5951.
சாதியாங் கானீனன் பெற்றபிள்ளை சாங்கமுடன் நெடுங்கால மிருந்தசித்து
ஜோதிமணி சுந்தரம்போல் குகைதானுல்லே சுட்டெரிக்கும் நிலாப்போலே இருக்குஞ்சித்து
நீதிமனு முறைதவறா யிருந்தசித்து கடலாழி யுலகுபதி யாண்டசித்து
தீதிலா சங்கமென்ற புலவருக்கு தீர்க்கமுடன் உபதேசஞ் செய்தசித்தே
5952.
செய்யவே யின்னமொரு மார்க்கம்பாரு செம்பவல கனிவாயா துய்யபாலா
உய்யவே திருமூல ரென்றசித்து வுலகமதில் தான்பிறந்த சேதிவண்ணம்
பையவே புரட்டாசி திங்களப்பா பாலகனார் வந்துதித்த மாதமாகும்
வெய்யவே அவிட்டமென்ற மூன்றாங்கால்தான் மேதினியில் வந்துதித்த சித்துமாச்சே
5953.
ஆச்சப்பா திருமூலவர்க் கத்தோர்கள் அவனியிலே சொல்லுதற்கு நாவுமில்லை
மூச்சடங்கிப் போனதொரு பாண்டியர்கள்தாமும் முனையான சங்கமதில் வாதுசெய்தோன்
பாச்சலுடன் சேரனுக்கு பெற்றபாலன் பாரினிலே யனுலோமன் யென்னலாகும்
வீச்சலுடன் இதிகாச புராணமெல்லாம் விருப்பமுடன் பாடிவைத்த சித்துகாணே
5954.
காணவே யின்னமொரு கருமானங்கேள் கருவான புலிப்பாணி மைந்தாபாரு
தோணவே எழுகடலுஞ் சுற்றிவந்தேன் தோறாமல் தட்சண மாண்பர்தம்மை
பூணவே நெடுங்கால மிருந்துமல்லோ பொங்கமுடன் அதிசயங்கள் மிகவுங்கண்டேன்
வேணதொரு தேவாதி தேவரல்லோ விருப்பமுடன் அனேகவித கோயிலுண்டே
5955.
உண்டான வையகத்து மாண்பர்தம்மில் வுத்தமனே சன்னதங்கள் மெத்தவுண்டு
கண்டாலும் மாண்பர்களைப் பார்த்தபோது கருவான தெய்வங்கள் உச்சாடத்தால்
செண்டான முறைமைகொண்டு வுறவுபேசி செம்மலுடன் அருகிருந்து சிலதுமாண்பர்
திண்மையுடன் குறிசொல்ல வந்தோனுக்கு தீர்க்கமுடன் தானுரைப்பார் வதீதந்தானே
5956.
அதிதமாஞ் சமுசாரி செய்யும்வித்தை வன்போடு வாயிரம்பேர் குறிகேட்டாலும்
கதிதமுடன் தேவதைகள் வசியத்தாலே கதிரான சுகசேதி சொல்வோன்போல
மதிபோன்ற தேவதா கிருபையாலும் மகத்தான உண்மைவழி கூறினார்போல்
சதியுடனே சன்னதங்கள் மிகவுமாகி சட்டமுடன் கூறலுற்றார் மாண்பர்க்காமே
5957.
மாண்பான குறிசொல்லும் மார்க்கங்கேளும் மகத்தான பத்துபேர் ரெண்டுபேர்கள்
ஆண்பிள்ளைத் தன்னோடும் பாலரோடும் வழகான மாதர்களின் கூட்டத்தோடும்
வீண்பேச்சி வார்த்தைகளும் மிகவாய்ப்பேசி விருப்பமுடன் யாதொன்றும் தெரியாப்போலும்
நாண்போடு தூதுரைக்கும் மாண்பர்தாமும் நலமான மாந்தருடன் பேசுவாரே
5958.
பேசியே மாண்பரோடு வுறவுபேசி பேரான குறிகேட்க வந்தோர்தம்மை
காசினியில் வந்ததொரு மாண்பர்நாங்கள் கருவாகக் குறி சொல்லும் மாண்டிதன்னை
பாசிபடா குறியுரைப்பா ரென்றுசொல்லி பட்சமுடன் வெகுதூரங் கேட்டுவந்தோம்
மாசியென்னும் பதிதனிலே குறிகள்கேட்டோம் மகத்தான குறியதுவுஞ் சொல்லலாச்சே
5959.
சொல்லவென்றால் குறியதுவும் என்னசொல்வோம் சோடசத்தில் ஒன்றேனும் பொய்யேயில்லை
வெள்ளவே குறிகேட்டார் மெய்யைப்போல மேன்மையுடன் கூடிவரு மாண்பரொடு
புல்லவே வுறவுகொண்டு நயங்கள்பேசி புகழான எதிரியின் வார்த்தைதன்னை
மெல்லவே யவருரைக்கும் வார்த்தைதன்னை மேன்மையுடன் உபாயத்தால் அறிவார்தானே
5960.
தானாக எதிர்மாண்பர் கூறும்வார்த்தை தண்மையுடன் உபாயமதாய்த் தானறிந்து
கோனான குறியுரைக்கும் சங்கன்தானும் கொப்பெனவே யடையாள ரூபத்தோடும்
மானாக எதிரியின்தன் வார்த்தையெல்லாம் மார்க்கமுடன் தானுரைத்து ஆளைக்காட்டி
பானாக பதிமேடை மறைந்துகொண்டு பாங்குடனே குறிசொல்வோர் பின்நிற்பாரே
சாதியாங் கானீனன் பெற்றபிள்ளை சாங்கமுடன் நெடுங்கால மிருந்தசித்து
ஜோதிமணி சுந்தரம்போல் குகைதானுல்லே சுட்டெரிக்கும் நிலாப்போலே இருக்குஞ்சித்து
நீதிமனு முறைதவறா யிருந்தசித்து கடலாழி யுலகுபதி யாண்டசித்து
தீதிலா சங்கமென்ற புலவருக்கு தீர்க்கமுடன் உபதேசஞ் செய்தசித்தே
5952.
செய்யவே யின்னமொரு மார்க்கம்பாரு செம்பவல கனிவாயா துய்யபாலா
உய்யவே திருமூல ரென்றசித்து வுலகமதில் தான்பிறந்த சேதிவண்ணம்
பையவே புரட்டாசி திங்களப்பா பாலகனார் வந்துதித்த மாதமாகும்
வெய்யவே அவிட்டமென்ற மூன்றாங்கால்தான் மேதினியில் வந்துதித்த சித்துமாச்சே
5953.
ஆச்சப்பா திருமூலவர்க் கத்தோர்கள் அவனியிலே சொல்லுதற்கு நாவுமில்லை
மூச்சடங்கிப் போனதொரு பாண்டியர்கள்தாமும் முனையான சங்கமதில் வாதுசெய்தோன்
பாச்சலுடன் சேரனுக்கு பெற்றபாலன் பாரினிலே யனுலோமன் யென்னலாகும்
வீச்சலுடன் இதிகாச புராணமெல்லாம் விருப்பமுடன் பாடிவைத்த சித்துகாணே
5954.
காணவே யின்னமொரு கருமானங்கேள் கருவான புலிப்பாணி மைந்தாபாரு
தோணவே எழுகடலுஞ் சுற்றிவந்தேன் தோறாமல் தட்சண மாண்பர்தம்மை
பூணவே நெடுங்கால மிருந்துமல்லோ பொங்கமுடன் அதிசயங்கள் மிகவுங்கண்டேன்
வேணதொரு தேவாதி தேவரல்லோ விருப்பமுடன் அனேகவித கோயிலுண்டே
5955.
உண்டான வையகத்து மாண்பர்தம்மில் வுத்தமனே சன்னதங்கள் மெத்தவுண்டு
கண்டாலும் மாண்பர்களைப் பார்த்தபோது கருவான தெய்வங்கள் உச்சாடத்தால்
செண்டான முறைமைகொண்டு வுறவுபேசி செம்மலுடன் அருகிருந்து சிலதுமாண்பர்
திண்மையுடன் குறிசொல்ல வந்தோனுக்கு தீர்க்கமுடன் தானுரைப்பார் வதீதந்தானே
5956.
அதிதமாஞ் சமுசாரி செய்யும்வித்தை வன்போடு வாயிரம்பேர் குறிகேட்டாலும்
கதிதமுடன் தேவதைகள் வசியத்தாலே கதிரான சுகசேதி சொல்வோன்போல
மதிபோன்ற தேவதா கிருபையாலும் மகத்தான உண்மைவழி கூறினார்போல்
சதியுடனே சன்னதங்கள் மிகவுமாகி சட்டமுடன் கூறலுற்றார் மாண்பர்க்காமே
5957.
மாண்பான குறிசொல்லும் மார்க்கங்கேளும் மகத்தான பத்துபேர் ரெண்டுபேர்கள்
ஆண்பிள்ளைத் தன்னோடும் பாலரோடும் வழகான மாதர்களின் கூட்டத்தோடும்
வீண்பேச்சி வார்த்தைகளும் மிகவாய்ப்பேசி விருப்பமுடன் யாதொன்றும் தெரியாப்போலும்
நாண்போடு தூதுரைக்கும் மாண்பர்தாமும் நலமான மாந்தருடன் பேசுவாரே
5958.
பேசியே மாண்பரோடு வுறவுபேசி பேரான குறிகேட்க வந்தோர்தம்மை
காசினியில் வந்ததொரு மாண்பர்நாங்கள் கருவாகக் குறி சொல்லும் மாண்டிதன்னை
பாசிபடா குறியுரைப்பா ரென்றுசொல்லி பட்சமுடன் வெகுதூரங் கேட்டுவந்தோம்
மாசியென்னும் பதிதனிலே குறிகள்கேட்டோம் மகத்தான குறியதுவுஞ் சொல்லலாச்சே
5959.
சொல்லவென்றால் குறியதுவும் என்னசொல்வோம் சோடசத்தில் ஒன்றேனும் பொய்யேயில்லை
வெள்ளவே குறிகேட்டார் மெய்யைப்போல மேன்மையுடன் கூடிவரு மாண்பரொடு
புல்லவே வுறவுகொண்டு நயங்கள்பேசி புகழான எதிரியின் வார்த்தைதன்னை
மெல்லவே யவருரைக்கும் வார்த்தைதன்னை மேன்மையுடன் உபாயத்தால் அறிவார்தானே
5960.
தானாக எதிர்மாண்பர் கூறும்வார்த்தை தண்மையுடன் உபாயமதாய்த் தானறிந்து
கோனான குறியுரைக்கும் சங்கன்தானும் கொப்பெனவே யடையாள ரூபத்தோடும்
மானாக எதிரியின்தன் வார்த்தையெல்லாம் மார்க்கமுடன் தானுரைத்து ஆளைக்காட்டி
பானாக பதிமேடை மறைந்துகொண்டு பாங்குடனே குறிசொல்வோர் பின்நிற்பாரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக