பக்கங்கள்

வெள்ளி, 12 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6241-6250

6241.
பூசையாம் மனோன்மணியாள் ஆராதாரம் பொங்கமுடன் தான்செய்து எடுத்துமைந்தா
ஆசையது கொள்ளாது வருண்மைந்தாகேள் வப்பனே சீசாவிற் பதனம்பண்ணு
காசுபணம் தேடுதற்கு உரிமைகேளு கனமான பாஷாணம் பலந்தானொன்று
மாசுபடா முப்பூவும் பலந்தான்காலாய் மார்க்கமுடன் கல்வமதில் போட்டிடாயே
6242.
போட்டவுடன் சரக்கதுவும் ஒன்றாய்க்கூட்டி பொங்கமுடன் முன்னுரைத்த காடிநீரால்
வாட்டமுடன் தானரைப்பாய் சாமமப்பா வளமான பில்லையது லகுவாய்ச்செய்து
நீட்டமுடன் ரவிதனிலே காய்ந்தபின்பு நீதியுடன் முன்சொன்ன மார்க்கம்போலே
தேட்டமுடன் புடமதுவுங் கோழிபார் தெளிவுடனே போடுவதும் முறைதான்கேளே
6243.
முறையான புடமதுவும் ஆறிப்பின்பு முனையான பற்பமதை யெடுத்துமைந்தா
நிறைபோடு வணுவளவுங் குறையுமில்லை நீட்டமுடன் பற்பமது பாரமெத்த
குறையாது பாஷாணமென்ன சொல்வேன் குவலயத்தில் சித்துமுனி கூறாவண்ணம்
அறைந்தேனே உலகுபதி மாண்பருக்கு வப்பனே சிவயோக தலத்தில்நில்லே
6244.
நிற்கையிலே மனோன்மணியாள் மனதுவந்து நிஷ்களங்க மாகவல்லோ வுனக்குமைந்தா
சொற்பமென்ற வாதமது பலிக்கும்பாரு சுந்தரனே வுன்னைப்போல சித்துமுண்டோ
அற்பமென்று நினையாதே துய்யபாலா வருண்மைந்தா முப்பாலே யெல்லாஞ்சித்தி
விற்பனர்கள் கொண்டாடும் இந்தவேதை மேதினியில் சமுசாரிக்கானவாறே
6245.
வாரான பற்பமது போக்குசொல்வேன் வளமான வெள்ளீயந் தன்னைத்தானும்
கூரான சேரதுதான் ஒன்றேயாகும் குறிப்புடனே தானுருக்கி செப்பக்கேளும்
நீரான பாஷாண பற்பந்தன்னை நீமகனே வராகனிடை காலதாக
சேரோடும் வெள்ளீயம் உருக்கியல்லோ செம்மலுடன் பற்பமதைத் தாக்கிடாயே
6246.
தாக்குவாய் வெள்ளீயம் பற்பத்தாலே தண்மையுள்ள நீரதுவும் உரிந்துகொள்ளும்
வாக்குடனே காலாங்கி மொழிபொய்யாது வளமையுடன் போகரே ழாயிரந்தான்
நோக்கமுடன் நீர்வடிந்து வெள்ளிதன்னை நுணுக்கமுடன் வருமைவருங் காலந்தன்னில்
ஏக்கமது கொள்ளாமல் வெள்ளிதன்னை யெளிதாக சமுசாரி யுண்ணலாமே
6247.
உண்ணவென்றால் சாபமது யாதுமில்லை வுத்தமனே சரக்குவறு பத்துநான்கும்
திண்ணமுடன் இம்முறைபோல் செய்வாயப்பா தீரமுடன் சரக்குவறு பத்துநான்கும்
வண்ணமுடன் நிற்றுதற்கு பிசகோயில்லை வளமான முப்பூவின் சுன்னமப்பா
சுன்னமுடன் முப்பூவின் காரத்தாலே நலமான சரக்கெல்லாம் நீறிப்போமே
6248.
நீறுமே சூதமென்ற சரக்குதானும் நீதியுடன் பலமதுவும் எடுத்துக்கொண்டு
வீறுடனே முப்பூவைச் சரியாய்க்கூட்டி வீரமுடன் முன்சொன்ன காடிதன்னால்
மாறுதலும் நேராமல் பற்பந்தன்னை மார்க்கமுடன் தானரைப்பாய் சூதங்கூட்டி
நூலுடனே கலசமென்ற பாண்டந்தன்னில் துப்புரவாய் சில்லிட்டுச் சீலைசெய்யே
6249.
சீலையது எழுசீலை வலுவாய்ச்செய்து சிறப்புடனே ரவிதனிலே காயவைத்து
வாலையென்ற எந்திரமாம் புவனவாலை வளமான வாலுகையாம் அடுப்புதன்னில்
காலையது ஜாமமது நாலதாக கருவான சூதமதை எரிப்பாய்நீயும்
மாலையது சூதமதை எடுத்துப்பார்க்க மகத்தான கடுங்கார சுன்னமாச்சே
6250.
சுன்னமென்றால் சுன்னமது என்னசொல்வேன் சுந்தரனே நாதாக்கள் செய்யும்வேதை
வின்னமது வாராது யிந்தப்போக்கு விருப்பமுடன் செய்வதற்கு மனதுவந்து
அன்னமெனுங் காடியென்ற பழச்சாரப்பா ஆகாகா சித்துமுனி மறைத்தாரங்கே
சொன்னமது முப்பூவால் கைக்குள்ளாச்சு சோறாமல் செய்பவர்க்கு சித்தியாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக