5921.
தானான ரேவதியாம் மூன்றாங்காலாம் தண்மையுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
கோனான சுந்தரனார் வுளவுகேட்டால் கொற்றவனே கிக்கிந்தர் மலையினுச்சி
தேனான நவகண்ட ரிஷியார்தம்மின் சிறப்பாக யவர்தமக்கு பேரனாகும்
மானான மகத்துவங்கள் உள்ளசித்து மண்டலத்தில் சிவஞான சித்துபாரே
5922.
பாரேதான் இன்னமொரு வதிதஞ்சொல்வேன் பாலகனே சிறுபாலா பகரக்கேளும்
கூரேதான் சொன்னார்கள் இதிகாசங்கள் வப்பனே யார்தானுஞ் சொல்லவில்லை
நேரேதான் யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் நெடிதான வரரிஷியா மென்றசித்து
சீரேதான் அவர்பிறந்த வண்மையப்பா சிறப்புடைய சித்திரையாந் திங்கள்தானே
5923.
சித்திரையாம் அசுவினி மூன்றாங்காலாம் சிறப்பான நாள்தனிலே பிறந்தாரென்றும்
பத்தியுடன் அவருடைய மார்க்கஞ்சொல்வேன் பண்பான திரணாக்கிய முனிவர்பேரன்
முத்திவழி செல்லுகின்ற சித்துவாகும் முனையான வரரிஷியா மென்றும்பேரு
சத்தியங்கள் தவறாத விசுவயோகி தாரணியில் வரரிஷியா மென்னலாமே
5924.
என்னவே யின்னமொரு வயணஞ்சொல்வேன் எழிலான எந்தனது புத்திவானே
துன்னவே வால்மீகர் பிறந்தநேர்மை துப்புரவாய் அவருடைய வண்மைசொல்வேன்
மன்னவனுக் கொப்பான வால்மீகர்தானும் மகத்தான லோகமதில் பெரியசித்து
சொன்னதொரு புரட்டாசி திங்களப்பா சொற்பெரிய அனுஷமது நாலாங்காலே
5925.
காலான வால்மீகர் வேடனப்பா கன்னியாள் பெற்றதொரு குறத்திமைந்தன்
கோலான மராமரா உபதேசங்கள் கொற்றவனார் பெற்றதொரு சித்துமாச்சு
பாலான மாண்பருக்கு ஞானகாண்டம் பகுத்தறிய வால்மீகர் சரிதையப்பா
மாலான வவர்பெருமை யாருக்குண்டு மகத்தான ரிஷிகளுக் கில்லைதானே
5926.
இல்லையே இன்னமொரு சரிதைசொல்வேன் எழிலான எந்தனது புத்திமாரா
தொல்லுலகிற் கீர்த்திபெற்ற மாதுசித்து துப்புரவாய் ஊர்வசியாள் என்னுமாது
எல்லவருந் தான்புகழ வைகாசிதன்னில் எழிலான பூரமென்ற நாலாங்காலாம்
வல்லமையாய் வந்துதித்த தேவமாது வையகத்தில் ஊர்வசியாள் என்றமாதே
5927.
மாதான ஊர்வசியாள் மார்க்கந்தானும் மகத்தான கானகத்து ரிஷிதானப்பா
தீதான பிரிங்கிமகா ரிஷியின்பேத்தி தீர்க்கமுடன் கானீனன் பெற்றமாது
ஆதான சாத்திரத்தில் சித்துநூலில் அறிவுடைய ஊர்வசியாள் மாதுதானும்
கோதானந் தான்கொடுத்து பிறந்தமாது குவலயத்தில் ஊர்வசியாஞ் சித்துகாணே
5928.
காணவே இன்னமொரு கவிதைசொல்வேன் கண்ணான கண்மணியே கழரக்கேண்மோ
பூணவே புலிப்பாணி மைந்தாபாரு புகழான எந்தனிரு மணியே கேளும்
வேணவே இன்னம்வெகு வனேகசித்து வேடமது பூண்டுமல்லோ இருந்தாரப்பா
மாணமருங் கல்வியுள்ள சித்துகன்னி மகத்தான சித்துகளைக் கூறலாச்சே
5929.
கூறவென்றால் கமலமுனி பிறந்தநேர்மை கூறுவேன் வைகாசி திங்களப்பா
மாறலுடன் பூசமது ரெண்டாங்காலாம் மகத்தான கமலமுனி பிறந்தநாள்தான்
சீறலது வாராத தேவசித்து தெளிவுடைய வையகத்துக் குகந்தசித்து
ஆறவே யொருவரால் கூறப்போமோ வப்பனே ஞானவொளி சித்துபாரே
5930.
பாரேதான் சித்தொளியின் மகிமைபாரு பாங்கான காலாங்கி பாட்டன்வர்க்கம்
நேரேதான் வம்மிஷத்திற் பிறந்தசித்து நெடிதான சின்மயா னந்தசித்து
வேரேதான் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வெளியரங்க மானதொரு மாராகேண்மோ
சீரேதான் அறிவான அனந்தசித்தர் தீர்க்கமுடன் பிறந்ததொரு நேர்மைகாணே
தானான ரேவதியாம் மூன்றாங்காலாம் தண்மையுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
கோனான சுந்தரனார் வுளவுகேட்டால் கொற்றவனே கிக்கிந்தர் மலையினுச்சி
தேனான நவகண்ட ரிஷியார்தம்மின் சிறப்பாக யவர்தமக்கு பேரனாகும்
மானான மகத்துவங்கள் உள்ளசித்து மண்டலத்தில் சிவஞான சித்துபாரே
5922.
பாரேதான் இன்னமொரு வதிதஞ்சொல்வேன் பாலகனே சிறுபாலா பகரக்கேளும்
கூரேதான் சொன்னார்கள் இதிகாசங்கள் வப்பனே யார்தானுஞ் சொல்லவில்லை
நேரேதான் யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் நெடிதான வரரிஷியா மென்றசித்து
சீரேதான் அவர்பிறந்த வண்மையப்பா சிறப்புடைய சித்திரையாந் திங்கள்தானே
5923.
சித்திரையாம் அசுவினி மூன்றாங்காலாம் சிறப்பான நாள்தனிலே பிறந்தாரென்றும்
பத்தியுடன் அவருடைய மார்க்கஞ்சொல்வேன் பண்பான திரணாக்கிய முனிவர்பேரன்
முத்திவழி செல்லுகின்ற சித்துவாகும் முனையான வரரிஷியா மென்றும்பேரு
சத்தியங்கள் தவறாத விசுவயோகி தாரணியில் வரரிஷியா மென்னலாமே
5924.
என்னவே யின்னமொரு வயணஞ்சொல்வேன் எழிலான எந்தனது புத்திவானே
துன்னவே வால்மீகர் பிறந்தநேர்மை துப்புரவாய் அவருடைய வண்மைசொல்வேன்
மன்னவனுக் கொப்பான வால்மீகர்தானும் மகத்தான லோகமதில் பெரியசித்து
சொன்னதொரு புரட்டாசி திங்களப்பா சொற்பெரிய அனுஷமது நாலாங்காலே
5925.
காலான வால்மீகர் வேடனப்பா கன்னியாள் பெற்றதொரு குறத்திமைந்தன்
கோலான மராமரா உபதேசங்கள் கொற்றவனார் பெற்றதொரு சித்துமாச்சு
பாலான மாண்பருக்கு ஞானகாண்டம் பகுத்தறிய வால்மீகர் சரிதையப்பா
மாலான வவர்பெருமை யாருக்குண்டு மகத்தான ரிஷிகளுக் கில்லைதானே
5926.
இல்லையே இன்னமொரு சரிதைசொல்வேன் எழிலான எந்தனது புத்திமாரா
தொல்லுலகிற் கீர்த்திபெற்ற மாதுசித்து துப்புரவாய் ஊர்வசியாள் என்னுமாது
எல்லவருந் தான்புகழ வைகாசிதன்னில் எழிலான பூரமென்ற நாலாங்காலாம்
வல்லமையாய் வந்துதித்த தேவமாது வையகத்தில் ஊர்வசியாள் என்றமாதே
5927.
மாதான ஊர்வசியாள் மார்க்கந்தானும் மகத்தான கானகத்து ரிஷிதானப்பா
தீதான பிரிங்கிமகா ரிஷியின்பேத்தி தீர்க்கமுடன் கானீனன் பெற்றமாது
ஆதான சாத்திரத்தில் சித்துநூலில் அறிவுடைய ஊர்வசியாள் மாதுதானும்
கோதானந் தான்கொடுத்து பிறந்தமாது குவலயத்தில் ஊர்வசியாஞ் சித்துகாணே
5928.
காணவே இன்னமொரு கவிதைசொல்வேன் கண்ணான கண்மணியே கழரக்கேண்மோ
பூணவே புலிப்பாணி மைந்தாபாரு புகழான எந்தனிரு மணியே கேளும்
வேணவே இன்னம்வெகு வனேகசித்து வேடமது பூண்டுமல்லோ இருந்தாரப்பா
மாணமருங் கல்வியுள்ள சித்துகன்னி மகத்தான சித்துகளைக் கூறலாச்சே
5929.
கூறவென்றால் கமலமுனி பிறந்தநேர்மை கூறுவேன் வைகாசி திங்களப்பா
மாறலுடன் பூசமது ரெண்டாங்காலாம் மகத்தான கமலமுனி பிறந்தநாள்தான்
சீறலது வாராத தேவசித்து தெளிவுடைய வையகத்துக் குகந்தசித்து
ஆறவே யொருவரால் கூறப்போமோ வப்பனே ஞானவொளி சித்துபாரே
5930.
பாரேதான் சித்தொளியின் மகிமைபாரு பாங்கான காலாங்கி பாட்டன்வர்க்கம்
நேரேதான் வம்மிஷத்திற் பிறந்தசித்து நெடிதான சின்மயா னந்தசித்து
வேரேதான் இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வெளியரங்க மானதொரு மாராகேண்மோ
சீரேதான் அறிவான அனந்தசித்தர் தீர்க்கமுடன் பிறந்ததொரு நேர்மைகாணே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக