6851.
காணவே செந்தூரம் மண்டலந்தான் கருவாகக் கொண்டவர்க்குப் பலனைக்கேளு
தோணவே தேனதனில் கொண்டாலல்லோ தோறாமல் தேகமது இருக்கும்பாரு
வேணதொரு ரோகமெல்லாம் நீங்கியல்லோ விரைக்குமே நரம்பதுவும் துடிப்புமெத்த
பாணமெனும் மன்மதனார் வேகந்தன்னை பாலிக்கும் வயத்தினுட வீரங்காணே
6852.
வீரமாம் வாசியது மேலோடாது வீறான நரம்புகளும் முருக்குமேறி
சாரமுடன் தேகமது வலுவுமெத்த சட்டையது மூன்றுவிசை தள்ளும்பாரு
கோரமென்ற தேகமது வழகுமீறி கொற்றவனே நெடுங்கால மிருக்கலாகும்
பாரமென்ற வயமதுவும் சொல்லப்போமோ பாராளுஞ் சித்தர்முனி வேதையாச்சே
6853.
வேதையா மின்னமொரு போக்குசொல்வேன் வேதாந்த புலிப்பாணி புண்ணியவானே
பாதையாம் மதிதனிலே பத்துக்கொன்று பட்சமுடன் தானுருக்கி குருவொன்றீய
சோதனைக்கு இடையாது வுறத்ததங்கம் சோராமல் லிங்கமிட்டு வூதிப்போடு
வேதைமுறை சொன்னவழி தப்பாதப்பா வேதாந்த சித்தினுட வுண்மைபாரே
6854.
உண்மையாம் இன்னமொரு பாகஞ்சொல்வேன் வுத்தமனே புலிப்பாணி புனிதவானே
திண்ணமுடன் அயமதுவும் பலந்தான்பத்து திறமான நிம்பழத்தின் சாற்றினாலே
வண்ணமுடன் தானரைப்பாய் நாலுசாமம் வாகுடனே கழுவியல்லோ வயமெடுத்து
கண்ணமுடன் கல்வமதில் இட்டுமைந்தா தகமையுடன் பழமதுதான் செப்பக்கேளே
6855.
செப்பவென்றால் கருநாகப் பழரசத்தால் செம்மலுடன் தானரைப்பாய் நாலுசாமம்
ஒப்பமுடன் முப்பூவுங் களஞ்சிசேர்த்து வுத்தமனே தானரைத்து பில்லைதட்டி
தப்பிதங்கள் வாராமல் ரவியில்வைத்து சட்டமுடன் சில்லிட்டுச் சீலைசெய்து
மெய்ப்புடனே கோழியென்ற புடந்தான்போடு மேலான செந்தூர மாகுந்தானே
6856.
தானான செந்தூரந் தனையெடுத்து தண்மையுடன் முன்போல கல்வமிட்டு
தேனான கருநாக பழரசத்தால் தேற்றமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
பானான பில்லையது லகுவாய்ச்செய்து பாலகனே ரவிமுகத்தில் காயப்போடு
மானான சில்லிட்டுச் சீலைசெய்து மார்க்கமுடன் முன்போல புடத்தைப்போடே
6857.
போடேதான் பத்துமுறை இப்படியேபோடு பொங்கமுடன் அயமதுவும் செந்தூரந்தான்
நாடேதான் முறைபோலே செய்வாயானால் நலமான செந்தூரம் வேதையாகும்
கூடேதான் ஆவின்பால் வெண்ணைதன்னில் குணமுடனே நெல்லிடைதான் கொண்டாயானால்
தேடேதான் காலாங்கி கடாட்சத்தாலே தெளிவாக தேகமது மின்னும்பாரே
6858.
பாரேதான் மண்டலந்தான் கொண்டபோது பாங்கான தேகமது சட்டைதள்ளும்
நேரேதான் தேகமது வண்டுபோலாம் நெடிதான வாசியது மேல்நோக்காது
கூரேதான் தேகமது கற்றூணாகும் கொற்றவனே யமனுக்கு நாளுமில்லை
வேரேதான் கற்பமது வேண்டுமோதான் வித்தகனே வயத்தினுட மகிமைகாணே
6859.
காணவே யின்னமொரு மகிமைசொல்வேன் கருவான புலிப்பாணி கணிதவானே
தோணவே வெள்ளியது களஞ்சிபத்து தோறாமல் தானுருக்கி மருந்தொன்றீய
மாணவே வெள்ளியது பழுக்கும்பாரு மகத்தான மாற்றதுவும் என்னசொல்வேன்
வேணபடி வங்கமதை கொடுத்தேயூது வேட்கையுடன் வர்ணமது யேகாதன்றே
6860.
ஏகாது உப்புக்குங் காவிக்குந்தான் எழிலான செந்தூர மென்னசொல்வேன்
போகாது புடத்துக்கு வுறுதிதங்கம் பொங்கமுடன் நாதாக்கள் உரைத்ததில்லை
சாகாமல் இருந்திடலாம் செந்தூரத்தால் சதாகாலங் கற்பமது வுண்டுபாரு
வேகாது தேகமது தீயிற்பட்டால் வெந்தாலும் மேனியது வினைகொள்ளாதே
காணவே செந்தூரம் மண்டலந்தான் கருவாகக் கொண்டவர்க்குப் பலனைக்கேளு
தோணவே தேனதனில் கொண்டாலல்லோ தோறாமல் தேகமது இருக்கும்பாரு
வேணதொரு ரோகமெல்லாம் நீங்கியல்லோ விரைக்குமே நரம்பதுவும் துடிப்புமெத்த
பாணமெனும் மன்மதனார் வேகந்தன்னை பாலிக்கும் வயத்தினுட வீரங்காணே
6852.
வீரமாம் வாசியது மேலோடாது வீறான நரம்புகளும் முருக்குமேறி
சாரமுடன் தேகமது வலுவுமெத்த சட்டையது மூன்றுவிசை தள்ளும்பாரு
கோரமென்ற தேகமது வழகுமீறி கொற்றவனே நெடுங்கால மிருக்கலாகும்
பாரமென்ற வயமதுவும் சொல்லப்போமோ பாராளுஞ் சித்தர்முனி வேதையாச்சே
6853.
வேதையா மின்னமொரு போக்குசொல்வேன் வேதாந்த புலிப்பாணி புண்ணியவானே
பாதையாம் மதிதனிலே பத்துக்கொன்று பட்சமுடன் தானுருக்கி குருவொன்றீய
சோதனைக்கு இடையாது வுறத்ததங்கம் சோராமல் லிங்கமிட்டு வூதிப்போடு
வேதைமுறை சொன்னவழி தப்பாதப்பா வேதாந்த சித்தினுட வுண்மைபாரே
6854.
உண்மையாம் இன்னமொரு பாகஞ்சொல்வேன் வுத்தமனே புலிப்பாணி புனிதவானே
திண்ணமுடன் அயமதுவும் பலந்தான்பத்து திறமான நிம்பழத்தின் சாற்றினாலே
வண்ணமுடன் தானரைப்பாய் நாலுசாமம் வாகுடனே கழுவியல்லோ வயமெடுத்து
கண்ணமுடன் கல்வமதில் இட்டுமைந்தா தகமையுடன் பழமதுதான் செப்பக்கேளே
6855.
செப்பவென்றால் கருநாகப் பழரசத்தால் செம்மலுடன் தானரைப்பாய் நாலுசாமம்
ஒப்பமுடன் முப்பூவுங் களஞ்சிசேர்த்து வுத்தமனே தானரைத்து பில்லைதட்டி
தப்பிதங்கள் வாராமல் ரவியில்வைத்து சட்டமுடன் சில்லிட்டுச் சீலைசெய்து
மெய்ப்புடனே கோழியென்ற புடந்தான்போடு மேலான செந்தூர மாகுந்தானே
6856.
தானான செந்தூரந் தனையெடுத்து தண்மையுடன் முன்போல கல்வமிட்டு
தேனான கருநாக பழரசத்தால் தேற்றமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
பானான பில்லையது லகுவாய்ச்செய்து பாலகனே ரவிமுகத்தில் காயப்போடு
மானான சில்லிட்டுச் சீலைசெய்து மார்க்கமுடன் முன்போல புடத்தைப்போடே
6857.
போடேதான் பத்துமுறை இப்படியேபோடு பொங்கமுடன் அயமதுவும் செந்தூரந்தான்
நாடேதான் முறைபோலே செய்வாயானால் நலமான செந்தூரம் வேதையாகும்
கூடேதான் ஆவின்பால் வெண்ணைதன்னில் குணமுடனே நெல்லிடைதான் கொண்டாயானால்
தேடேதான் காலாங்கி கடாட்சத்தாலே தெளிவாக தேகமது மின்னும்பாரே
6858.
பாரேதான் மண்டலந்தான் கொண்டபோது பாங்கான தேகமது சட்டைதள்ளும்
நேரேதான் தேகமது வண்டுபோலாம் நெடிதான வாசியது மேல்நோக்காது
கூரேதான் தேகமது கற்றூணாகும் கொற்றவனே யமனுக்கு நாளுமில்லை
வேரேதான் கற்பமது வேண்டுமோதான் வித்தகனே வயத்தினுட மகிமைகாணே
6859.
காணவே யின்னமொரு மகிமைசொல்வேன் கருவான புலிப்பாணி கணிதவானே
தோணவே வெள்ளியது களஞ்சிபத்து தோறாமல் தானுருக்கி மருந்தொன்றீய
மாணவே வெள்ளியது பழுக்கும்பாரு மகத்தான மாற்றதுவும் என்னசொல்வேன்
வேணபடி வங்கமதை கொடுத்தேயூது வேட்கையுடன் வர்ணமது யேகாதன்றே
6860.
ஏகாது உப்புக்குங் காவிக்குந்தான் எழிலான செந்தூர மென்னசொல்வேன்
போகாது புடத்துக்கு வுறுதிதங்கம் பொங்கமுடன் நாதாக்கள் உரைத்ததில்லை
சாகாமல் இருந்திடலாம் செந்தூரத்தால் சதாகாலங் கற்பமது வுண்டுபாரு
வேகாது தேகமது தீயிற்பட்டால் வெந்தாலும் மேனியது வினைகொள்ளாதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக