பக்கங்கள்

திங்கள், 8 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6641-6650

6641.
அசையாது சோதனைக்கு வுறுதிவெள்ளி வப்பனே நாதாக்கள் நூலறிந்து 
வகையொன்றும் நேராமல் தாள்பணிந்து வஷ்டாங்க யோகநிலைத் தன்னிற்சென்று
திசையெட்டுங் குளிகையது யானுங்கொண்டு திருவிளையாள் மனோன்மணியாள் போற்றிசெய்து
இசையுடனே யுந்தமக்கு இந்தபாகம் இன்பமுடன் தான்கொடுத்த வேதையாச்சே
6642.
ஆச்சப்பா கைபாகஞ் செய்பாகந்தான் வப்பனே வினயமென்ற பதமறிந்து
மூச்சடங்கி நெடுங்கால மிருந்தசித்து முனையான பாகமதைக் கைமறைத்தார்
பாச்சலுடன் அடியேனுங் குளிகைகொண்டு பாருலகைச் சுத்தியல்லோ மனதுவந்து
வீச்சுடனே யுந்தமக்கு ஓதிவைத்தேன் விட்டகுறை இருந்ததினால் வாய்க்கலாச்சே
6643.
வாய்க்கவே முன்செய்த புண்ணியத்தால் வளமான வினயமென்ற வெள்ளிப்போக்கு
தாய்க்கமலந் தாள்பணிந்த புண்ணியத்தால் சட்டமுடன் உந்தமக்குக் காணலாச்சு
பேய்பிடித்து மாண்பரெல்லாம் வாதந்தேடி பேரான நிலைகடந்து பதிகடந்து
மாய்கையெனும் சமுசார மிட்டிழந்து மாடிழந்து வீடிழந்து மாண்டார்தாமே
6644.
மாண்டாரே வையகத்தில் கோடிமாண்பர் மானிலத்தில் கணக்குண்டோ லக்கோயில்லை
வேண்டியதோர் கருமான மனேகங்கொண்டு விட்டகுறை யில்லாமல் விழலாய்ப்போனார்
காண்டவம்போல் பூர்வீக புண்ணியத்தால் தற்பரனே யுந்தமக்கு இந்தபாகம்
ஆண்டகையாள் மனோன்மணியாள் கடாட்சத்தாலே வப்பனே யுந்தமக்கு வந்தவாறே
6645.
வாறான யின்னமொரு போக்குசொல்வேன் வளமையுள்ள புலிப்பாணி மன்னாகேளும்
கூறான வெள்வங்கம் பலந்தானொன்று கொற்றவனே சூதமது பலந்தான்பாதி
நீறான பாஷாண சுன்னமப்பா நெடிதான மூசையிட்டு வுருக்கியல்லோ
பேறுடைய பற்பமது குன்றியப்பா பெருமையுடன் உருக்குமுகந் தன்னில்தாக்கே
6646.
தாக்கவே வெள்வங்கம் உருகியல்லோ தகமையுள்ள நீரதனை யுரிந்துகொள்ளும்
தேக்கலென்ற வெள்ளீய வூட்டாங்காய்ப்பு தெளிவான நீரதுவும் மருகியல்லோ
நோக்கமுடன் பிறவியென்ற வெள்ளியாச்சு நெடிதான வங்கமதற் கசையாதப்பா
ஏக்கமது கொள்ளாமல் இந்தபாகம் எளிதாகச் செய்வதற்கு சித்தியாமே
6647.
சித்தியாம் வெள்ளீயம் பிரயோகித்தால் சீரான சமுசாரிக் கானவித்தை
முத்திபெற வழியுண்டு ஞானமுண்டு மூதுலகில் நீயுமொரு சித்தனாவாய்
நித்தியமும் சிவானந்த நிலையில்நின்று நீதியுடன் சிவயோகந் தன்னைப்பாரு
சத்தியவான் வார்த்தையப்பா பொய்யாதப்பா சட்டமுடன் காலாங்கி சொன்னவாக்கே
6648.
சொன்னதொரு புலிப்பாணி மைந்தாகேளு சொகுசுள்ள கண்மணியே தீராமாரா
நன்னயமாய் பலநூலுங் கற்றுணர்ந்த நாதாந்த சித்தொளிவை நவில்வேனப்பா
உன்னிதமாய் நாகமென்ற லோகந்தன்னை வுற்பனமாய்த் தானெடுத்து வுண்மைபாரு
பன்னவே நாகமது தானெடுத்து பாலகனே உருக்கியல்லோ சாய்த்திடாயே
6649.
சாய்க்கவே இலுப்பைநெய் தன்னிலப்பா சட்டமுடன் சாரமதைக் கிராசமீய்ந்து
வாய்க்கவே பதினோரு முறைதானப்பா வளமுடனே யுருக்கிமிகச் சாய்த்தாயானால்
மாய்த்துமே சட்டையது சவளையாகி மகத்தாக நாகமது வொருகண்ணாகி
பேய்ந்ததொரு மழையினால் மண்கசடான பேரான பிரீதிவி போலிருக்கும்பாரே
6650.
பாரப்பா புலிப்பாணி யின்னங்கேளு பாகமுடன் முனசெய்த நாகந்தன்னை 
நேரப்பா கரிவங்கந் தானுங்கூட்டி நேர்மையுடன் தானுருக்கிச் செப்பக்கேளிர்
ஆரப்பா தேன்வளைய லென்றபூநீர் வப்பனே தானுருக்கி கவுவிட்டாட்டி
தீரப்பா நாகமதற் கங்கிபூட்டி திறமுடனே ஏழுவகைச் சீலைசெய்யே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக