பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 5911-5920

5911.
புகலுவேன் ஆவணியாந் திங்கள்தானும் பூரணமாந் திருவோண முதற்காலப்பா
நிகலவே தட்சணா மூர்த்திநாயன் நீதியுடன் தான்பிறந்த நாளுமாச்சு
அகலவே கொல்லிமலை நாதன்பேரன் வன்பான வைஷ்ணகுல சம்பிரதாயன்
சகலமு மறிந்ததொரு ஞானசித்து தாரணியில் வந்துதித்த சித்துமாச்சே
5912.
சித்தான குலசம்பிர தாயபூபன் சிறப்பான தட்சணா மூர்த்திநாயன்
முத்தான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் மூதுலகைக் கடந்ததொரு புனிதனாகும்
புத்தியுள்ள கோரக்கர் பிறந்தநேர்மை பண்பான கார்த்திகையா மென்னலாகும்
சித்திபெற அயலிடமாம் இரண்டாங்கால்தான் சிறப்பான நாளென்றே சொல்லலாமே
5913.
சொல்லவே கோரக்கர் பிறந்தநேர்மை சந்திரனார் வசிஷ்டமகா ரிஷியாருக்கு
புல்லவே கானகுற ஜாதியப்பா புகழான கன்னியவள் பெற்றபிள்ளை
வெல்லவே அனுலோமன் என்னலாகும் வேதாந்த கோரக்கர் சித்துதாமும்
நல்லதொரு பிரகாச மானசித்து நாதாந்த சித்தொளிவும் என்னலாமே
5914.
என்னவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி மன்னாபாரு
துன்னவே கௌபால சித்துதாமும் சுடரொளியாம் பிரகாச மானஜோதி
மின்னவே வைகாசி மாதமப்பா மிக்கான சதயமது ரெண்டாங்கால்தான்
நன்னயமாய் அவர்பிறந்த நாளேயாகும் நலமான கௌபால சித்துபாரே
5915.
பாரேதான் தேவதா தச்சனப்பா பாங்கான ஜெகத்குரு கம்மாளன்தான்
நேரேதான் தவத்துதி சித்துவென்றும் நெடிதான கௌபால ரிஷிதானென்றும்
தீரேதான் வயிரக்கல் கண்டெடுத்து தீர்க்கமுடன் பொன்னுரைத்த சித்துவென்றும்
சீரேதான் பலநூல் காப்பியங்கள்கண்டு செப்பினேன் கௌபால சித்துகாணே
5916.
காணவே யின்னமொரு புதுமைசொல்வேன் காசினியில் நாதாக்கள் கூறவில்லை
தோணவே ஜோதியென்ற முனிவர்தானும் துப்புரவாய் தானுதித்த வண்மைபராய்
பூணவே புரட்டாசி மாதமப்பா புகழான பூரட்டாதி யென்னலாகும்
மாணவே நாலாங்கால் தன்னிலப்பா மகத்தான ஜோதிமுனி வுதித்தவாறே
5917.
வாரான பிரம்மரிஷி மைந்தனப்பா மகத்தான சூரியகுலந் தனிலுதித்த
தூரான பெண்மாது வரவர்ஜாதி துகளான ஜோதிமாமுனிவர் தானாகும்
வேரான மலைகுகைகள் குண்ணுதேடி விளக்கமற கல்லதனை யாராய்ந்தேதான்
கூறான வயிரக்கல் கண்டெடுத்த கொற்றவனார் ஜோதிமா முனிதானாச்சே
5918.
ஆச்சப்பா யின்னமொரு மர்மஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி வண்ணலேகேள்
மூச்சடங்கி சென்றதொரு மாடர்தானும் முனையுடனே தான்பிறந்த வண்மைகேளிர்
மாச்சலென்ற மார்கழியாந் திங்களப்பா மகத்தான உத்திரட்டாதி தானும்
வீச்சுடனே நாலாங்கால் என்னலாகும் விரைவான நாள்தனிலே பிறந்தார்தாமே
5919.
பிறந்தாரே டமரகர் யாரென்றாக்கால் பேரான சுந்தரனார் மைந்தனப்பா
இறந்ததொரு சுந்தரர்க்கு மைந்தனப்பா எழிலான பிள்ளையது ரெண்டாம்பிள்ளை
துறந்ததொரு ஞானியப்பா சைவஞானி சுத்தமுள்ள வீராதி வீரனப்பா
மறந்ததொரு மார்க்கமெல்லாம் மாந்திரீகத்தால் மகத்தான புத்தியினால் அறிந்தசித்தே
5920.
சித்தான யின்னமொரு மகிமைசொல்வேன் சீர்பாலா புண்ணியனே பகலக்கேளிர்
முத்தான ஞானியிலும் உயர்ந்தஞானி முனையான சுந்தரனார் சித்துதாமும்
புத்தியுள்ள பூபாலன் தான்பிறந்த புகழான மாதமது யாதென்றாக்கால்
சுத்தமுள்ள ஆவணியாந் திங்களப்பா சுடரான சுந்தரனார் பிறந்தார்தானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக