6601.
புத்தியுடன் சரக்கதனை தானெடுத்து பூபாலா பின்னுமந்தக் கல்வமிட்டு
பத்தியுடன் கருந்துளசி சாறுவிட்டு பாலகனே நாற்சாம மறைத்தபின்பு
சத்தியமாய் பில்லையது லகுவாய்ச்செய்து சாங்கமுடன் ரவிதனிலே காயவைத்து
முத்திபெற சில்லிட்டுச் சீலைசெய்து முனையான ஜோதியென்ற புடந்தான்போடே
6602.
போடேதான் புடமதுவுங் கோழியாக பொங்கமுடன் இப்படியே பத்துமுறைபோடு
நாடேதான் செந்தூரம் நவிலப்போமோ நாதாந்த சித்துமுனி சொல்லாவண்ணம்
கூடநீ செந்தூரந் தனையெடுத்து கொற்றவனே கல்வமதிலிட்டு மைந்தா
ஆடேதான் குமரியின்தன் சாற்றினாலே வப்பனே தானரைப்பாய் சாமம்நாலே
6603.
நாலான சாமமது வரைத்தபின்பு நலமான பில்லையது லகுவாய்ச்செய்து
பாலான ரவிதனிலே காயப்போடு பாலகனே காய்ந்தபின்பு சில்லிசெய்து
மாலான சீலையது செய்தபின்பு மகத்தான மணல்மறைவிற் புடத்தைப்போடு
சூலான புடமாறி எடுத்துப்பாரு துப்புரவாய்ச் செந்தூரஞ் சொல்லொண்ணாதே
6604.
ஒண்ணாது செந்தூரம் என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் கூறவில்லை
மண்ணான சரக்கதுவும் பிரிதிவிதன்னால் மகத்தான காரசார மதுவேயாகி
தண்ணமுடன் வேதைமுகங் கோடாகோடி தாக்கிடவே சிமிட்டுவித்தை யென்னலாகும்
விண்ணான நாதாக்கள் காணாவித்தை விருப்பமுடன் உந்தனுக்கு ஓதினேனே
6605.
ஓதினேன் செந்தூரந் தனையெடுத்து வுத்தமனே வெள்ளிதனில் நூற்றுக்கொன்று
நீதியுடன் தானுருக்கிக் குருவொன்றீய நிஷ்களங்க மானதொரு வெள்ளிதானும்
ஆதியென்ற பஞ்சபூத சரக்கினாலே வப்பனே வர்ணமது மிகவேயாகி
பாதிமதி சடையணிந்த தம்பிரானால் பலிக்குமடா வாதவித்தை ஜொலிக்கும்பாரே
6606.
ஜொலிக்குமே மாற்றதுவும் என்னசொல்வேன் சோராமல் வயதுபன் னிரண்டதாகும்
ஒலிக்குமே தங்கமதை என்னசொல்வேன் ஓகோகோ சித்துமுனி அறியாத்தங்கம்
பலிக்குமே சிவயோக மாண்பருக்கு பாவியென் மாண்பருக்கு பலியாதப்பா
எலித்தலையில் கோடாரித்தான் விழுந்தாற்போல எளிதான கைமுறைகள் வினோதந்தானே
6607.
தானான சுயத்தங்கம் பிறவித்தங்கம் தாக்கான சிவயோகிச் செய்யுந்தங்கம்
கோனான காலாங்கி நாதர்சொன்ன குருவான வாக்கதுவும் பொய்யாதப்பா
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேற்றமுடன் பலவிதமாய் நூலைப்பாடி
மானான மாண்பர்களும் அறியாமற்றான் மயக்கமுடன் மருட்கடலில் மழுந்திட்டாரே
6608.
மருட்டான சிடிகையென்ற வேதைதன்னை மார்க்கமுடன் அறியாமல் மாண்பர்தாமும்
இருட்டுவழி யேகியல்லோ பாலரெல்லாம் எழிலான கைமுறையை பாராமற்றான்
பொருளிருக்கு மிடமதுவும் தோன்றாவண்ணம் பொங்கமுடன் மதியீன மயக்கத்தாலே
குருட்டுவிழிப் பூனையது விட்டம்பாய்ந்த குறிப்பான கதைபோலே மேவலாச்சே
6609.
மேவலா மின்னமொரு மேன்மைகேளு மேதினியில் கீர்த்திபெற்ற புண்ணியவானே
ஆவலுடன் உந்தமக்கு மனதுவந்து வப்பனே காலாங்கிப் பதம்பணிந்து
சாவதுவும் என்றைக்கும் நிட்சயந்தான் சாங்கமுடன் பலதொழிலும் கற்றுமென்ன
போவது மெய்யல்லால் இருப்பதில்லை பொங்கமுடன் வையகத்து வாழ்க்கையாமே
6610.
வாழ்க்கையாம் வெகுகால மிருப்போமென்னும் வண்மையுடன் பலநூலும் வுளவாராய்ந்து
தாட்கமல பதாம்புயத்தை மனதிலுன்னி தகமையுள்ள காயாதி கற்பங்கொண்டு
வீட்கமுடன் நெடுங்காலஞ் சமாதிசென்று விருதாவாய் மறுபடியும் வந்துமென்ன
பாழ்க்கமுடன் பவக்கடலை விட்டகற்றி பாருலகில் சுந்தரம்போ லிருப்பீர்தானே
புத்தியுடன் சரக்கதனை தானெடுத்து பூபாலா பின்னுமந்தக் கல்வமிட்டு
பத்தியுடன் கருந்துளசி சாறுவிட்டு பாலகனே நாற்சாம மறைத்தபின்பு
சத்தியமாய் பில்லையது லகுவாய்ச்செய்து சாங்கமுடன் ரவிதனிலே காயவைத்து
முத்திபெற சில்லிட்டுச் சீலைசெய்து முனையான ஜோதியென்ற புடந்தான்போடே
6602.
போடேதான் புடமதுவுங் கோழியாக பொங்கமுடன் இப்படியே பத்துமுறைபோடு
நாடேதான் செந்தூரம் நவிலப்போமோ நாதாந்த சித்துமுனி சொல்லாவண்ணம்
கூடநீ செந்தூரந் தனையெடுத்து கொற்றவனே கல்வமதிலிட்டு மைந்தா
ஆடேதான் குமரியின்தன் சாற்றினாலே வப்பனே தானரைப்பாய் சாமம்நாலே
6603.
நாலான சாமமது வரைத்தபின்பு நலமான பில்லையது லகுவாய்ச்செய்து
பாலான ரவிதனிலே காயப்போடு பாலகனே காய்ந்தபின்பு சில்லிசெய்து
மாலான சீலையது செய்தபின்பு மகத்தான மணல்மறைவிற் புடத்தைப்போடு
சூலான புடமாறி எடுத்துப்பாரு துப்புரவாய்ச் செந்தூரஞ் சொல்லொண்ணாதே
6604.
ஒண்ணாது செந்தூரம் என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் கூறவில்லை
மண்ணான சரக்கதுவும் பிரிதிவிதன்னால் மகத்தான காரசார மதுவேயாகி
தண்ணமுடன் வேதைமுகங் கோடாகோடி தாக்கிடவே சிமிட்டுவித்தை யென்னலாகும்
விண்ணான நாதாக்கள் காணாவித்தை விருப்பமுடன் உந்தனுக்கு ஓதினேனே
6605.
ஓதினேன் செந்தூரந் தனையெடுத்து வுத்தமனே வெள்ளிதனில் நூற்றுக்கொன்று
நீதியுடன் தானுருக்கிக் குருவொன்றீய நிஷ்களங்க மானதொரு வெள்ளிதானும்
ஆதியென்ற பஞ்சபூத சரக்கினாலே வப்பனே வர்ணமது மிகவேயாகி
பாதிமதி சடையணிந்த தம்பிரானால் பலிக்குமடா வாதவித்தை ஜொலிக்கும்பாரே
6606.
ஜொலிக்குமே மாற்றதுவும் என்னசொல்வேன் சோராமல் வயதுபன் னிரண்டதாகும்
ஒலிக்குமே தங்கமதை என்னசொல்வேன் ஓகோகோ சித்துமுனி அறியாத்தங்கம்
பலிக்குமே சிவயோக மாண்பருக்கு பாவியென் மாண்பருக்கு பலியாதப்பா
எலித்தலையில் கோடாரித்தான் விழுந்தாற்போல எளிதான கைமுறைகள் வினோதந்தானே
6607.
தானான சுயத்தங்கம் பிறவித்தங்கம் தாக்கான சிவயோகிச் செய்யுந்தங்கம்
கோனான காலாங்கி நாதர்சொன்ன குருவான வாக்கதுவும் பொய்யாதப்பா
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேற்றமுடன் பலவிதமாய் நூலைப்பாடி
மானான மாண்பர்களும் அறியாமற்றான் மயக்கமுடன் மருட்கடலில் மழுந்திட்டாரே
6608.
மருட்டான சிடிகையென்ற வேதைதன்னை மார்க்கமுடன் அறியாமல் மாண்பர்தாமும்
இருட்டுவழி யேகியல்லோ பாலரெல்லாம் எழிலான கைமுறையை பாராமற்றான்
பொருளிருக்கு மிடமதுவும் தோன்றாவண்ணம் பொங்கமுடன் மதியீன மயக்கத்தாலே
குருட்டுவிழிப் பூனையது விட்டம்பாய்ந்த குறிப்பான கதைபோலே மேவலாச்சே
6609.
மேவலா மின்னமொரு மேன்மைகேளு மேதினியில் கீர்த்திபெற்ற புண்ணியவானே
ஆவலுடன் உந்தமக்கு மனதுவந்து வப்பனே காலாங்கிப் பதம்பணிந்து
சாவதுவும் என்றைக்கும் நிட்சயந்தான் சாங்கமுடன் பலதொழிலும் கற்றுமென்ன
போவது மெய்யல்லால் இருப்பதில்லை பொங்கமுடன் வையகத்து வாழ்க்கையாமே
6610.
வாழ்க்கையாம் வெகுகால மிருப்போமென்னும் வண்மையுடன் பலநூலும் வுளவாராய்ந்து
தாட்கமல பதாம்புயத்தை மனதிலுன்னி தகமையுள்ள காயாதி கற்பங்கொண்டு
வீட்கமுடன் நெடுங்காலஞ் சமாதிசென்று விருதாவாய் மறுபடியும் வந்துமென்ன
பாழ்க்கமுடன் பவக்கடலை விட்டகற்றி பாருலகில் சுந்தரம்போ லிருப்பீர்தானே