6831.
இட்டதொரு கிழக்குக்கு தெற்கேயப்பா எழிலான திருச்சங்கு மைந்தனல்லோ
சட்டமுடன் ஆண்டிருந்த ராஜ்ஜியத்தின் சதுரான மேற்புறத்தின் ஓடையப்பா
வட்டமுள்ள பூமியது நெடுந்தூரந்தான் வளமான தாளகத்தின் பூமியாகும்
திட்டமுடன் பூமியெல்லாந் தாளகந்தான் திரமான நடுமையேறி தாரமாமே
6832.
அரிதான வரிதார மென்னசொல்வேன் வப்பனே வதின்கீழே மனோசிலையுமாகும்
சரிதான விளைவல்லோ பூமியெல்லாம் சாங்கமுடன் தாளகத்தின் பூமியாகும்
பரியான தங்கமது விளையும்நாடு பாருலகில் நாதாக்கள் கண்டதுண்டு
திரிலோகந் தான்மதிக்கும் தங்கமப்பா தீர்க்கமுடன் விளைகின்ற நாடுதானே
6833.
நாடான நாடதுதான் சொல்வேனப்பா நலமான புலிப்பாணி நன்புள்ளானே
காடான காடெல்லாம் யான்திரிந்து கனமான குளிகையது கொண்டுமல்லோ
மேடான பூமியது திரிந்துமேதான் மேன்மையுள்ள கற்பரிபாஷாணங் கண்டேன்
தாடாண்மை யுள்ளதொரு பாஷாணந்தான் தாரணியில் தங்கமிகச் செய்யலாமே
6834.
செய்யவே கற்பரிபாஷாணந் தன்னால் செயலான நவலோகம் வெல்லலாகும்
துய்யதொரு நவலோகம் நீறிப்போகும் துப்புரவாய் லோகங்கள் சத்துருவேயாகும்
வெய்யவே நடுமையந் தன்னிலப்பா வேட்கமெனும் அவுல்பாஷாணந் தானாகும்
பையவே யதின்கீழே தானிருக்கும் பாங்கான ஜலபாஷாணந் தான்பாரே
6835.
பாரப்பா யின்னமொரு பரிகாரந்தான் பாலகனே ஸ்தூலமது வுறுதிசெய்ய
ஆரப்பா மணலிரும்பு கொண்டுவந்து வப்பனே வுருக்கியல்லோ தகடடித்து
சீரப்பா முன்சொன்ன பாஷாணத்தை சிறப்புடனே நிம்பழத்தின் சாற்றினாலே
ஊரப்பா மூன்றுவகை பாஷாணந்தான் வுத்தமனே தானரைப்பாய் சாமம்நாலே
6836.
நாலான சாமமது தானரைத்து நலமான இரும்பதனை தகடதாக்கி
பாலான சரக்கெல்லாம் மேலேபூசி பட்சமுடன் ரவிதனிலே காயவைத்து
மாலான சில்லிட்டுச் சீலைசெய்து மார்க்கமுடன் கோழியென்ற புடந்தான்போடு
சூலான வயமதுவும் களங்கமாகி துப்புரவாய்த் தானிருக்கும் வயந்தான்காணே
6837.
காணவே யவரெலாந் தானெடுத்து கருவாகப் புடமதுவாய்ச் சேர்த்துக்கொண்டு
தோணவே கடைசரக்கு செப்பக்கேளிர் தோறாமல் கெவுரியென்ற வீரந்தானும்
மாணவே கெந்தகமும் லிங்கந்தானும் மகத்தான சிங்கியுடன் பூரமாகும்
நீணவே வகைவகைக்குப் பலந்தான்காலாய் நிஷ்களங்க மாகவல்லோ பழச்சார்தானே
6838.
தானான சாரதுவும் பிழிந்துகொண்டு தண்மையுள்ள வயப்பொடியாங் களங்குதன்னில்
தேனான செம்பழத்தின் சாற்றினாலே தெளிவுறவே தானரைப்பாய் நாலுசாமம்
பானான வில்லையது லகுவாய்ச்செய்து பாலகனே ரவிதனிலே காயவைத்து
மானான வோட்டிலிட்டுச் சீலைசெய்து மகத்தான மண்மறைவிற் புடத்தைப்போடே
6839.
போடேதான் இப்படியே புடந்தான்போடு பொங்கமுடன் தானரைத்து வில்லைதட்டி
நீடேதான் முன்னுரைத்த பாகம்போலே நீதியுடன் வில்லைதட்டிக் காயவைத்து
கூடேதான் சில்லிட்டுச் சீலைசெய்து கொற்றவனே கோழியென்ற புடந்தான்போடு
போடேதான் மண்மறைவிற் பத்துமுறைபோடு பொலிவான வயமதுவும் சிவக்கும்பாரே
6840.
சிவக்குமே அயமதுவும் பாஷாணத்தால் சிறப்புடைய குற்றமது பதினொன்றும்போம்
தவப்பலனைக் கொண்டவர்க்கு சித்தியாகும் தகமையுள்ள மணலிரும்பு செந்தூரந்தான்
தவப்பனைக் கொண்டோர்கள் காணமாட்டார் வப்பனே புத்தியுள்ள புனிதவானே
பவக்கடலை விட்டகற்றி பாலாநீயும் பாருலகில் இருப்பதுவே புண்ணியமாமே
இட்டதொரு கிழக்குக்கு தெற்கேயப்பா எழிலான திருச்சங்கு மைந்தனல்லோ
சட்டமுடன் ஆண்டிருந்த ராஜ்ஜியத்தின் சதுரான மேற்புறத்தின் ஓடையப்பா
வட்டமுள்ள பூமியது நெடுந்தூரந்தான் வளமான தாளகத்தின் பூமியாகும்
திட்டமுடன் பூமியெல்லாந் தாளகந்தான் திரமான நடுமையேறி தாரமாமே
6832.
அரிதான வரிதார மென்னசொல்வேன் வப்பனே வதின்கீழே மனோசிலையுமாகும்
சரிதான விளைவல்லோ பூமியெல்லாம் சாங்கமுடன் தாளகத்தின் பூமியாகும்
பரியான தங்கமது விளையும்நாடு பாருலகில் நாதாக்கள் கண்டதுண்டு
திரிலோகந் தான்மதிக்கும் தங்கமப்பா தீர்க்கமுடன் விளைகின்ற நாடுதானே
6833.
நாடான நாடதுதான் சொல்வேனப்பா நலமான புலிப்பாணி நன்புள்ளானே
காடான காடெல்லாம் யான்திரிந்து கனமான குளிகையது கொண்டுமல்லோ
மேடான பூமியது திரிந்துமேதான் மேன்மையுள்ள கற்பரிபாஷாணங் கண்டேன்
தாடாண்மை யுள்ளதொரு பாஷாணந்தான் தாரணியில் தங்கமிகச் செய்யலாமே
6834.
செய்யவே கற்பரிபாஷாணந் தன்னால் செயலான நவலோகம் வெல்லலாகும்
துய்யதொரு நவலோகம் நீறிப்போகும் துப்புரவாய் லோகங்கள் சத்துருவேயாகும்
வெய்யவே நடுமையந் தன்னிலப்பா வேட்கமெனும் அவுல்பாஷாணந் தானாகும்
பையவே யதின்கீழே தானிருக்கும் பாங்கான ஜலபாஷாணந் தான்பாரே
6835.
பாரப்பா யின்னமொரு பரிகாரந்தான் பாலகனே ஸ்தூலமது வுறுதிசெய்ய
ஆரப்பா மணலிரும்பு கொண்டுவந்து வப்பனே வுருக்கியல்லோ தகடடித்து
சீரப்பா முன்சொன்ன பாஷாணத்தை சிறப்புடனே நிம்பழத்தின் சாற்றினாலே
ஊரப்பா மூன்றுவகை பாஷாணந்தான் வுத்தமனே தானரைப்பாய் சாமம்நாலே
6836.
நாலான சாமமது தானரைத்து நலமான இரும்பதனை தகடதாக்கி
பாலான சரக்கெல்லாம் மேலேபூசி பட்சமுடன் ரவிதனிலே காயவைத்து
மாலான சில்லிட்டுச் சீலைசெய்து மார்க்கமுடன் கோழியென்ற புடந்தான்போடு
சூலான வயமதுவும் களங்கமாகி துப்புரவாய்த் தானிருக்கும் வயந்தான்காணே
6837.
காணவே யவரெலாந் தானெடுத்து கருவாகப் புடமதுவாய்ச் சேர்த்துக்கொண்டு
தோணவே கடைசரக்கு செப்பக்கேளிர் தோறாமல் கெவுரியென்ற வீரந்தானும்
மாணவே கெந்தகமும் லிங்கந்தானும் மகத்தான சிங்கியுடன் பூரமாகும்
நீணவே வகைவகைக்குப் பலந்தான்காலாய் நிஷ்களங்க மாகவல்லோ பழச்சார்தானே
6838.
தானான சாரதுவும் பிழிந்துகொண்டு தண்மையுள்ள வயப்பொடியாங் களங்குதன்னில்
தேனான செம்பழத்தின் சாற்றினாலே தெளிவுறவே தானரைப்பாய் நாலுசாமம்
பானான வில்லையது லகுவாய்ச்செய்து பாலகனே ரவிதனிலே காயவைத்து
மானான வோட்டிலிட்டுச் சீலைசெய்து மகத்தான மண்மறைவிற் புடத்தைப்போடே
6839.
போடேதான் இப்படியே புடந்தான்போடு பொங்கமுடன் தானரைத்து வில்லைதட்டி
நீடேதான் முன்னுரைத்த பாகம்போலே நீதியுடன் வில்லைதட்டிக் காயவைத்து
கூடேதான் சில்லிட்டுச் சீலைசெய்து கொற்றவனே கோழியென்ற புடந்தான்போடு
போடேதான் மண்மறைவிற் பத்துமுறைபோடு பொலிவான வயமதுவும் சிவக்கும்பாரே
6840.
சிவக்குமே அயமதுவும் பாஷாணத்தால் சிறப்புடைய குற்றமது பதினொன்றும்போம்
தவப்பலனைக் கொண்டவர்க்கு சித்தியாகும் தகமையுள்ள மணலிரும்பு செந்தூரந்தான்
தவப்பனைக் கொண்டோர்கள் காணமாட்டார் வப்பனே புத்தியுள்ள புனிதவானே
பவக்கடலை விட்டகற்றி பாலாநீயும் பாருலகில் இருப்பதுவே புண்ணியமாமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக