6651.
ஏழான சீலையது வலுவாய்ச்செய்து எழிலான ரவிதனிலே காயவைத்து
ஆழான புடமதுவுங் கோழியப்பா வப்பனே தான்போட்டு எடுத்துப்பாரு
மீளான நாகமது கட்டும்பாரு மிக்கான தவளையென்றே செப்பலாகும்
கோளாறு வாராது இந்தபாகம் கொற்றவனே நாகமது கட்டிப்போச்சே
6652.
கட்டியதோர் நாகமது யின்னஞ்சொல்வேன் கருவான கையானின் சாற்றினாலே
திட்டமுடன் தானுருக்கி சாய்ப்பாயப்பா திறமான நாகமது சீறலேகி
சட்டமுடன் தவளையது போலேயாகி தகமையுள்ள நாகமது பகையடங்கி
நட்டமில்லா களங்கமதுபோல் ஜோதியோடும் நலமான நாகத்தின் கட்டுதானே
6653.
தானான நாகமது கட்டுதன்னை தண்மையுள்ள பூபாலா சாற்றக்கேளு
மானான மருதோன்றி சாற்றினாலே மார்க்கமுடன் தானுருக்கி சாய்ப்பாயப்பா
பானான பரஞ்சுடர்போல் ஜோதிமின்னும் பாலகனே பத்துமுறை உருக்கிச்சாய்க்க
தேனான நாகமது கண்ணடைந்து யேற்றமுடன் புத்துமென்ற புட்டுதானே
6654.
புட்டான நாகமதைத் தானெடுத்து புகழான பழச்சாற்றில் உருக்கிச்சாய்க்க
திட்டமுடன் பத்துமுறை வுருக்கிப்பாரு தீர்க்கமுள்ள சவளையது போலேயாகும்
கட்டமுடன் பாராமல் விராலிதன்னை கருவாகத் தானுருக்கிச் சாய்த்துப்பாரு
நட்டமென்ன சிவந்தகொடி வேலிதன்னை நன்றாக பத்துமுறை சாய்த்திடாயே
6655.
பத்தான முறையதுஞ் சாய்த்தாயானால் பாலகனே நாகமது கொடிகட்டாம்
சத்தான நாகமது கட்டேயானால் சதகோடி சூரியர்போல் பிரகாசிக்கும்
முத்தமரும் ஞானமுள்ளோர் செய்யமாட்டார் மூதுலகில் சமுசாரி செய்யும்வித்தை
குத்தமது வாராது நாகந்தன்னை குணமுடனே செய்பவனே வாதியாமே
6656.
வாதியாம் நாகமென்ற களங்கெடுத்து வரிசைபெற சூதமது நேரேசேர்த்து
நீதியாம் ஆறுவகை ஜெயநீர்தன்னால் நீட்டியரை யெண்சாமம் தானுமப்பா
ஆதியெனும் பரஞ்சுடரை மனதிலெண்ணி சோராமல் தானரைப்பாய் மெழுகுபோலாம்
பாதிமதி சடையணியுந் தம்பிரானால் பாலகனே மெழுகது போலிருக்குந்தானே
6657.
தானான மெழுகதனை பில்லைதட்டி தகமையுடன் ரவிதனிலே காயவைத்து
கோனான குருசொன்ன வாக்குபோலே கொற்றவனே சில்லிட்டுச் சீலைசெய்து
மானான மணல்மறைவிற் புடத்தைப்போடு மகத்தான செந்தூரம் நீலவர்ணம்
பானான புடமதுவும் பத்தேயாகும் பாலகனே தானரைத்துப் போடுபோடே
6658.
போடவே செந்தூரம் அருணன்போலாம் பொங்கமுடன் தானெடுத்து செப்பக்கேளு
ஆடவே ஜீவனத்துக் கிடமேதென்றால் வப்பனே வழிபாடு சொல்வேனப்பா
நீடவே செம்பதுதான் களஞ்சிபத்து நெடிதான செந்தூரங் களஞ்சியொன்று
கூடவே தானுருக்கிக் கொடுத்துப்பாரு கொற்றவனே மாற்றதுவும் ஒன்பதாமே
6659.
தாமேதான் செம்பதனை வாரடித்து தண்மைபெற புடம்போட பிறவித்தங்கம்
வேமேதான் காவிக்கு முப்புக்கேகா வேதாந்தக் கண்மணியே விளக்கம்பாரு
ஆமேதான் பசுமையென்ற தங்கமப்பா வப்பனே சமுசாரிக் கானதங்கம்
நாமேதான் சொன்னபடி நாகத்தங்கம் நலம்பெறவே செய்பவனே புத்திவானே
6660.
புத்தியா மின்னமொரு போக்குசொல்வேன் புகழான வெள்ளியது பத்துக்கொன்று
வெற்றிபெற தானுருக்கி குருவொன்றீய வித்தகனே மாற்றதுவும் என்னசொல்வேன்
சத்தியமாய் எட்டரைதான் ஆணிக்கொக்கும் சன்மார்க்க புத்தியுள்ள பூபாலாகேள்
நித்தியமும் குருபதாம் புயத்தைப்போற்றி நீமகனே ஜீவித்து இருப்பீர்காணே
ஏழான சீலையது வலுவாய்ச்செய்து எழிலான ரவிதனிலே காயவைத்து
ஆழான புடமதுவுங் கோழியப்பா வப்பனே தான்போட்டு எடுத்துப்பாரு
மீளான நாகமது கட்டும்பாரு மிக்கான தவளையென்றே செப்பலாகும்
கோளாறு வாராது இந்தபாகம் கொற்றவனே நாகமது கட்டிப்போச்சே
6652.
கட்டியதோர் நாகமது யின்னஞ்சொல்வேன் கருவான கையானின் சாற்றினாலே
திட்டமுடன் தானுருக்கி சாய்ப்பாயப்பா திறமான நாகமது சீறலேகி
சட்டமுடன் தவளையது போலேயாகி தகமையுள்ள நாகமது பகையடங்கி
நட்டமில்லா களங்கமதுபோல் ஜோதியோடும் நலமான நாகத்தின் கட்டுதானே
6653.
தானான நாகமது கட்டுதன்னை தண்மையுள்ள பூபாலா சாற்றக்கேளு
மானான மருதோன்றி சாற்றினாலே மார்க்கமுடன் தானுருக்கி சாய்ப்பாயப்பா
பானான பரஞ்சுடர்போல் ஜோதிமின்னும் பாலகனே பத்துமுறை உருக்கிச்சாய்க்க
தேனான நாகமது கண்ணடைந்து யேற்றமுடன் புத்துமென்ற புட்டுதானே
6654.
புட்டான நாகமதைத் தானெடுத்து புகழான பழச்சாற்றில் உருக்கிச்சாய்க்க
திட்டமுடன் பத்துமுறை வுருக்கிப்பாரு தீர்க்கமுள்ள சவளையது போலேயாகும்
கட்டமுடன் பாராமல் விராலிதன்னை கருவாகத் தானுருக்கிச் சாய்த்துப்பாரு
நட்டமென்ன சிவந்தகொடி வேலிதன்னை நன்றாக பத்துமுறை சாய்த்திடாயே
6655.
பத்தான முறையதுஞ் சாய்த்தாயானால் பாலகனே நாகமது கொடிகட்டாம்
சத்தான நாகமது கட்டேயானால் சதகோடி சூரியர்போல் பிரகாசிக்கும்
முத்தமரும் ஞானமுள்ளோர் செய்யமாட்டார் மூதுலகில் சமுசாரி செய்யும்வித்தை
குத்தமது வாராது நாகந்தன்னை குணமுடனே செய்பவனே வாதியாமே
6656.
வாதியாம் நாகமென்ற களங்கெடுத்து வரிசைபெற சூதமது நேரேசேர்த்து
நீதியாம் ஆறுவகை ஜெயநீர்தன்னால் நீட்டியரை யெண்சாமம் தானுமப்பா
ஆதியெனும் பரஞ்சுடரை மனதிலெண்ணி சோராமல் தானரைப்பாய் மெழுகுபோலாம்
பாதிமதி சடையணியுந் தம்பிரானால் பாலகனே மெழுகது போலிருக்குந்தானே
6657.
தானான மெழுகதனை பில்லைதட்டி தகமையுடன் ரவிதனிலே காயவைத்து
கோனான குருசொன்ன வாக்குபோலே கொற்றவனே சில்லிட்டுச் சீலைசெய்து
மானான மணல்மறைவிற் புடத்தைப்போடு மகத்தான செந்தூரம் நீலவர்ணம்
பானான புடமதுவும் பத்தேயாகும் பாலகனே தானரைத்துப் போடுபோடே
6658.
போடவே செந்தூரம் அருணன்போலாம் பொங்கமுடன் தானெடுத்து செப்பக்கேளு
ஆடவே ஜீவனத்துக் கிடமேதென்றால் வப்பனே வழிபாடு சொல்வேனப்பா
நீடவே செம்பதுதான் களஞ்சிபத்து நெடிதான செந்தூரங் களஞ்சியொன்று
கூடவே தானுருக்கிக் கொடுத்துப்பாரு கொற்றவனே மாற்றதுவும் ஒன்பதாமே
6659.
தாமேதான் செம்பதனை வாரடித்து தண்மைபெற புடம்போட பிறவித்தங்கம்
வேமேதான் காவிக்கு முப்புக்கேகா வேதாந்தக் கண்மணியே விளக்கம்பாரு
ஆமேதான் பசுமையென்ற தங்கமப்பா வப்பனே சமுசாரிக் கானதங்கம்
நாமேதான் சொன்னபடி நாகத்தங்கம் நலம்பெறவே செய்பவனே புத்திவானே
6660.
புத்தியா மின்னமொரு போக்குசொல்வேன் புகழான வெள்ளியது பத்துக்கொன்று
வெற்றிபெற தானுருக்கி குருவொன்றீய வித்தகனே மாற்றதுவும் என்னசொல்வேன்
சத்தியமாய் எட்டரைதான் ஆணிக்கொக்கும் சன்மார்க்க புத்தியுள்ள பூபாலாகேள்
நித்தியமும் குருபதாம் புயத்தைப்போற்றி நீமகனே ஜீவித்து இருப்பீர்காணே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக