6251.
சித்தியாம் பஞ்சபூத சரக்கைத்தானும் சிறப்புடனே தானெடுத்து செப்பக்கேளீர்
வெத்தியுடன் முப்பூவை சரக்குபாதி வேகமுடன் காடியின்தன் பழச்சாற்றாலே
சுத்தியுடன் தானரைத்து பில்லைசெய்து துப்புரவாய் ரவிதனிலே காயப்போடு
சுத்தியுடன் வோட்டிலிட்டு சீலைசெய்து சாங்கமுடன் புடமதுவுங் கோழிதானே
6252.
தானான கோழியது புடமதாக தண்மையுடன் ஆறினபின் னெடுத்துப்பாரு
கோனான குருசொன்ன வாக்குபோலே கொற்றவனே பற்பமது தவளம்போலாம்
மானான பற்பமதை எடுத்துமைந்தா மகத்தான சீசாவில் பதனம்பண்ணு
பானான ரவிமதியில் தாக்கவல்லோ பாண்மையுடன் சொல்லுகிறேன் பண்பாய்த்தானே
6253.
பண்பான வெள்ளிசெம்பில் பத்துக்கொன்னு பாங்குடனே பற்பமதை யொன்றுதாக்க
நண்பான மாற்றதுவும் ஏழதாகும் நலமான புடமதுவுக் கேகாவர்ணம்
திண்பான பட்டசெம்பு ஆறுவெள்ளி தீர்க்கமுடன் தான்கொடுக்க மாற்றெட்டாகும்
உண்மையுடன் தங்கமது நாலுக்கொன்று வுத்தமனே சேர்க்க நலமாகும்பாரே
6254.
பாரேதான் அவமதுவும் ஒன்பதாகும் பாங்கான புடத்தங்கம் பிறவித்தங்கம்
சீரேதான் பஞ்சமுகங் கருத்துக்காணும் சிறப்புடனே மறைத்துவைத்தார் சித்துதாமும்
நேரேதான் சரக்கு வறுபத்துநான்கு நேர்மையுடன் முன்சொன்ன முப்பூவாலே
வீரேதான் சுன்னமென்ற முப்பூவாலே விண்ணுலகும் மண்ணுலகும் காணலாமே
6255.
காணலாம் முப்பூவால் அனந்தம்போக்கு காசினியில் நாதாக்கள் ஆடுங்கூத்து
பூணவே சிவயோகி சித்தருக்கு புகட்டவில்லை இந்தவழி முப்பூ மார்க்கம்
தோணவே கைமுறையாய் எடுத்துபாகம் துப்புரவாய் வையகத்து மாண்பருக்கு
வேணதொரு கருவிகர ணாதியந்தம் விருப்பமுடன் பாடிவைத்த நுண்மைதானே
6256.
பாடினேன் முப்பூவின் வழலைமார்க்கம் பாருலகில் சகலசித்து மாடும்பாரு
நீடியதோர் முப்பூவைக் குன்றிவீதம் நீதியுடன் மண்டலந்தான் கொண்டாயானால்
வாடியதோர் திருமேனி சடலந்தானும் வண்மையுடன் காயாதி கற்பத்தாலே
கூடியதோர் தேகமது சட்டைதள்ளும் குணமான முப்பூவின் காட்சிகேளே
6257.
காட்சியாம் முப்பூவைக் கொண்டபேர்க்கு காசினியில் நரைதிரையும் இல்லையப்பா
மாட்சியுடன் நெடுங்கால மிருக்கலாகும் மகத்தான வாசியது மேல்நோக்காது
நீட்சியுடன் பதாம்புயத்தை நண்ணலாகும் நிஷ்களங்க மானதொரு சித்தனாவான்
மீட்சிபெற வையகத்தில் மாண்பரெல்லாம் மேன்மையுடன் எந்நாளும் துதிப்பார்பாரே
6258.
துதிக்கையிலே சித்துமுனி ரிஷியார்தாமும் துரைராஜ சிவயோகி இவரேயென்பார்
மதிக்கவே எல்லவர்க்கு போகவானாய் மகத்தான காயாதி கற்பத்தாலே
விதித்ததொரு வயததுவும் மேலதாகி மேதினியில் வெகுகால மிருப்பாயப்பா
ததியான முப்பூவின் கைபாகந்தான் சாற்றவில்லை வெகுகோடி ரிஷிகள்பாரே
6259.
கோடியாங் காலாங்கி கிருபையாலே கூறினேன் போகரே ழாயிரந்தான்
தேடியே பார்த்தாலும் கிட்டாதப்பா தேசத்தில் விட்டகுறை இருந்தால்கிட்டும்
வாடியே யலையாதே மன்னாகேளு மகத்தான போகரே ழாயிரந்தான்
பாடியதோர் போகரே ழாயிரத்தில் பாங்கான கடைக்காண்டம் முப்பூபாரே
6260.
பாரேதான் போகரே ழாயிரத்தில் பட்சமுடன் காண்டமது ஏழுதன்னில்
நேரேதான் கடைக்காண்டம் ஏழிலப்பா நெடிதான முப்பூவாம் சூட்சுமப்பூ
சீரேதான் வையகத்து மாண்பருக்கு சிறப்புடனே பாடிவைத்தேன் சூட்சமாக
ஆரோதான் கருவாளி செய்வானப்பா வப்பனே யண்டபிண்ட மறிவான்கேளே
சித்தியாம் பஞ்சபூத சரக்கைத்தானும் சிறப்புடனே தானெடுத்து செப்பக்கேளீர்
வெத்தியுடன் முப்பூவை சரக்குபாதி வேகமுடன் காடியின்தன் பழச்சாற்றாலே
சுத்தியுடன் தானரைத்து பில்லைசெய்து துப்புரவாய் ரவிதனிலே காயப்போடு
சுத்தியுடன் வோட்டிலிட்டு சீலைசெய்து சாங்கமுடன் புடமதுவுங் கோழிதானே
6252.
தானான கோழியது புடமதாக தண்மையுடன் ஆறினபின் னெடுத்துப்பாரு
கோனான குருசொன்ன வாக்குபோலே கொற்றவனே பற்பமது தவளம்போலாம்
மானான பற்பமதை எடுத்துமைந்தா மகத்தான சீசாவில் பதனம்பண்ணு
பானான ரவிமதியில் தாக்கவல்லோ பாண்மையுடன் சொல்லுகிறேன் பண்பாய்த்தானே
6253.
பண்பான வெள்ளிசெம்பில் பத்துக்கொன்னு பாங்குடனே பற்பமதை யொன்றுதாக்க
நண்பான மாற்றதுவும் ஏழதாகும் நலமான புடமதுவுக் கேகாவர்ணம்
திண்பான பட்டசெம்பு ஆறுவெள்ளி தீர்க்கமுடன் தான்கொடுக்க மாற்றெட்டாகும்
உண்மையுடன் தங்கமது நாலுக்கொன்று வுத்தமனே சேர்க்க நலமாகும்பாரே
6254.
பாரேதான் அவமதுவும் ஒன்பதாகும் பாங்கான புடத்தங்கம் பிறவித்தங்கம்
சீரேதான் பஞ்சமுகங் கருத்துக்காணும் சிறப்புடனே மறைத்துவைத்தார் சித்துதாமும்
நேரேதான் சரக்கு வறுபத்துநான்கு நேர்மையுடன் முன்சொன்ன முப்பூவாலே
வீரேதான் சுன்னமென்ற முப்பூவாலே விண்ணுலகும் மண்ணுலகும் காணலாமே
6255.
காணலாம் முப்பூவால் அனந்தம்போக்கு காசினியில் நாதாக்கள் ஆடுங்கூத்து
பூணவே சிவயோகி சித்தருக்கு புகட்டவில்லை இந்தவழி முப்பூ மார்க்கம்
தோணவே கைமுறையாய் எடுத்துபாகம் துப்புரவாய் வையகத்து மாண்பருக்கு
வேணதொரு கருவிகர ணாதியந்தம் விருப்பமுடன் பாடிவைத்த நுண்மைதானே
6256.
பாடினேன் முப்பூவின் வழலைமார்க்கம் பாருலகில் சகலசித்து மாடும்பாரு
நீடியதோர் முப்பூவைக் குன்றிவீதம் நீதியுடன் மண்டலந்தான் கொண்டாயானால்
வாடியதோர் திருமேனி சடலந்தானும் வண்மையுடன் காயாதி கற்பத்தாலே
கூடியதோர் தேகமது சட்டைதள்ளும் குணமான முப்பூவின் காட்சிகேளே
6257.
காட்சியாம் முப்பூவைக் கொண்டபேர்க்கு காசினியில் நரைதிரையும் இல்லையப்பா
மாட்சியுடன் நெடுங்கால மிருக்கலாகும் மகத்தான வாசியது மேல்நோக்காது
நீட்சியுடன் பதாம்புயத்தை நண்ணலாகும் நிஷ்களங்க மானதொரு சித்தனாவான்
மீட்சிபெற வையகத்தில் மாண்பரெல்லாம் மேன்மையுடன் எந்நாளும் துதிப்பார்பாரே
6258.
துதிக்கையிலே சித்துமுனி ரிஷியார்தாமும் துரைராஜ சிவயோகி இவரேயென்பார்
மதிக்கவே எல்லவர்க்கு போகவானாய் மகத்தான காயாதி கற்பத்தாலே
விதித்ததொரு வயததுவும் மேலதாகி மேதினியில் வெகுகால மிருப்பாயப்பா
ததியான முப்பூவின் கைபாகந்தான் சாற்றவில்லை வெகுகோடி ரிஷிகள்பாரே
6259.
கோடியாங் காலாங்கி கிருபையாலே கூறினேன் போகரே ழாயிரந்தான்
தேடியே பார்த்தாலும் கிட்டாதப்பா தேசத்தில் விட்டகுறை இருந்தால்கிட்டும்
வாடியே யலையாதே மன்னாகேளு மகத்தான போகரே ழாயிரந்தான்
பாடியதோர் போகரே ழாயிரத்தில் பாங்கான கடைக்காண்டம் முப்பூபாரே
6260.
பாரேதான் போகரே ழாயிரத்தில் பட்சமுடன் காண்டமது ஏழுதன்னில்
நேரேதான் கடைக்காண்டம் ஏழிலப்பா நெடிதான முப்பூவாம் சூட்சுமப்பூ
சீரேதான் வையகத்து மாண்பருக்கு சிறப்புடனே பாடிவைத்தேன் சூட்சமாக
ஆரோதான் கருவாளி செய்வானப்பா வப்பனே யண்டபிண்ட மறிவான்கேளே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக