பக்கங்கள்

சனி, 6 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6811-6820

6811.
சித்தான சித்துமுனி நாதர்தாமும் சிறப்பான காலாங்கி தம்மிடத்தில்
பத்தியுடன் அஞ்சலிகள் மிகவுஞ்செய்து பான்மையுடன் சிரங்குனிந்து கரங்குவித்து
முத்திபெற எந்தனுக்கு உபதேசங்கள் முனிவரே செய்யவென்று வடிபணிந்து
சத்தியமாய் எந்தனைத்தான் ஆதரிக்க சட்டமுடன் கடாட்சமது வருள்செய்வீரே
6812.
அருளான வருளதுவும் பெற்றுமல்லோ வன்புடனே பூதாநாத னந்தசித்து
இருளான இருளகற்றி மையம்பூண்டு எழிலான சீனபதி விட்டுமல்லோ
குருவான டமரகனா ரந்தனாரை குறிப்புடனே காண்பதற்கு மனதிலெண்ணி
திருவான ஜோதிமயந் தன்னைக்காண தீர்க்கமுடன் தென்பொதிகை வந்திட்டாரே
6813.
வந்தாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வளமான புலிப்பாணி யறிவுள்ளானே
இந்தமா னிலத்தில் வெகுவதிசயங்கள் எழிலான சித்துமுனி கோடாகோடி 
சுந்தரனார் காலாங்கி நாதர்பக்கல் துப்புரவாய் வந்தவர்கள் லக்கோயில்லை
விந்தைகளும் மிகச்செய்தார் ரிஷியார்தாமும் விண்ணுலகு கருவூரார் சித்துபாரே
6814.
பாரப்பா புலிப்பாணி பண்புள்ளானே பாலகனே எந்தனிரு மணியேகேண்மோ
ஆரப்பா வாகாய மண்டபத்தில் வப்பனே நட்சத்திர வளவுமட்டும்
நேரப்பா வாசியைத்தான் நடத்தியல்லோ நேர்மையுடன் ஆகாயஞ் சென்றாரில்லை
கூரப்பா கருவூரான் என்றசித்து கொற்றவனே வாகாயஞ் சென்றார்காணே
6815.
காணவே கருவூரார் என்றசித்து காசினியில் மகிமைவெகு கண்டசித்து
தோணவே நடேசரைத்தா னுண்டுசெய்த தோறாத கருவூரார் என்றசித்து
மானமருங் கல்வியுள்ள சித்தரெல்லாம் மானிலத்தில் மதிப்பதற்குக் கீர்த்திகொண்ட
ஆணவமாங் காமியத்தை விட்டொழித்த வப்பனே கருவூரார் என்றசித்தே
6816.
சித்தான சித்துமுனி கருவூரார்தான் சிறப்பான காலாங்கி நாதர்முன்னே
சுத்தமுடன் காலாங்கி நாதர்தம்மை சுந்தரனார் சீனபதி சமாதிதன்னில்
வித்தகனார் பார்த்திருக்க மகிமைபூண்டு விண்ணுலகம் ஆகாயஞ் செல்வேனென்று
புத்தியுடன் நட்சத்திர வளவுமட்டும் பரஞ்சுடரே செல்வேனென்று யேகினாரே
6817.
ஏகவே வாசியோகஞ் செய்துகொண்டு எழிலான நட்சத்திர மண்டலத்தில்
போகவே மனவுறுதி கொண்டுமல்லோ பொங்கமுடன் மூன்றுமண்ட லந்தானப்பா
சாகாமல் ஆகாய மண்டலத்தில் சட்டமுடன் மூன்றுமண்ட லமிருந்து
வேகமுடன் வாசியோகஞ் செய்துகொண்டு வேட்கையுடன் பூமிதனில் இறங்கிட்டாரே
6818.
இட்டாரே கருவூரார் என்றசித்து எழிலான வையகத்தின் மகிமைகோடி
சட்டமுடன் செய்தல்லோ யாகம்பூண்டு சதுராக நெடுங்காலந் தாமிருந்தார்
திட்டமுடன் காலாங்கி நாதர்தாமும் தீர்க்கமுடன் கருவூரார் தன்தனக்கு
வாட்டமுடன் முதலியதோர் மகிமையெல்லாம் வளமுடனே உபதேசஞ் செய்தார்பாரே
6819.
பாரப்பா புலிப்பாணி பளிங்குள்ளானே பகருகிறேன் சித்தருட மகிமைதன்னை
ஊரப்பா சீனபதி தேசந்தன்னில் வுத்தமனார் காலாங்கி நாதர்தம்மை
சேரப்பா சமாதியிடம் சென்றுமல்லோ செம்மலுடன் காலாங்கி தம்மைக்காண
ஆரப்பா வென்றல்லோ காலாங்கிநாதர் வப்பனே மனதுவந்து கூறென்றாரே
6820.
கூறென்று சொல்லுகையில் சித்தரான குணமான சுந்தரா னந்தமூர்த்தி
தேறலுடன் யாரென்று வினவிக்கேட்க தெளிவான காலாங்கி நாதர்தாமும்
மாறலது வாராமல் சித்துதாமும் மகத்தான காலாங்கி நாதருக்கு
ஆறலுடன் அஞ்சலித்து மனதுவந்து வப்பனே சுந்தரனார் என்றிட்டாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக