5901.
அறையலாம் இன்னமொரு மார்க்கம்பாரு வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
நிறையனே வேதமென்ற வியாசர்தானும் நேர்மையுடன் தான்பிறந்த சேதிவண்ணம்
மறைபோன்ற வாணியாந் திங்களப்பா மகத்தான கேட்டையது ரெண்டாங்கால்தான்
குறைபோன்ற நாளதனில் உதித்தபாலன் கொற்றவனார் வேதமென்ற வியாசர்தானே
5902.
தானான பராசரது மைந்தனப்பா தாக்கான வியாசனென்றே செப்பலாகும்
கோனான நூற்படியே யானுரைத்தேன் கொற்றவனார் மாண்பரிடம் அறியவேண்டி
பானான யின்னமொரு பதமுஞ்சொல்வேன் பாரினிலே மாண்பர்களுந் தெரியவேண்டி
மானான புலிப்பாணி யுந்தமக்கு மார்க்கமுடன் முறைபாடு சொல்லலாச்சே
5903.
சொல்லவென்றால் தேறையர் மார்க்கஞ்சொல்வேன் சுந்தரனே பங்குனியாந் திங்களப்பா
வெல்லவே மூலமது ரெண்டாங்காலாம் மேன்மையுடன் அவதாரஞ் செய்தாரப்பா
புல்லவே தேரையர் முனிவர்தானும் புகழான பிரம்மகுலந் தன்னிலப்பா
வெல்லவே வானரிஷி தன்தனக்கு சிறப்புடனே பெற்றெடுத்த பாலனானே
5904.
பாலனாந் தேரையர் முனிவர்தானும் பண்பான வகஸ்தியருக் குகந்தசீஷன்
சீலமுடன் ஞானோப தேசம்பெற்று சிறப்புடனே மலைதனிலே இருந்தசித்து
கோலமுடன் யேமமென்ற வித்தைதன்னை குவலயத்தில் மாண்பர்களுக் காகவேண்டி
காலமுடன் அகஸ்தியராங் குருபாதத்தை தண்மையுடன் எதிர்த்ததொரு சீஷனாச்சே
5905.
சீஷனா மின்னமொரு மார்க்கம்பாரு சீருள்ள புலிப்பாணி மன்னவா கேள்
தோஷமது வாராமல் யாக்கோபென்னும் துப்புரவாய் ஞானமென்ற சித்துதானும்
வேஷமது தான்மாற்றி நபிநாயகத்தை விருப்பமுடன் கண்டுவந்த யோகசித்து
பாஷமுடன் தான்பிறந்த நேர்மைக்கேளும் பாரினிலே பங்குனி மாதந்தானே
5906.
மாதமாம் பங்குனியாந் திங்களப்பா மகத்தான பூராடம் நாலாங்கால்தான்
தோதமுடன் பக்கிரியாக் கோபுதானும் தொல்லுலகை தான்மறந்து பிறந்தசித்து
சாதகங்கள் பொய்யாது விதியுந்தப்பா தாரணியில் நெடுங்கால மிருந்தசித்து
கோதமென்னும் புலஸ்தியனார் தானுமப்பா கொற்றவனார் ஈன்றெடுத்த புனிதனாமே
5907.
புனிதமாம் மகமது மார்க்கந்தன்னில் புகழான கன்னியவள் பெற்றபாலன்
சனியுடனே ரேவதியுங் கூடச்சேர்ந்து சட்டமுடன் வந்துதித்த யாக்கோபப்பா
மனிதனெனும் ஜென்மமது பெற்றுமல்லோ மகத்மான மகமது மார்க்கஞ்சென்று
தனியான மக்கமென்ற தேசந்தன்னில் சட்டமுடன் போனதொரு சித்துமாமே
5908.
சட்டமுடன் இன்னமொரு மார்க்கங்கேளு சங்கரனே புத்தியுள்ள மணியேபாரு
திட்டமுடன் கொங்கணனார் பிறந்தநேர்மை தீர்க்கமுடன் யானுரைப்பேன் சுகந்தமாரா
வட்டமுடன் சித்திரையாந் திங்களப்பா வளமான உத்திராட முதல்கால்தன்னில்
அட்டதிசை தான்புகழப் பிறந்தபாலன் வன்பான கொங்கணவர் என்னலாமே
5909.
என்னவே யவர்பிறந்த நேர்மையப்பா எழிலான சங்கர குலத்துதித்த
பன்னவே கானீனன் பெற்றபாலன் காசினியில் வந்துதித்த திருவுமாகும்
பொன்னரங்கம் பூண்டதொரு புனிதவானாம் புகழான தேவதா சித்துமாகும்
நன்னவனுக் கொப்பான கொங்கணவர்தானுங் காசினியில் வந்துதித்த திருவுமாச்சே
5910.
ஆச்சப்பா யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
மூச்சடங்கிப் போனதொரு மாயாசித்து முனையான தட்சணா மூர்த்தியாகும்
பாச்சலுடன் தட்சணப் பதியில்தானும் பாங்குடனே பள்ளிகொண்ட சித்துவாகும்
ஆச்சரிய மானதொரு மாயாசித்து அவர்பிறந்த வண்மைதனைப் புகலுவேனே
அறையலாம் இன்னமொரு மார்க்கம்பாரு வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
நிறையனே வேதமென்ற வியாசர்தானும் நேர்மையுடன் தான்பிறந்த சேதிவண்ணம்
மறைபோன்ற வாணியாந் திங்களப்பா மகத்தான கேட்டையது ரெண்டாங்கால்தான்
குறைபோன்ற நாளதனில் உதித்தபாலன் கொற்றவனார் வேதமென்ற வியாசர்தானே
5902.
தானான பராசரது மைந்தனப்பா தாக்கான வியாசனென்றே செப்பலாகும்
கோனான நூற்படியே யானுரைத்தேன் கொற்றவனார் மாண்பரிடம் அறியவேண்டி
பானான யின்னமொரு பதமுஞ்சொல்வேன் பாரினிலே மாண்பர்களுந் தெரியவேண்டி
மானான புலிப்பாணி யுந்தமக்கு மார்க்கமுடன் முறைபாடு சொல்லலாச்சே
5903.
சொல்லவென்றால் தேறையர் மார்க்கஞ்சொல்வேன் சுந்தரனே பங்குனியாந் திங்களப்பா
வெல்லவே மூலமது ரெண்டாங்காலாம் மேன்மையுடன் அவதாரஞ் செய்தாரப்பா
புல்லவே தேரையர் முனிவர்தானும் புகழான பிரம்மகுலந் தன்னிலப்பா
வெல்லவே வானரிஷி தன்தனக்கு சிறப்புடனே பெற்றெடுத்த பாலனானே
5904.
பாலனாந் தேரையர் முனிவர்தானும் பண்பான வகஸ்தியருக் குகந்தசீஷன்
சீலமுடன் ஞானோப தேசம்பெற்று சிறப்புடனே மலைதனிலே இருந்தசித்து
கோலமுடன் யேமமென்ற வித்தைதன்னை குவலயத்தில் மாண்பர்களுக் காகவேண்டி
காலமுடன் அகஸ்தியராங் குருபாதத்தை தண்மையுடன் எதிர்த்ததொரு சீஷனாச்சே
5905.
சீஷனா மின்னமொரு மார்க்கம்பாரு சீருள்ள புலிப்பாணி மன்னவா கேள்
தோஷமது வாராமல் யாக்கோபென்னும் துப்புரவாய் ஞானமென்ற சித்துதானும்
வேஷமது தான்மாற்றி நபிநாயகத்தை விருப்பமுடன் கண்டுவந்த யோகசித்து
பாஷமுடன் தான்பிறந்த நேர்மைக்கேளும் பாரினிலே பங்குனி மாதந்தானே
5906.
மாதமாம் பங்குனியாந் திங்களப்பா மகத்தான பூராடம் நாலாங்கால்தான்
தோதமுடன் பக்கிரியாக் கோபுதானும் தொல்லுலகை தான்மறந்து பிறந்தசித்து
சாதகங்கள் பொய்யாது விதியுந்தப்பா தாரணியில் நெடுங்கால மிருந்தசித்து
கோதமென்னும் புலஸ்தியனார் தானுமப்பா கொற்றவனார் ஈன்றெடுத்த புனிதனாமே
5907.
புனிதமாம் மகமது மார்க்கந்தன்னில் புகழான கன்னியவள் பெற்றபாலன்
சனியுடனே ரேவதியுங் கூடச்சேர்ந்து சட்டமுடன் வந்துதித்த யாக்கோபப்பா
மனிதனெனும் ஜென்மமது பெற்றுமல்லோ மகத்மான மகமது மார்க்கஞ்சென்று
தனியான மக்கமென்ற தேசந்தன்னில் சட்டமுடன் போனதொரு சித்துமாமே
5908.
சட்டமுடன் இன்னமொரு மார்க்கங்கேளு சங்கரனே புத்தியுள்ள மணியேபாரு
திட்டமுடன் கொங்கணனார் பிறந்தநேர்மை தீர்க்கமுடன் யானுரைப்பேன் சுகந்தமாரா
வட்டமுடன் சித்திரையாந் திங்களப்பா வளமான உத்திராட முதல்கால்தன்னில்
அட்டதிசை தான்புகழப் பிறந்தபாலன் வன்பான கொங்கணவர் என்னலாமே
5909.
என்னவே யவர்பிறந்த நேர்மையப்பா எழிலான சங்கர குலத்துதித்த
பன்னவே கானீனன் பெற்றபாலன் காசினியில் வந்துதித்த திருவுமாகும்
பொன்னரங்கம் பூண்டதொரு புனிதவானாம் புகழான தேவதா சித்துமாகும்
நன்னவனுக் கொப்பான கொங்கணவர்தானுங் காசினியில் வந்துதித்த திருவுமாச்சே
5910.
ஆச்சப்பா யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
மூச்சடங்கிப் போனதொரு மாயாசித்து முனையான தட்சணா மூர்த்தியாகும்
பாச்சலுடன் தட்சணப் பதியில்தானும் பாங்குடனே பள்ளிகொண்ட சித்துவாகும்
ஆச்சரிய மானதொரு மாயாசித்து அவர்பிறந்த வண்மைதனைப் புகலுவேனே