6821.
என்றாரே சுந்தரா னந்தமூர்த்தி எழிலான காலாங்கி நாதருக்கு
வென்றிடவே என்தேவா லோகநாதா விருப்பமுடன் தங்களிடம் மனங்களித்து
சென்றுநான் வந்தேனே சீனதேசம் செம்மலுடன் அடியேனைப் பாதுகாத்து
குன்றான வுபதேசம் எந்தனுக்கு கொப்பெனவே கூறுமென்று பணிந்திட்டாரே
6822.
பணிந்துமே சுந்தரா னந்தர்தாமும் பட்சசுடன் காலாங்கி நாதருக்கு
துணிந்துமே எந்தனது மகிமைதன்னை துப்புரவாய் காட்டுகிறேன் குருவேந்தாகேள்
கணிதமுடன் மேகமண்ட லத்தில்யானும் கர்த்தாவே வாசியோகஞ் செய்துகொண்டு
பணிவுடனே வாகாசஞ் சென்றுமல்லோ பாங்குடனே மேகத்தோ டேகுவேனே
6823.
ஏகுவேன் மேகத்தோ டிணக்கமாகி எழிலான திருப்பாலின் கடலின்மேலே
போகுவேன் மேகங்கள் ஜலந்திரட்டி பொங்கமுடன் தானிறங்குங் காலந்தன்னில்
தாகுடனே மேகமது வாகாசத்தில் தகமையுடன் செல்லுமது பக்கமெல்லாம்
வாகுடனே யாகாசந் திரிந்துயானும் வளமுடனே நெடுங்காலம் இருப்பேன்தானே
6824.
தானான பூமிசஞ் சாரமில்லை தண்மையுடன் மேகத்தில் மேகமாக
கோனான மண்டலத்தில் நெடுங்காலந்தான் கொற்றவரே வாசியோகஞ் செய்துகொண்டு
தேனான மனோன்மணியை துதித்துமல்லோ தேற்றமுடன் நெடுங்காலந் தானிருந்தேன்
பானான பரஞ்சுடரே சொரூபானந்தா பரம்பொருளே வுபதேசம் பகருவீரே
6825.
பகரவென்று சுந்தரா னந்தர்கேட்ட பாருலகில் இதிகாச மகிமைகண்டு
நிகரமுடன் இவர்தமக்கு உபதேசங்கள் நீதியுடன் கூர்வதற்கு மனங்களித்து
உகரமென்ற வட்சரத்தை யுபதேசித்து வுத்தமனார் சுந்தரா னந்தருக்கு
ககரமுடன் யரகமுதல் வுயிர்களெல்லாம் கருவான வட்சரத்தை யோதினாரே
6826.
ஓதவே யஞ்சலிகள் மிகவும்பெற்று வுத்தமனார் சீனபதி கண்டுமல்லோ
நீதமுடன் விடையதுவும் பெற்றுமல்லோ நிலையான தம்பதிக்கு யேகினார்காண்
சேதமது வாராமல் சித்துதானும் ஜெகதலத்தில் நெடுங்கால மிருந்தாரல்லோ
தோதமுள்ள சித்தாதி சித்தரெல்லாம் தோறாமல் என்குருவைக் கண்டிட்டாரே
6827.
கண்டாரே யின்னமொரு கருமானங்கேள் கைலாச புலிப்பாணி கருவுள்ளானே
அண்டரண்ட தேசமெல்லாஞ் சுற்றிவந்தேன் வப்பனே பாஷாண விளைவுகண்டேன்
துண்டரிக மானதொரு விளைவுமார்க்கம் துப்புரவாய் யான்கண்டு விடமுங்கண்டேன்
சண்டமா ருதம்போலே விளைவுகண்டேன் தண்மையுள்ள பாஷாண விளைவுகேளே
6828.
கேளப்பா கருமாவின் விளைவுமார்க்கம் கெடியான டில்லிக்கு மேற்கேயப்பா
ஆளப்பா பூமியெல்லாம் சுருமாவாகும் வப்பனே நீலாஞ்சனக் கல்லுதானும்
கேளப்பா வாராது அஞ்சனங்கள் கொற்றவனே சுருமாவின் கீழ்மட்டந்தான்
கீளப்பா வஞ்சனமாம் பாறையல்லோ கெடியான கல்லினுட பூமியாமே
6829.
பூமியாம் டில்லிக்கு கிழக்கேயப்பா புகழான கெந்தகத்தின் பூமியாகும்
சாமியது கிருபையினால் விளையுங்கெந்தம் சதுரான சித்தர்களுக் குகந்தகெந்தி
வாமிசிவ காமியம்மாள் வீற்றிருக்கும் வளமான சிவப்பு கெந்தி யங்கேயுண்டு
நாமிகவே குளிகைகொண்டு சென்றேனப்பா நலமான டில்லிக்குக் கிழக்கேதானே
6830.
கிழக்கான பூமியப்பா நெடுந்தூரந்தான் கிளையான யாறுண்டு சுனைதானுண்டு
பழக்கமதாய் மாண்பர்களும் போனதில்லை பாங்கான குறும்பருட நாடேயாகும்
அழகான பூமியது சொல்லவொண்ணாது வப்பனே கெந்தகந்தான் விளையும்நாடு
தழலான செடிமரங்கள் பூண்டுமில்லை தாரணியைக் குளிகைகொண்டு கண்டிட்டேனே
என்றாரே சுந்தரா னந்தமூர்த்தி எழிலான காலாங்கி நாதருக்கு
வென்றிடவே என்தேவா லோகநாதா விருப்பமுடன் தங்களிடம் மனங்களித்து
சென்றுநான் வந்தேனே சீனதேசம் செம்மலுடன் அடியேனைப் பாதுகாத்து
குன்றான வுபதேசம் எந்தனுக்கு கொப்பெனவே கூறுமென்று பணிந்திட்டாரே
6822.
பணிந்துமே சுந்தரா னந்தர்தாமும் பட்சசுடன் காலாங்கி நாதருக்கு
துணிந்துமே எந்தனது மகிமைதன்னை துப்புரவாய் காட்டுகிறேன் குருவேந்தாகேள்
கணிதமுடன் மேகமண்ட லத்தில்யானும் கர்த்தாவே வாசியோகஞ் செய்துகொண்டு
பணிவுடனே வாகாசஞ் சென்றுமல்லோ பாங்குடனே மேகத்தோ டேகுவேனே
6823.
ஏகுவேன் மேகத்தோ டிணக்கமாகி எழிலான திருப்பாலின் கடலின்மேலே
போகுவேன் மேகங்கள் ஜலந்திரட்டி பொங்கமுடன் தானிறங்குங் காலந்தன்னில்
தாகுடனே மேகமது வாகாசத்தில் தகமையுடன் செல்லுமது பக்கமெல்லாம்
வாகுடனே யாகாசந் திரிந்துயானும் வளமுடனே நெடுங்காலம் இருப்பேன்தானே
6824.
தானான பூமிசஞ் சாரமில்லை தண்மையுடன் மேகத்தில் மேகமாக
கோனான மண்டலத்தில் நெடுங்காலந்தான் கொற்றவரே வாசியோகஞ் செய்துகொண்டு
தேனான மனோன்மணியை துதித்துமல்லோ தேற்றமுடன் நெடுங்காலந் தானிருந்தேன்
பானான பரஞ்சுடரே சொரூபானந்தா பரம்பொருளே வுபதேசம் பகருவீரே
6825.
பகரவென்று சுந்தரா னந்தர்கேட்ட பாருலகில் இதிகாச மகிமைகண்டு
நிகரமுடன் இவர்தமக்கு உபதேசங்கள் நீதியுடன் கூர்வதற்கு மனங்களித்து
உகரமென்ற வட்சரத்தை யுபதேசித்து வுத்தமனார் சுந்தரா னந்தருக்கு
ககரமுடன் யரகமுதல் வுயிர்களெல்லாம் கருவான வட்சரத்தை யோதினாரே
6826.
ஓதவே யஞ்சலிகள் மிகவும்பெற்று வுத்தமனார் சீனபதி கண்டுமல்லோ
நீதமுடன் விடையதுவும் பெற்றுமல்லோ நிலையான தம்பதிக்கு யேகினார்காண்
சேதமது வாராமல் சித்துதானும் ஜெகதலத்தில் நெடுங்கால மிருந்தாரல்லோ
தோதமுள்ள சித்தாதி சித்தரெல்லாம் தோறாமல் என்குருவைக் கண்டிட்டாரே
6827.
கண்டாரே யின்னமொரு கருமானங்கேள் கைலாச புலிப்பாணி கருவுள்ளானே
அண்டரண்ட தேசமெல்லாஞ் சுற்றிவந்தேன் வப்பனே பாஷாண விளைவுகண்டேன்
துண்டரிக மானதொரு விளைவுமார்க்கம் துப்புரவாய் யான்கண்டு விடமுங்கண்டேன்
சண்டமா ருதம்போலே விளைவுகண்டேன் தண்மையுள்ள பாஷாண விளைவுகேளே
6828.
கேளப்பா கருமாவின் விளைவுமார்க்கம் கெடியான டில்லிக்கு மேற்கேயப்பா
ஆளப்பா பூமியெல்லாம் சுருமாவாகும் வப்பனே நீலாஞ்சனக் கல்லுதானும்
கேளப்பா வாராது அஞ்சனங்கள் கொற்றவனே சுருமாவின் கீழ்மட்டந்தான்
கீளப்பா வஞ்சனமாம் பாறையல்லோ கெடியான கல்லினுட பூமியாமே
6829.
பூமியாம் டில்லிக்கு கிழக்கேயப்பா புகழான கெந்தகத்தின் பூமியாகும்
சாமியது கிருபையினால் விளையுங்கெந்தம் சதுரான சித்தர்களுக் குகந்தகெந்தி
வாமிசிவ காமியம்மாள் வீற்றிருக்கும் வளமான சிவப்பு கெந்தி யங்கேயுண்டு
நாமிகவே குளிகைகொண்டு சென்றேனப்பா நலமான டில்லிக்குக் கிழக்கேதானே
6830.
கிழக்கான பூமியப்பா நெடுந்தூரந்தான் கிளையான யாறுண்டு சுனைதானுண்டு
பழக்கமதாய் மாண்பர்களும் போனதில்லை பாங்கான குறும்பருட நாடேயாகும்
அழகான பூமியது சொல்லவொண்ணாது வப்பனே கெந்தகந்தான் விளையும்நாடு
தழலான செடிமரங்கள் பூண்டுமில்லை தாரணியைக் குளிகைகொண்டு கண்டிட்டேனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக