6201.
கற்பமென்ற நத்தையது யாதென்றாக்கால் கருவான பிரிதிவினில் வளர்ந்தபிண்டம்
சொற்பமென்று நினையாதே துய்யபாலா துப்புரவாய் பிரிதிவினில் வளர்ந்தசொர்ணம்
விற்பனர்கள் ராஜாதி யோகிமாண்பர் விருப்பமுடன் கொண்டருளும் காயகற்பம்
துப்புரவாய் இருந்தோர்க்கு ஒன்றுமில்லை துறைகோடி வரைகோடி கற்பமாமே
6202.
வரையான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வளமையுள்ள புலிப்பாணி இந்திரகோபா
திரைமரைவு நேராமல் முப்புமார்க்கம் செப்புகிறேன் உந்தமக்கு புனிதவானே
முறையான வழிபாடு முன்னந்தம் முனையான சுருக்கமது இதிலடக்கம்
குறையாது சிடிகையென்ற வேதையப்பா குவலயத்தில் சித்துமுனி சொல்வார்தானே
6203.
தானான மனோன்மணியாள் கிருபையாலும் தாக்கான காலாங்கிக் கடாட்சத்தாலும்
தேனான முப்பூவின் வளமைதன்னை தேற்றமுடன் வெளியாங்க மாகச்சொல்வேன்
பானான முப்பூவை யெடுக்குமார்க்கம் பாலகனே முறைபாடு வழிபாடாகும்
மானான பங்குனியாம் பருவந்தன்னில் மார்க்கமுடன் அமாவாசை பருவந்தானே
6204.
பருவமாம் வடக்குவெகு தூரமப்பா பாங்கான வளர்பூமி தன்னிற்சென்று
உருவுடனே நடுச்சாம வேளைதன்னில் வுத்தமனே மனோன்மணியை மனதிலுன்னி
குருவான பூநீரை யெடுப்பதற்கு கொற்றவனே வெடிகாலந் தன்னிலப்பா
பருவமுடன் பூர்க்குமந்த முப்பூதன்னை பட்சமுடன் தானெடுத்து வரையக்கேளே
6205.
கேளேதான் முப்பூவென்ற பூநீர்தன்னை கவனமுடன் பீங்கானிற் பதனம்பண்ணு
நாளேதான் போகாமல் குருமுடிக்கும் நலமாகக் கைபாகஞ் சொல்வேனப்பா
பாளேதான் போகாமல் பூநீர்தன்னை பாங்கான நிலமதனிற் சொல்லக்கேளு
ஆளேதான் பூநீர்க ளெடுத்தபூமி வதிலிருக்கும் மர்மமதை யறைவேன்பாரே
6206.
பாரேதான் வோராளு மட்டமாக பான்மையுடன் குழியதுதான் தோண்டும்போது
நேரேதான் பிரமமென்ற கல்தானப்பா நேர்மையுடன் தானிருக்கும் நிகலக்கேளு
தீரேதான் பிரமமென்ற சுக்கான்கல்லை தீரமுடன் தானெடுத்து சொல்லக்கேளு
சேரேதான் கல்லதனைப் பதனம்பண்ணு செயலான பாக்கியமும் அனேகமுண்டே
6207.
உண்டான யின்னமொரு மர்மஞ்சொல்வேன் வுத்தமனே முப்பூவின் மார்க்கமப்பா
திண்டான கல்லுப்பு வேணமட்டும் திரமுடனே தானெடுத்து புகலக்கேளும்
வண்மையுடன் கல்லுப்பைப் பதனம்பண்ண வாகுடனே போகும்வகை வண்மைபாரீர்
வண்பாக மூன்றையுந்தான் முடிப்பதற்கு நலமான மும்மூர்த்தி சொரூபந்தானே
6208.
தானான பழச்சாறு என்றமார்க்கம் தன்மையுடன் முடிப்பதற்கு பருவஞ்சொல்வேன்
கோனான குருவையென்ற நெல்தானப்பா கொற்றவனே அவிக்காமல் தானெடுத்து
பானான வரிசியது படிதானான்கு பாலகனே தானளந்து வரிசைபாரீர்
மானான புதுப்பாண்டந் தன்னில்தானும் மார்க்கமுடன் தான்சமைக்கும் வகைதான்கேளே
6209.
வகையான வரிசியது பொங்கியேதான் வண்மையுடன் தானிறக்கி யாரப்போடு
தொகையுடனே மறுபாண்டந் தன்னிலிட்டு தோறாமல் ஜலமதுவும் சோடசந்தான்
முகையுடனே பாணியென்ற தண்ணீர்தன்னை முசியாமல் தான்காய்ச்சி இறக்கிக்கொண்டு
பகையான வரிசியென்ற சாரந்தன்னில் பக்குவமாய் நிலம்விட்டு மூடக்கேளே
6210.
மூடவே ரவியென்ற வெயில்தன்னில் முனையான காடியென்ற பாண்டந்தன்னை
நீடியே நாள்தோறும் அருணன்முன்னில் நிலையான பாண்டமதை வெயிலில்வைத்து
சாடியென்ற பாண்டமதில் ஜலமுந்தானும் தாக்கான ரவியினிலே சுண்டுமட்டும்
கூடியதோர் ஜலமதனைக் காய்ச்சிமைந்தா கொற்றவனே குறைவுக்கு விட்டிடாயே
கற்பமென்ற நத்தையது யாதென்றாக்கால் கருவான பிரிதிவினில் வளர்ந்தபிண்டம்
சொற்பமென்று நினையாதே துய்யபாலா துப்புரவாய் பிரிதிவினில் வளர்ந்தசொர்ணம்
விற்பனர்கள் ராஜாதி யோகிமாண்பர் விருப்பமுடன் கொண்டருளும் காயகற்பம்
துப்புரவாய் இருந்தோர்க்கு ஒன்றுமில்லை துறைகோடி வரைகோடி கற்பமாமே
6202.
வரையான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வளமையுள்ள புலிப்பாணி இந்திரகோபா
திரைமரைவு நேராமல் முப்புமார்க்கம் செப்புகிறேன் உந்தமக்கு புனிதவானே
முறையான வழிபாடு முன்னந்தம் முனையான சுருக்கமது இதிலடக்கம்
குறையாது சிடிகையென்ற வேதையப்பா குவலயத்தில் சித்துமுனி சொல்வார்தானே
6203.
தானான மனோன்மணியாள் கிருபையாலும் தாக்கான காலாங்கிக் கடாட்சத்தாலும்
தேனான முப்பூவின் வளமைதன்னை தேற்றமுடன் வெளியாங்க மாகச்சொல்வேன்
பானான முப்பூவை யெடுக்குமார்க்கம் பாலகனே முறைபாடு வழிபாடாகும்
மானான பங்குனியாம் பருவந்தன்னில் மார்க்கமுடன் அமாவாசை பருவந்தானே
6204.
பருவமாம் வடக்குவெகு தூரமப்பா பாங்கான வளர்பூமி தன்னிற்சென்று
உருவுடனே நடுச்சாம வேளைதன்னில் வுத்தமனே மனோன்மணியை மனதிலுன்னி
குருவான பூநீரை யெடுப்பதற்கு கொற்றவனே வெடிகாலந் தன்னிலப்பா
பருவமுடன் பூர்க்குமந்த முப்பூதன்னை பட்சமுடன் தானெடுத்து வரையக்கேளே
6205.
கேளேதான் முப்பூவென்ற பூநீர்தன்னை கவனமுடன் பீங்கானிற் பதனம்பண்ணு
நாளேதான் போகாமல் குருமுடிக்கும் நலமாகக் கைபாகஞ் சொல்வேனப்பா
பாளேதான் போகாமல் பூநீர்தன்னை பாங்கான நிலமதனிற் சொல்லக்கேளு
ஆளேதான் பூநீர்க ளெடுத்தபூமி வதிலிருக்கும் மர்மமதை யறைவேன்பாரே
6206.
பாரேதான் வோராளு மட்டமாக பான்மையுடன் குழியதுதான் தோண்டும்போது
நேரேதான் பிரமமென்ற கல்தானப்பா நேர்மையுடன் தானிருக்கும் நிகலக்கேளு
தீரேதான் பிரமமென்ற சுக்கான்கல்லை தீரமுடன் தானெடுத்து சொல்லக்கேளு
சேரேதான் கல்லதனைப் பதனம்பண்ணு செயலான பாக்கியமும் அனேகமுண்டே
6207.
உண்டான யின்னமொரு மர்மஞ்சொல்வேன் வுத்தமனே முப்பூவின் மார்க்கமப்பா
திண்டான கல்லுப்பு வேணமட்டும் திரமுடனே தானெடுத்து புகலக்கேளும்
வண்மையுடன் கல்லுப்பைப் பதனம்பண்ண வாகுடனே போகும்வகை வண்மைபாரீர்
வண்பாக மூன்றையுந்தான் முடிப்பதற்கு நலமான மும்மூர்த்தி சொரூபந்தானே
6208.
தானான பழச்சாறு என்றமார்க்கம் தன்மையுடன் முடிப்பதற்கு பருவஞ்சொல்வேன்
கோனான குருவையென்ற நெல்தானப்பா கொற்றவனே அவிக்காமல் தானெடுத்து
பானான வரிசியது படிதானான்கு பாலகனே தானளந்து வரிசைபாரீர்
மானான புதுப்பாண்டந் தன்னில்தானும் மார்க்கமுடன் தான்சமைக்கும் வகைதான்கேளே
6209.
வகையான வரிசியது பொங்கியேதான் வண்மையுடன் தானிறக்கி யாரப்போடு
தொகையுடனே மறுபாண்டந் தன்னிலிட்டு தோறாமல் ஜலமதுவும் சோடசந்தான்
முகையுடனே பாணியென்ற தண்ணீர்தன்னை முசியாமல் தான்காய்ச்சி இறக்கிக்கொண்டு
பகையான வரிசியென்ற சாரந்தன்னில் பக்குவமாய் நிலம்விட்டு மூடக்கேளே
6210.
மூடவே ரவியென்ற வெயில்தன்னில் முனையான காடியென்ற பாண்டந்தன்னை
நீடியே நாள்தோறும் அருணன்முன்னில் நிலையான பாண்டமதை வெயிலில்வைத்து
சாடியென்ற பாண்டமதில் ஜலமுந்தானும் தாக்கான ரவியினிலே சுண்டுமட்டும்
கூடியதோர் ஜலமதனைக் காய்ச்சிமைந்தா கொற்றவனே குறைவுக்கு விட்டிடாயே