6801.
கூறுவீர் இதிகாச புத்திசொல்லி குவலயத்தில் ஆள்கண்டு பதமுங்கண்டு
தேறியதோர் சிறுபால ரானாலுந்தான் தேற்றமுடன் புத்திமதி மிகவுரைத்து
மீறியே கட்டளைக்கு மஞ்சிடாமல் மிக்கமனது வந்துமல்லோ மதிகங்கூறி
ஆறியே சினமதுவும் மிகவகற்றி வப்பனே நூல்கொடுத்து பதனஞ்சொல்லே
6802.
சொல்லவே புலிப்பாணிக் குண்மைகூறி சோறாமல் மனத்திடமும் நன்றாய்சொல்லி
வெல்லவே வரவுக்குத் தக்கதாக வேதாந்த சின்மயத்தை யோதச்சொல்லி
புல்லவே சாத்திரத்துக் குறுதிசொல்லி புகழான சத்தியங்கள் வாங்கியேதான்
நல்லதொரு சாத்திரத்தைத் தந்தீரானால் நலமாக இருக்குமென்று நவின்றிட்டாரே
6803.
நவின்றதொரு வாக்கதுவும் பிசகாமற்றான் நாதாக்கள் சொல்லதற்கு இடையூறின்றி
குவின்றிடவே புலிப்பாணி புனிதவானே குவலயத்தில் பத்தியுண்டாய் மாண்பர்கண்டு
தவின்றிடவே விதியாளி குணமுங்கண்டு தக்கபடி நூலீய்ந்தால் தருமமாகும்
புவின்றிடவே யுந்தனது மனதுபோலே பூதலத்தில் நடப்பதுவுங் கடாட்சந்தானே
6804.
தானான காலாங்கி நீதிபோலே சட்டமுடன் போகரே ழாயிரத்தை
கோனான வையகத்தில் யானும்பாடி கொற்றவனே யுந்தனுக்கு உபதேசித்தேன்
தேனான சாத்திரத்தை பாதுகாத்து தேசத்தில் கொடுப்பதுவும் உந்தன்பாரம்
பானான கருமிகட்கு கொடுப்பாயானால் பாலகனே பாவம்வந்து எய்தும்பாரே
6805.
பாரேதான் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாங்கான புலிப்பாணி பளிங்குள்ளானே
நேரேதான் அவரவர்கள் மகிமைதன்னை நேர்மையுடன் சொல்லுகிறேன் உண்மையாக
சீரேதான் சித்தரெல்லாம் ஒன்றாய்க்கூடி சிறப்புடனே காலாங்கி நாதர்தம்மை
வீரேதான் சீனபதி தன்னிலேகி விருப்பமுடன் மனதுவந்து வந்திட்டாரே
6806.
வந்தாரே காயாதி கொண்டசித்து வளம்பெரிய சீனபதி மார்க்கந்தன்னை
அந்தமுடன் காலாங்கி சமாதிபக்கல் வற்புதமாய் வெகுகோடி நாதர்தாமும்
சொந்தமுடன் எனதையர் காலாங்கிநாதர் சுடரொளியைக் காணவென்று மனங்களித்து
விந்தையாய் உபதேசம் பெறவேநண்ணி விருப்பமுடன் சமாதியிடம் வந்தார்தானே
6807.
தானான நெடுங்காலஞ் சமாதிருந்த தண்மையுள்ள நாதாக்கள் ரிஷிகள்தாமும்
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் முன்பாக வினயங்கூறி
தேனான மகத்துவங்கள் இதிகாசங்கள் தேற்றமுடன் செய்தல்லோ மேவல்செய்தார்
பானான பரஞ்சுடராம் எந்தன்நாதா பட்சமுடன் அதிசயத்தை கண்டிட்டேனே
6808.
கண்டாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கனகரதி பூஷணமே கல்விவானே
அண்டமதில் ஆகாயந் தன்னிலல்லோ மகாபூதா னந்தநாதர்
உண்டைவில்லு கவுண்டேகும் ஆகாயத்தில் வுத்தமனே யந்தமட்டுஞ் சொல்வேனென்று
கண்டிதமாய்க் காலாங்கி வாக்குந்தந்து கனமுடனே வாசியோகம் நடத்தினாரே
6809.
வாசியைத் தானடத்தி பூதநாதர் வளமான கேசரத்தினம் பரத்தில்
மாசியெனும் மண்டலத்தில் யேகியல்லோ மன்னவனார் மண்டலந்தான் அங்கிருந்து
காசிபதி கடலோரந் தன்னிற்சென்று கனமான சீனபதி யருகில்வந்து
தேசியெனும் வாசியைத்தான் நடத்தியல்லோ தேற்றமுடன் சீனபதி இறங்கினாரே
6810.
இறங்கினார் நாற்பதுநாள் மண்டலந்தான் யெழிலான வாகாசந் தனிலிருந்து
சிறந்ததொரு வாசியைத்தான் நடத்தியல்லோ சிறப்புடனே வையகத்தோர் காணவென்று
பறந்துமே வையகத்தில் இறங்கியேதான் பாங்கான காலாங்கி சமாதிமுன்னே
இறந்ததொரு சவம்போலே விழுந்தாரல்லோ எழிலாக பூதநாத சித்துதானே
கூறுவீர் இதிகாச புத்திசொல்லி குவலயத்தில் ஆள்கண்டு பதமுங்கண்டு
தேறியதோர் சிறுபால ரானாலுந்தான் தேற்றமுடன் புத்திமதி மிகவுரைத்து
மீறியே கட்டளைக்கு மஞ்சிடாமல் மிக்கமனது வந்துமல்லோ மதிகங்கூறி
ஆறியே சினமதுவும் மிகவகற்றி வப்பனே நூல்கொடுத்து பதனஞ்சொல்லே
6802.
சொல்லவே புலிப்பாணிக் குண்மைகூறி சோறாமல் மனத்திடமும் நன்றாய்சொல்லி
வெல்லவே வரவுக்குத் தக்கதாக வேதாந்த சின்மயத்தை யோதச்சொல்லி
புல்லவே சாத்திரத்துக் குறுதிசொல்லி புகழான சத்தியங்கள் வாங்கியேதான்
நல்லதொரு சாத்திரத்தைத் தந்தீரானால் நலமாக இருக்குமென்று நவின்றிட்டாரே
6803.
நவின்றதொரு வாக்கதுவும் பிசகாமற்றான் நாதாக்கள் சொல்லதற்கு இடையூறின்றி
குவின்றிடவே புலிப்பாணி புனிதவானே குவலயத்தில் பத்தியுண்டாய் மாண்பர்கண்டு
தவின்றிடவே விதியாளி குணமுங்கண்டு தக்கபடி நூலீய்ந்தால் தருமமாகும்
புவின்றிடவே யுந்தனது மனதுபோலே பூதலத்தில் நடப்பதுவுங் கடாட்சந்தானே
6804.
தானான காலாங்கி நீதிபோலே சட்டமுடன் போகரே ழாயிரத்தை
கோனான வையகத்தில் யானும்பாடி கொற்றவனே யுந்தனுக்கு உபதேசித்தேன்
தேனான சாத்திரத்தை பாதுகாத்து தேசத்தில் கொடுப்பதுவும் உந்தன்பாரம்
பானான கருமிகட்கு கொடுப்பாயானால் பாலகனே பாவம்வந்து எய்தும்பாரே
6805.
பாரேதான் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாங்கான புலிப்பாணி பளிங்குள்ளானே
நேரேதான் அவரவர்கள் மகிமைதன்னை நேர்மையுடன் சொல்லுகிறேன் உண்மையாக
சீரேதான் சித்தரெல்லாம் ஒன்றாய்க்கூடி சிறப்புடனே காலாங்கி நாதர்தம்மை
வீரேதான் சீனபதி தன்னிலேகி விருப்பமுடன் மனதுவந்து வந்திட்டாரே
6806.
வந்தாரே காயாதி கொண்டசித்து வளம்பெரிய சீனபதி மார்க்கந்தன்னை
அந்தமுடன் காலாங்கி சமாதிபக்கல் வற்புதமாய் வெகுகோடி நாதர்தாமும்
சொந்தமுடன் எனதையர் காலாங்கிநாதர் சுடரொளியைக் காணவென்று மனங்களித்து
விந்தையாய் உபதேசம் பெறவேநண்ணி விருப்பமுடன் சமாதியிடம் வந்தார்தானே
6807.
தானான நெடுங்காலஞ் சமாதிருந்த தண்மையுள்ள நாதாக்கள் ரிஷிகள்தாமும்
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் முன்பாக வினயங்கூறி
தேனான மகத்துவங்கள் இதிகாசங்கள் தேற்றமுடன் செய்தல்லோ மேவல்செய்தார்
பானான பரஞ்சுடராம் எந்தன்நாதா பட்சமுடன் அதிசயத்தை கண்டிட்டேனே
6808.
கண்டாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கனகரதி பூஷணமே கல்விவானே
அண்டமதில் ஆகாயந் தன்னிலல்லோ மகாபூதா னந்தநாதர்
உண்டைவில்லு கவுண்டேகும் ஆகாயத்தில் வுத்தமனே யந்தமட்டுஞ் சொல்வேனென்று
கண்டிதமாய்க் காலாங்கி வாக்குந்தந்து கனமுடனே வாசியோகம் நடத்தினாரே
6809.
வாசியைத் தானடத்தி பூதநாதர் வளமான கேசரத்தினம் பரத்தில்
மாசியெனும் மண்டலத்தில் யேகியல்லோ மன்னவனார் மண்டலந்தான் அங்கிருந்து
காசிபதி கடலோரந் தன்னிற்சென்று கனமான சீனபதி யருகில்வந்து
தேசியெனும் வாசியைத்தான் நடத்தியல்லோ தேற்றமுடன் சீனபதி இறங்கினாரே
6810.
இறங்கினார் நாற்பதுநாள் மண்டலந்தான் யெழிலான வாகாசந் தனிலிருந்து
சிறந்ததொரு வாசியைத்தான் நடத்தியல்லோ சிறப்புடனே வையகத்தோர் காணவென்று
பறந்துமே வையகத்தில் இறங்கியேதான் பாங்கான காலாங்கி சமாதிமுன்னே
இறந்ததொரு சவம்போலே விழுந்தாரல்லோ எழிலாக பூதநாத சித்துதானே