5941.
என்னவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி கண்ணேகேளும்
பன்னவே வடிவேலர் தாம்பிறந்த பதாம்புயத்தை சொல்லுகிறேன் பண்பாய்க்கேளும்
துன்னவே மூன்றுயுகங் கடந்தவேலர் துப்புறவாய்ப் பிறந்ததொரு நேர்மையப்பா
சொன்னபடி யாவணியாந் திங்களப்பா சொல்லுகிறேன் முதற்பூசங் கால்தானொன்றே
5942.
ஒன்றான கால்தனிலே பிறந்தநாளாம் வுத்தமனார் வடிவேலர் பிறந்தாரென்று
குன்றான மலைபோலே சாத்திரங்கள் கூறினார் குவலயத்தில் சொல்லொண்ணாது
தென்றிசையில் அகஸ்தியருக்கு உபதேசங்கள் செய்ததொரு வடிவேலர் சித்துதாமும்
பன்றிபெருச் சாளியின்மேல் சாரியேகும் பண்பான விநாயகருக்கு தம்பியாமே
5943.
தம்பியென்று சாத்திரங்கள் சொல்லலாச்சு சதகோடி வடிவேலர் சித்துதன்னை
வெம்பியதோர் மாந்தருக்கு ரோகந்தீரும் வெட்டவெளி வடிவேல ரென்றேசொல்வார்
கும்பியே மனங்கொதித்து வந்தபேர்க்கு கோடான கோடிபொருள் ஈவாரப்பா
தம்பியே எந்தனுக்கு குருவுமாகும் தாக்கான வடிவேலர் தண்மைபாரே
5944.
பாரேதான் இன்னமொரு பதமுஞ்சொல்வேன் பாங்கான புலிப்பாணி மகனேபாரு
சீரான யூகிமுனி பிறந்தவண்ணம் சிறப்புடனே சொல்லுகிறேன் திறமைமெத்த
நேரான வாவணியாந் திங்களப்பா நெடிதான பூசமது மூன்றாங்காலாம்
கூரான நாளதனில் பிறந்தசித்து குறிப்பான யூகியென்ற முனிவர்தானே
5945.
தானான யூகிமுனி மார்க்கமென்றால் தகமையுள்ள தன்வந்திரிக் குற்றபேரன்
கோனான சிங்களவ குலத்துதித்த கொம்பனையாள் கானீனன் பெற்றபிள்ளை
தேனான திரவிடத்திற் சொன்னார்போல தீர்க்கமுடன் வடமொழியில் சொல்லலாச்சு
மானான மாண்பருக் குபயோகத்தால் மாட்சியுடன் சொன்னதொரு நீதியாமே
5946.
நீதியா மின்னமொரு மர்மஞ்சொல்வேன் நிஷ்களங்க மானபுலிப் பாணியப்பா
தீதிலா ஜெமதக்னி முனிவர்தானும் சிறப்புடனே பிறந்ததொரு நேர்மைசொல்வேன்
கோதிலா வற்பசி மாதமப்பா குறிப்பான புனர்பூசம் மூன்றாங்கால்தான்
பாதிமதி சடையணிந்த தம்பிரான்போல் பாரினிலே யவதரித்த சித்துமாமே
5947.
சித்தான ஜெமதக்னி முனிவர்தானும் சிறப்பான பரத்துவமாம் ரிஷியின்பேரன்
முத்தான வனுலோமன் பெற்றபிள்ளை மூதுலகில் கீர்த்தியுடன் இருந்தசித்து
சத்தான யூகியென்ற சாத்திரந்தான் சாங்கமுடன் பன்னீராயிரந் தானாகும்
சுத்தமுள்ள ரிஷிதேவர் சொன்னதில்லை சுந்தரனார் இதிகாசங் கூறினாரே
5948.
கூறினார் இன்னமொரு குறிப்பைக்கேளு கூரான புலிப்பாணி மைந்தாபாரு
மீறியதோர் திரணாக்கிய முனிவரப்பா மிக்கான பிறந்ததொரு வண்மைசொல்வேன்
ஆறுபுடை திங்களாம் புரட்டாசியப்பா வப்பனே திருவாரிரை ரெண்டாம்பாதம்
வீறுபுகழ் சாத்திரத்தை மனதிலுன்னி விருப்பமுடன் பாடிவைத்தார் நூலிதாமே
5949.
நூலான மார்க்கமது யாதென்றாக்கால் நுணுக்கமுடன் ஜெமதக்னி பெற்றபாலன்
கோலான குறத்தியிட சற்புத்திரந்தான் குறிப்பான பிரதிலோமன் என்னலாகும்
பாலான மார்க்கமது யாதென்றாக்கால் பட்சமுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
காலான புலிப்பாணி மைந்தாபாரு கசடற்ற புத்திரனே புகல்வேன்பாரே
5950.
புகலுவேன் கண்டீசர் பிறந்தநேர்மை புகழான வைகாசி மாதமாகும்
நிகலுவேன் பூரமென்ற மூன்றாங்கால்தான் நீதியுடன் பிறந்த நாளேயாகும்
சகலமு மறிந்ததொரு சித்துதாமும் சதாகாலம் வையகத்தி லிருந்தசித்து
அகலவே புலஸ்தியருக் குற்றபேரன் அன்பான வேடருட ஜாதிதானே
என்னவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எழிலான புலிப்பாணி கண்ணேகேளும்
பன்னவே வடிவேலர் தாம்பிறந்த பதாம்புயத்தை சொல்லுகிறேன் பண்பாய்க்கேளும்
துன்னவே மூன்றுயுகங் கடந்தவேலர் துப்புறவாய்ப் பிறந்ததொரு நேர்மையப்பா
சொன்னபடி யாவணியாந் திங்களப்பா சொல்லுகிறேன் முதற்பூசங் கால்தானொன்றே
5942.
ஒன்றான கால்தனிலே பிறந்தநாளாம் வுத்தமனார் வடிவேலர் பிறந்தாரென்று
குன்றான மலைபோலே சாத்திரங்கள் கூறினார் குவலயத்தில் சொல்லொண்ணாது
தென்றிசையில் அகஸ்தியருக்கு உபதேசங்கள் செய்ததொரு வடிவேலர் சித்துதாமும்
பன்றிபெருச் சாளியின்மேல் சாரியேகும் பண்பான விநாயகருக்கு தம்பியாமே
5943.
தம்பியென்று சாத்திரங்கள் சொல்லலாச்சு சதகோடி வடிவேலர் சித்துதன்னை
வெம்பியதோர் மாந்தருக்கு ரோகந்தீரும் வெட்டவெளி வடிவேல ரென்றேசொல்வார்
கும்பியே மனங்கொதித்து வந்தபேர்க்கு கோடான கோடிபொருள் ஈவாரப்பா
தம்பியே எந்தனுக்கு குருவுமாகும் தாக்கான வடிவேலர் தண்மைபாரே
5944.
பாரேதான் இன்னமொரு பதமுஞ்சொல்வேன் பாங்கான புலிப்பாணி மகனேபாரு
சீரான யூகிமுனி பிறந்தவண்ணம் சிறப்புடனே சொல்லுகிறேன் திறமைமெத்த
நேரான வாவணியாந் திங்களப்பா நெடிதான பூசமது மூன்றாங்காலாம்
கூரான நாளதனில் பிறந்தசித்து குறிப்பான யூகியென்ற முனிவர்தானே
5945.
தானான யூகிமுனி மார்க்கமென்றால் தகமையுள்ள தன்வந்திரிக் குற்றபேரன்
கோனான சிங்களவ குலத்துதித்த கொம்பனையாள் கானீனன் பெற்றபிள்ளை
தேனான திரவிடத்திற் சொன்னார்போல தீர்க்கமுடன் வடமொழியில் சொல்லலாச்சு
மானான மாண்பருக் குபயோகத்தால் மாட்சியுடன் சொன்னதொரு நீதியாமே
5946.
நீதியா மின்னமொரு மர்மஞ்சொல்வேன் நிஷ்களங்க மானபுலிப் பாணியப்பா
தீதிலா ஜெமதக்னி முனிவர்தானும் சிறப்புடனே பிறந்ததொரு நேர்மைசொல்வேன்
கோதிலா வற்பசி மாதமப்பா குறிப்பான புனர்பூசம் மூன்றாங்கால்தான்
பாதிமதி சடையணிந்த தம்பிரான்போல் பாரினிலே யவதரித்த சித்துமாமே
5947.
சித்தான ஜெமதக்னி முனிவர்தானும் சிறப்பான பரத்துவமாம் ரிஷியின்பேரன்
முத்தான வனுலோமன் பெற்றபிள்ளை மூதுலகில் கீர்த்தியுடன் இருந்தசித்து
சத்தான யூகியென்ற சாத்திரந்தான் சாங்கமுடன் பன்னீராயிரந் தானாகும்
சுத்தமுள்ள ரிஷிதேவர் சொன்னதில்லை சுந்தரனார் இதிகாசங் கூறினாரே
5948.
கூறினார் இன்னமொரு குறிப்பைக்கேளு கூரான புலிப்பாணி மைந்தாபாரு
மீறியதோர் திரணாக்கிய முனிவரப்பா மிக்கான பிறந்ததொரு வண்மைசொல்வேன்
ஆறுபுடை திங்களாம் புரட்டாசியப்பா வப்பனே திருவாரிரை ரெண்டாம்பாதம்
வீறுபுகழ் சாத்திரத்தை மனதிலுன்னி விருப்பமுடன் பாடிவைத்தார் நூலிதாமே
5949.
நூலான மார்க்கமது யாதென்றாக்கால் நுணுக்கமுடன் ஜெமதக்னி பெற்றபாலன்
கோலான குறத்தியிட சற்புத்திரந்தான் குறிப்பான பிரதிலோமன் என்னலாகும்
பாலான மார்க்கமது யாதென்றாக்கால் பட்சமுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
காலான புலிப்பாணி மைந்தாபாரு கசடற்ற புத்திரனே புகல்வேன்பாரே
5950.
புகலுவேன் கண்டீசர் பிறந்தநேர்மை புகழான வைகாசி மாதமாகும்
நிகலுவேன் பூரமென்ற மூன்றாங்கால்தான் நீதியுடன் பிறந்த நாளேயாகும்
சகலமு மறிந்ததொரு சித்துதாமும் சதாகாலம் வையகத்தி லிருந்தசித்து
அகலவே புலஸ்தியருக் குற்றபேரன் அன்பான வேடருட ஜாதிதானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக