பக்கங்கள்

வெள்ளி, 12 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6231-6240

6231.
ஆச்சென்று விடுகாதே யின்னங்கேளு வப்பனே காலாங்கி சொன்னநீதி
காச்சலென்ற சுன்னமதைத் தானெடுத்து கருவான கல்வமதி லிட்டுமைந்தா
மாச்சலென்ற சிற்றண்டங் கருதானப்பா மகத்தான பிரமக்கல் சுன்னந்தன்னை 
வீச்சுடனே தானரைப்பாய் மடியுமட்டும் வீறான சுன்னமதை பில்லைசெய்யே
6232.
செய்யவே சிறுபில்லை காசதாக செம்மலுடன் ரவியுலர்த்தி சொல்வேன்பாரீர்
துய்யதொரு பில்லைமுகந் தானுலர்ந்து துப்புரவாய் மூசையிட்டு சீலைசெய்து
வையகத்தே தானிருக்கும் கருமமான வளமான பாகமதை யறியாமற்றான்
கைபாகந் தவறாமல் மைந்தாநீயும் கருத்துடனே வுலையில்வைத்து வூதுவாயே
6233.
ஊதவே சுன்னமது வாகுமாகும் உத்தமனே மூசையது வழுகுமட்டும்
நீதமுடன் ஊதிடவே சுன்னமாகும் நிலையான சுன்னமது பிரம்மக்கல்லாம்
தோதமுடன் மூசைதனை யுடைத்துப்பாரு சுந்தரனே சுன்னமது பிரமக்கல்லாம்
சாதமது தான்கொடுக்கும் சுக்கான்கல்லாம் சட்டமுடன் நாதாக்கள் பெருமைபாரே
6234.
பாரேதான் சுன்னமென்ற பிரமக்கல்லை பாங்குடனே பீங்கானிற் பதனம்பண்ணு
நேரேதான் சரக்குக்குக் கேறலாச்சு நெடிதான பிரமக்கல் லென்றசுன்னம்
ஆரோதான் முடிப்பார்க ளப்பாகேளு ஆதியென்ற சுன்னமதை முடியாரப்பா
சீரேதான் சாத்திரத்தின் உளவாராய்ந்து சிறப்புடனே பார்த்துவைத்த சுண்ணமாமே
6235.
சுண்ணமா மின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் சுந்தரனே ரகுபாலா புண்யவானே
வண்ணமுடன் கல்லுப்பு பெரிதாய்க்கொண்டு வளமுடனே படியதுவும் தானெடுத்து
திண்ணமுடன் பாண்டமதில் இட்டுமைந்தா தீர்க்கமுடன் முன்சொன்ன காடிநீரை
நண்ணமுடன் மறுபாண்டந் தன்னிலப்பா நலமுடனே ஜலமதனை படிதான்வாரே
6236.
வார்க்கையிலே முன்சொன்ன காடிநீர்தான் வளமான பாண்டமதில் இட்டுமைந்தா
தீர்க்கமுடன் தான்கலக்க தெளுவிறுத்து தீரமுடன் பாண்டமதை யடுப்பிலேற்றி
ஏர்க்கவே யுப்பதுவும் பூர்க்குமட்டும் எழிலான வுப்பதனைக் காய்ச்சியல்லோ
சேர்க்கவே மறுபடியுங் காடிவிட்டு சிறப்புடனே கலக்கியதை யெடுத்திடாயே
6237.
எடுத்திடவே யிப்படியே பத்துமுறைக்காச்சு எழிலான கல்லுப்பும் குருவுப்பாகும்
கெடுத்திடா வண்ணமது பீங்கான்தன்னில் கிருபையுடன் பதனமது மிகவாய்ச்செய்து
தொடுப்பதற்கு முன்போலே வுப்பைநன்றாய் சுத்தமுடன் சேர்க்கும்வகை விபரங்கேளு
அடுத்துமே முன்சொன்ன கைபாகந்தான் அப்பனே முறைபாடு கூறுவேனே
6238.
கூறவே முப்பென்ற மார்க்கந்தன்னை குவலயத்தில் மாண்பர்களுந் தெளிவதாக
ஆறவே முன்சொன்ன வழலைமார்க்கம் வப்பனே பலமதுவும் எடுத்துக்கொண்டு
மாறவே பிரமமென்ற முப்புதன்னை மார்க்கமுடன் பலமதுவும் எடுத்துக்கொண்டு
தேறவே கல்லுப்புச் சுன்னந்தன்னை தேற்றமுடன் பலமதுவும் ஒன்றாய்க்கூட்டே
6239.
கூட்டியே மூன்றையுந்தான் ஒன்றாய்க்கூட்டி குறிப்புடனே வீரமுடன் புழுகுதானும்
தேட்டமுடன் வார்கனது ரெண்டேயாகும் தெளிவுடனே முன்சொன்ன காடிதன்னை
வாட்டமுடன் தானரைப்பாய் நாலுசாமம் வளமான பில்லையது லகுவாய்ச்செய்து
நீட்டமுடன் ரவிதனிலே காயவைத்து நிஷ்களங்க மானதொரு வகலில்வையே
6240.
அகலான பாண்டமது தன்னில்வைத்து வப்பனே சீலையது வலுவாய்ச்செய்து
பகலான ரவிதனிலே காயப்போடு பாங்குடனே காய்ந்தபின்பு செப்பக்கேளு
நிகலவே கோழியென்ற புடந்தான்போடு நிஷ்களங்க மாகவல்லோ நீறிப்போகும்
புகலவே பற்பமதை பதனம்பண்ணு புகழான மனோன்மணிக்கு பூசைசெய்யே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக