பக்கங்கள்

திங்கள், 8 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6611-6620

6611.
சுந்தரனே காவிக ஷாயம்பூண்டு சுத்தமுடன் இருப்பதுவும் யோகியல்லோ
தந்திரமாய் அஷ்டசித்தி யாடியென்ன தாரணியில் யோகமது கொண்டுமென்ன
அந்தமெல் லாம்புகழ ஞானங்கொண்டு அவனிதனில் பொய்வேஷங் கொண்டுமென்ன
மந்திரத்தில் மாங்காய் விழுங்கதையைப்போல மானிலத்தில் வெகுபேர்கள் மயங்குவாரே
6612.
மயக்கவே எந்தனது மணியேகேளும் மாசற்ற நவலோகச் செந்தூரந்தான்
தியக்கமது வாராமல் லோகந்தன்னை தீர்க்கமுடன் முறைபாடு சொல்வேன்யானும்
நயமுடைய தங்கமது ஒன்றேயாகும் நலமான காரீயம் ஒன்றேகாலாம்
அயமதுவும் விராகனது ஒன்றேயாகும் வப்பனே நாகமது ஆறதாமே
6613.
ஆறான செம்பதுவும் ஒன்றேயாகும் வப்பனே குடவனது ஒன்றேயாகும்
காரான வெள்ளியது ரண்டேயாகும் கருவான வெள்வங்க மொன்றேயாகும்
கூறான வெட்டுருக்கு ஒன்றேயாகும் குறிப்பான நவலோக மொன்றாய்க்கூட்டி
சேறான லோகமெலாம் ஒன்றாய்ச்சேர்த்து செப்புகிறேன் வரிசைபெற வண்மைகேளே
6614.
வண்மையாய் இடைகண்டு இனமுங்கண்டு வகுப்பான சேர்வையது யானுங்கண்டு
தண்மைபெற நாதாக்கள் தாள்வணங்கி தாமுரைத்த முறைபாடு வழிபாடெல்லாம்
உண்மையுடன் தாமறிந்து புத்திவானை வுகமையுள்ள லோகமதைக் கண்டாராய்ந்து
திண்ணமுடன் மூசையிட்டுச் சீலைசெய்து தீர்க்கமுடன் சரவுலையில் வூதிடாயே
6615.
ஊதவே நவலோக மொன்றாய்ச்சேர்ந்து வுத்தமனே வுருகியல்லோ களங்கமாகும்
நீதமுடன் களங்கெடுத்து வுடைத்துமைந்தா நிஷ்களங்க மாகவல்லொ கல்வமிட்டு
சூதமது யீரிடைக்கு ஒன்றேசேர்த்து சுத்தமுடன் கெந்தியது ரெட்டிப்பாக
வாதமது பலிப்பதற்கு வருண்மைந்தாகேள் வளம்பெறவே தாளகமும் பலந்தான்கூட்டே
6616.
கூட்டியே கண்டரது கால்தான்சேரு குணமான கெவுரியது களஞ்சிரெண்டு
நீட்டமுடன் மனோசிலையுங் காலதாக நெடிதான வீரமது களஞ்சிநாலு
தாட்டிகமாய்த் துத்தமது களஞ்சிரெண்டு தாக்கான பூரமது களஞ்சியாறு
வாட்டமுடன் இடைகண்டு கல்வமிட்டு வளம்பெறவே தானரைக்க வகையைக்கேளே
6617.
வகையான ஆறுவகை ஜெயநீர்தன்னால் வளம்பெறவே தானறைப்பாய் எட்டுசாமம்
துகையான சரக்கெல்லா மொன்றாய்க்கூட்டி தோராமல் தானரைத்து பில்லைதட்டி
புகையாம லிருப்பதற்கு ரவியில்வைத்து புகழான சீலையது வலுவாய்ச்செய்து
பகையான புடமதுவும் மண்ணிலப்பா பாங்குபெற கோழியென்ற புடந்தான்போடே
6618.
புடமதுவுந் தீயாறி சென்றபின்பு பத்தியுள்ள பூபாலா யுரைப்பேனப்பா
தடங்கண்டு வழிகண்டு தண்மையோடு சட்டமுடன் மணலதனை நீக்கிமைந்தா
அடலான வாசல்தனை யெடுத்துப்பாரு வப்பனே செந்தூரம் நீலவர்ணம்
மடலான செந்தூரந் தனையெடுத்து மன்னவனே பின்னுமந்த கல்வம்பூட்டே
6619.
பூட்டியே சரக்கெல்லாங் கல்வமிட்டு புத்தியுள்ள கண்மணியே ஜெயநீரப்பா
தாட்டிகமாய் ஆறுவகை ஜெயநீர்தன்னால் சட்டமுடன் தானரைப்பாய்ப் பின்னுமல்லோ
வாட்டமுடன் தானரைத்து பில்லைதட்டி வளமுடனே ரவிதனிலே காயவைத்து
நீட்டமுடன் சில்லிட்டுச் சீலைசெய்து நீதியுடன் மண்மறைவிற் புடந்தான்தாக்கே
6620.
தாக்கவே கோழியது புடமதாக்கி தண்மையுள்ள பூபாலா போட்டாயானால் 
நோக்கமுடன் வோடதனை யுடைத்துப்பாரு வுத்தமனே செந்தூர மென்னசொல்வேன்
ஆக்கமுடன் செந்தூரம் அருணன்போலாம் வப்பனே நாதாக்கள் கூறவில்லை
வாக்கதுவும் பொய்யாது வருண்மைந்தாகேள் வண்மைபெற செந்தூர வேதைதானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக