6621.
தானான வேதைமுகஞ் சாற்றக்கேளிர் தண்மையுள்ள பூபாலா தருமவானே
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தாமுரைத்த நீதிவண்ணம்
பானான பராபரியாள் பாதம்போற்றி பாருலகில் மாண்பர்களும் பிழைக்கவென்று
தேனான சிவயோக நிலையில்நின்று தேற்றமுடன் வேதைமுகங் கூறுவேனே
6622.
கூறுவேன் செந்தூரந் தனையெடுத்து குணமான வெள்ளிதனில் நூற்றுக்கொன்று
மாறுதலாய்க் குகையிலிட்டு வுருக்கிமைந்தா மார்க்கமுடன் தகடடித்துப் புடத்தைப்போடு
தேறுதலாய் மாற்றதுவும் என்னசொல்வேன் தேற்றமுடன் எட்டரைக்கு ஆணிக்கொக்கும்
கூறுதலாய்ப் பிறவியென்ற தங்கமாகும் குணமான செந்தூர வேதைகாணே
6623.
காணவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கைலாச புலிப்பாணி கருவுள்ளானே
தோணவே செம்பதனை யுருக்கிமைந்தா துப்புரவாய் இடைக்கிடைதான் செந்தூரத்தை
வேணமட்டும் செம்புருக்கிக் கிராசமீவாய் வித்தகனே செம்பதுவுங் களங்கமாகும்
மாணமருங் கல்வியுள்ள பூபாலாகேள் மகத்தான செம்பதனை யூதிப்போடே
6624.
ஊதவே செம்பதுவும் தங்கச்செம்பாம் வுத்தமனே நாதாக்கள் மறைத்தசெம்பு
நீதமுடன் செம்பெடுத்து செப்பக்கேளும் நிஷ்களங்க மானதொரு வெள்ளிதன்னை
தோடமுடன் நூற்றுக்கு ஒன்றுசேர்க்க துப்புரவாய் மாற்றதுவும் பதினாறாகும்
வாதமது காணவென்றால் இதுவேவாதம் வளம்பெரிய நாதாக்கள் வாதம்பாரே
6625.
பாரேதான் வாரடித்துப் புடந்தான்போடு பாதகாண வெள்ளியது செம்பினாலே
நேரேதான் மாற்றதுவும் அதிகங்காணும் நேர்மையுள்ள பிறவியென்ற தங்கமாச்சு
சீரேதான் இத்தங்கம் சிவயோகத்தங்கம் சிறப்பான மாண்பர்களுக் குகந்ததங்கம்
ஆரோதான் சொல்வாரோ யுந்தமக்கு வப்பனே யானுரைத்தேன் உண்மைபாரே
6626.
உண்மையாம் நவலோக செந்தூரத்தை வுத்தமனே உந்தனுக்கு ஓதினேன்யான்
வண்ணமுடன் சீவனத்துக் கிடமதாக வளம்பெரிய செந்தூரம் பதனம்பண்ணு
எண்ணரிய நற்பொருளை குருவாயெண்ணி எளிதான வறைமை வருங்காலந்தன்னில்
கண்மறையுங் காலமது தானறிந்து கண்மணியே சீவனத்துக் கிடந்தான்கொள்ளே
6627.
கொள்ளவே வருமைவருங் காலந்தன்னில் கொற்றவனே நவலோக செந்தூரத்தை
கள்ளமது வாராமல் மைந்தாகேளு கணக்குடனே நாளொன்றுக் கிருநேரந்தான்
வள்ளலுயர் வணிகரிடம் சென்றுமல்லோ வகையுடனே பணவிடைதான் பொன்தான்யீய்ந்து
உள்ளவரை சீவியநா ளுள்ளமட்டும் வுத்தமனே காலமது கழிக்கநன்றே
6628.
நன்றான செந்தூரம் பதனம்பண்ணு நாதாக்கள் மறைத்துவைத்த செந்தூரந்தான்
குன்றான மலைபழுக்கும் நவலோகந்தான் கொற்றவனே கருமிகட்கு மனம்விடாதே
தின்றாலும் ஒருவனாய் மனதுவந்து தீர்க்கமுடன் மருமமதா யுண்பாயப்பா
அன்றெறித்த ஆதிசிவன் உந்தனுக்கு வப்பனே தான்கொடுத்த வேதையாமே
6629.
வேதையா மின்னமொரு போக்குசொல்வேன் வேதாந்தக் கண்மணியே புனிதவானே
கோதையர்கள் மாயவலை சிக்கிடாதே கொற்றவனே சிக்கினால் மனம்விள்ளாதே
மாதாவின் சீர்பதத்தை தாரிணியில் எப்போதும் தலைமேற் கொண்டு
சீதையுடன் ராமருந்தான் இருந்தநேர்மை செப்பினதோர் கதைதனையே கண்டீர்தானே
6630.
கண்டதொரு மாண்பர்களுக் கிந்தலோகம் கருவான ரோகமது போவதற்கும்
பண்டுளவ மாலையணி கிருஷ்ணாவதாரன் பார்மாலை யாகவல்லோ பூண்டுகொண்டு
தண்டுளவ துளசியென்ற மூலிச்சாற்றால் சட்டமுடன் நவலோக செந்தூரத்தை
கொண்டிடவே யனுபானம் பணவிடைதானப்பா கொற்றவனே ரோகமது தீருங்காணே
தானான வேதைமுகஞ் சாற்றக்கேளிர் தண்மையுள்ள பூபாலா தருமவானே
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தாமுரைத்த நீதிவண்ணம்
பானான பராபரியாள் பாதம்போற்றி பாருலகில் மாண்பர்களும் பிழைக்கவென்று
தேனான சிவயோக நிலையில்நின்று தேற்றமுடன் வேதைமுகங் கூறுவேனே
6622.
கூறுவேன் செந்தூரந் தனையெடுத்து குணமான வெள்ளிதனில் நூற்றுக்கொன்று
மாறுதலாய்க் குகையிலிட்டு வுருக்கிமைந்தா மார்க்கமுடன் தகடடித்துப் புடத்தைப்போடு
தேறுதலாய் மாற்றதுவும் என்னசொல்வேன் தேற்றமுடன் எட்டரைக்கு ஆணிக்கொக்கும்
கூறுதலாய்ப் பிறவியென்ற தங்கமாகும் குணமான செந்தூர வேதைகாணே
6623.
காணவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கைலாச புலிப்பாணி கருவுள்ளானே
தோணவே செம்பதனை யுருக்கிமைந்தா துப்புரவாய் இடைக்கிடைதான் செந்தூரத்தை
வேணமட்டும் செம்புருக்கிக் கிராசமீவாய் வித்தகனே செம்பதுவுங் களங்கமாகும்
மாணமருங் கல்வியுள்ள பூபாலாகேள் மகத்தான செம்பதனை யூதிப்போடே
6624.
ஊதவே செம்பதுவும் தங்கச்செம்பாம் வுத்தமனே நாதாக்கள் மறைத்தசெம்பு
நீதமுடன் செம்பெடுத்து செப்பக்கேளும் நிஷ்களங்க மானதொரு வெள்ளிதன்னை
தோடமுடன் நூற்றுக்கு ஒன்றுசேர்க்க துப்புரவாய் மாற்றதுவும் பதினாறாகும்
வாதமது காணவென்றால் இதுவேவாதம் வளம்பெரிய நாதாக்கள் வாதம்பாரே
6625.
பாரேதான் வாரடித்துப் புடந்தான்போடு பாதகாண வெள்ளியது செம்பினாலே
நேரேதான் மாற்றதுவும் அதிகங்காணும் நேர்மையுள்ள பிறவியென்ற தங்கமாச்சு
சீரேதான் இத்தங்கம் சிவயோகத்தங்கம் சிறப்பான மாண்பர்களுக் குகந்ததங்கம்
ஆரோதான் சொல்வாரோ யுந்தமக்கு வப்பனே யானுரைத்தேன் உண்மைபாரே
6626.
உண்மையாம் நவலோக செந்தூரத்தை வுத்தமனே உந்தனுக்கு ஓதினேன்யான்
வண்ணமுடன் சீவனத்துக் கிடமதாக வளம்பெரிய செந்தூரம் பதனம்பண்ணு
எண்ணரிய நற்பொருளை குருவாயெண்ணி எளிதான வறைமை வருங்காலந்தன்னில்
கண்மறையுங் காலமது தானறிந்து கண்மணியே சீவனத்துக் கிடந்தான்கொள்ளே
6627.
கொள்ளவே வருமைவருங் காலந்தன்னில் கொற்றவனே நவலோக செந்தூரத்தை
கள்ளமது வாராமல் மைந்தாகேளு கணக்குடனே நாளொன்றுக் கிருநேரந்தான்
வள்ளலுயர் வணிகரிடம் சென்றுமல்லோ வகையுடனே பணவிடைதான் பொன்தான்யீய்ந்து
உள்ளவரை சீவியநா ளுள்ளமட்டும் வுத்தமனே காலமது கழிக்கநன்றே
6628.
நன்றான செந்தூரம் பதனம்பண்ணு நாதாக்கள் மறைத்துவைத்த செந்தூரந்தான்
குன்றான மலைபழுக்கும் நவலோகந்தான் கொற்றவனே கருமிகட்கு மனம்விடாதே
தின்றாலும் ஒருவனாய் மனதுவந்து தீர்க்கமுடன் மருமமதா யுண்பாயப்பா
அன்றெறித்த ஆதிசிவன் உந்தனுக்கு வப்பனே தான்கொடுத்த வேதையாமே
6629.
வேதையா மின்னமொரு போக்குசொல்வேன் வேதாந்தக் கண்மணியே புனிதவானே
கோதையர்கள் மாயவலை சிக்கிடாதே கொற்றவனே சிக்கினால் மனம்விள்ளாதே
மாதாவின் சீர்பதத்தை தாரிணியில் எப்போதும் தலைமேற் கொண்டு
சீதையுடன் ராமருந்தான் இருந்தநேர்மை செப்பினதோர் கதைதனையே கண்டீர்தானே
6630.
கண்டதொரு மாண்பர்களுக் கிந்தலோகம் கருவான ரோகமது போவதற்கும்
பண்டுளவ மாலையணி கிருஷ்ணாவதாரன் பார்மாலை யாகவல்லோ பூண்டுகொண்டு
தண்டுளவ துளசியென்ற மூலிச்சாற்றால் சட்டமுடன் நவலோக செந்தூரத்தை
கொண்டிடவே யனுபானம் பணவிடைதானப்பா கொற்றவனே ரோகமது தீருங்காணே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக