்பு சூட்சந்தன்னை
தாபமுடன் மனோன்மணியாள் கடாட்சத்தாலே சாங்கமுடன் அடியேனும் நவின்றிட்டேனே
6228.
இட்டதொரு பிரம்மக்கல் தனையெடுத்து எழிலான கருப்பதனை நீக்கிமைந்தா
தொட்டளவு குருசொல் வாக்குபோல துறைமுகமுங் கண்டறிந்து பளிங்குக்கல்லாம்
சட்டமுடன் கல்லதனை யிடித்துமைந்தா சாங்கமுடன் பச்சையென்ற பூநீர்தன்னை
திட்டமுடன் கல்லுக்கு ரெண்டேயாகும் தீரமுடன் தான்கலந்து பாண்டம்வையே
6229.
பாண்டமது தனிலமைத்து பாகங்கேளிர் பாங்காக முன்னரைத்த காடிநீரை
வேண்டியே பூநீறுக் கரைதானப்பா விருப்பமுடன் பாண்டமதிலூட்டு மைந்தா
தூண்டியதோர் கருமான மிரண்டும்வேக துப்புரவாய்க் காடியென்ற நீரினாலே
மாண்டிடவே தானெரிப்பாய் காடிநீர்தான் மார்க்கமுடன் கண்டமட்டும் எரித்திடாயே
6230.
எரித்துமே பச்சையென்ற காடிநீரால் ஏற்றமுடன் தானலம்பி ரவியிற்போடு
மரித்துமே பிரம்மமென்ற கல்தானப்பா மகத்தான எண்ணையது கக்கிப்போச்சு
குரித்தபொருள் பிரமமென்ற சுன்னக்கல்தான் கூரான தேகமது வதிகங்கொண்டு
தெரிந்துமே பொடிப்பொடியாம் தகடுபோலாம் வெளிவான சுன்னத்துக் கிடந்தானாச்சே
ஆச்சப்பா தென்காசி பதியில்தானும் வப்பனே கன்னியா குமரியாகும்
நீச்சான வளையலென்ற குப்பிதன்னை நேர்மையுடன் தான்முடிக்கும் காளாஸ்திரிதானும்
மூச்சுடனே நெடுந்தூரஞ் சென்றாலப்பா முனையான பாளமென்ற கோயம்புத்தூர்
வீச்சுடைய பூமியது பள்ளநாடு வீரான கல்லழகர் நாடுதாமே
6222.
நாடான நற்மதா தேசமப்பா நலமான சித்தூரஞ் சிங்கிநாடு
பாடாண்மை கொண்டதொரு சீனதேசம் பாங்கான முப்பூவுக் கிடமேயாகும்
கோடான கோடிமனு மாண்பர்க்கெல்லாம் கொற்றவர்க்கு இந்நாடே வஞ்சிநாடு
தாடாண்மை கொண்டதொரு தேசமப்பா தாரணியில் பூவழலை யெடுக்கும்நாடே
6223.
எடுப்பதற்கு இந்நாடு சிந்துதேசம் எழிலான தேசமெல்லாம் பின்னாடாகும்
கொடுப்பதற்கு சிவயோகி மாண்பருக்கு கோடான கோடிமுறை யிதிலொப்பாகும்
தடுப்பதற்கு யிப்பூமி விட்டாலப்பா தாக்கான பூமிவள தமக்குமில்லை
உடுக்கையென்ற பிரகக்கல் தானுமப்பா வுத்தமனே எடுக்கும் வகை செப்பினேனே
6224.
செப்பினேன் வழலையது யெடுப்பதற்கும் செயலான காடியது முடிப்பதற்கும்
ஒப்பான முப்பூவின் மார்க்கந்தன்னை ஒழுங்குடனே முடிப்பதற்கு வழிதான்சொன்னேன்
தப்பிதங்கள் இல்லாமல் குருமுடித்தல் தண்மையுள்ள முப்பூவும் முடியும்பாரே
6225.
பாரேதான் பூநீறு சுத்திசெய்து பாகமுட னெடுப்பதற்கு வகையைக்கேளும்
நேரேதான் பூநீரு படிதானப்பா நிலையான முன்சொன்ன காடிதானும்
சீரேதான் பூநீரில் விட்டுமைந்தா சிறப்புடனே கலக்கியதை தெளுநிறுத்து
கூரேதான் ரவிதனிலே காயவைத்து கொப்பெனவே யுப்பதனை யெடுத்திடாயே
6226.
எடுத்துமே யிப்படியே பத்துமுறை கலக்கி யெளிதான ரவிதனிலே காயவைத்து
தொடுத்ததொரு வுப்பதனைப் பதனம்பண்ணு தோறாமல் பத்துமுறை செய்தவுப்பை
கெடுத்திடா வண்ணமது பீங்கான்தன்னில் கவனமுடன் பதனமாய்ச் செய்துகொண்டு
நடுத்தெருவாங் கருமியென்ற மாண்பருக்கு நவிலாதே நவின்றிட்டால் சாபமாமே
6227.
சாபமா மின்னமொரு மார்க்கங்கேளு தப்பாது காலாங்கி வாக்குதானும்
பாபமது நேராது புண்யவானே பாருலகில் சித்துமுனி சொல்லார்தாமும்
கோபமது கொண்டல்லோ முனிவர்தாமும் கூறாரே சிவமுப்பு சூட்சந்தன்னை
தாபமுடன் மனோன்மணியாள் கடாட்சத்தாலே சாங்கமுடன் அடியேனும் நவின்றிட்டேனே
6228.
இட்டதொரு பிரம்மக்கல் தனையெடுத்து எழிலான கருப்பதனை நீக்கிமைந்தா
தொட்டளவு குருசொல் வாக்குபோல துறைமுகமுங் கண்டறிந்து பளிங்குக்கல்லாம்
சட்டமுடன் கல்லதனை யிடித்துமைந்தா சாங்கமுடன் பச்சையென்ற பூநீர்தன்னை
திட்டமுடன் கல்லுக்கு ரெண்டேயாகும் தீரமுடன் தான்கலந்து பாண்டம்வையே
6229.
பாண்டமது தனிலமைத்து பாகங்கேளிர் பாங்காக முன்னரைத்த காடிநீரை
வேண்டியே பூநீறுக் கரைதானப்பா விருப்பமுடன் பாண்டமதிலூட்டு மைந்தா
தூண்டியதோர் கருமான மிரண்டும்வேக துப்புரவாய்க் காடியென்ற நீரினாலே
மாண்டிடவே தானெரிப்பாய் காடிநீர்தான் மார்க்கமுடன் கண்டமட்டும் எரித்திடாயே
6230.
எரித்துமே பச்சையென்ற காடிநீரால் ஏற்றமுடன் தானலம்பி ரவியிற்போடு
மரித்துமே பிரம்மமென்ற கல்தானப்பா மகத்தான எண்ணையது கக்கிப்போச்சு
குரித்தபொருள் பிரமமென்ற சுன்னக்கல்தான் கூரான தேகமது வதிகங்கொண்டு
தெரிந்துமே பொடிப்பொடியாம் தகடுபோலாம் வெளிவான சுன்னத்துக் கிடந்தானாச்சே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக