பக்கங்கள்

சனி, 6 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6841-6850

6841.
புண்ணியனா யிருக்கவென்றால் பூபாலாகேள் புகழான செந்தூர முண்பதற்கு
திண்ணமுடன் தேனதனில் மண்டலந்தான் தீரமுடன் தானிருந்த தேகங்கற்றூண்
வண்ணமுடன் வாசியது மேல்நோக்காது வளமான செந்தூரந் தானுமல்லோ
நண்ணமுடன் சட்டையது தள்ளும்பாரு நாதாந்த சித்தர்கள்தான் ஆடுங்கூத்தே
6842.
கூத்தான செந்தூரம் மண்டலந்தான் குறிப்புடனே கொண்டவர்க்குப் பலனைக்கேளு
நீத்தமுடன் நெடுங்கால மிருக்கலாகும் நெடியான ரோகமது கடலேபோகும்
சாத்தகி யாழ்வார்தானுங் கொண்டகற்பம் தாரணியில் வெகுகால மிருந்தாரல்லோ
பூத்தமலர் முகசுகுண மாதர்தம்மை புகழாக வாயிரம்பேர் கூடலாமே
6843.
கூடலாங் கிருஷ்ணாவ தாரனல்லோ கொற்றவனார் சிலகாலம் உண்டகற்பம்
ஆடலாம் தேசவிளை யாட்டையெல்லாம் வப்பனே வயமென்ற செந்தூரத்தால்
ஓடலாம் வெகுதூரம் நடக்கலாகும் வுத்தமனே நடந்தாலும் யிளைப்போயில்லை
தேடலாம் வெகுகோடி திரவியங்கள் தேடினால் பலனொன்று மில்லைதானே
6844.
இல்லையே செந்தூரம் வேதைகாண எழிலான வெள்ளியது களஞ்சிநூறு
தொல்லையெனும் பிறவியது மாற்றம்போல தோறாமல் வர்ணமது சொல்லப்போமோ
கொல்லனது வுலையில் வுருக்கியல்லோ கொற்றவனே செந்தூரங் களஞ்சிதாக்கு
வல்லதொரு வெள்ளியது பழுப்புமாகி மகத்தான யேமமது சொல்லொண்ணாதே
6845.
ஒண்ணாத தங்கமது மாற்றுசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் மறைத்துவைத்து
தண்ணமுடன் மாற்றதுவோ லக்கோயில்லை தாடாண்மை கொண்டடொரு வுறத்ததங்கம்
பண்ணுதற்கு விட்டகுறை யில்லாவிட்டால் பலிக்குமோ பாராளும் மாண்பருக்கு
நண்ணமுடன் மனதுவந்து இந்தபாகம் எழிலாக செய்பவர்க்கு பலிக்குந்தானே
6846.
பலிக்குமே இத்தங்கம் பிறவித்தங்கம் பாரிலுள்ள சிவயோகிக் கானதங்கம்
ஒலிக்குமே ஜெகஜோதியான தங்கம் வுத்தமனே கருமிகட்கு வாய்க்காதப்பா
நலியாளர் தங்களுக்கு இந்ததங்கம் நாதியற்ற பேர்களுக்கு நவிலவேண்டும்
பலியாது கருமிகளாய் இருப்பாரானால் பாருலகில் கருமிகட்கு வாய்க்காதன்றே
6847.
அன்றான யின்னமொரு போக்குசொல்வேன் வப்பனே புலிப்பாணி யன்புள்ளானே
குன்றான செந்தூர மென்னசொல்வேன் குறிப்பான வயமதுவும் பலந்தான்பத்து
வென்றிடவே நிம்பழத்தின் சாற்றினாலே விருப்பமுடன் சுத்தியது செய்துமல்லோ
நன்றாகக் கல்வமதி லிட்டுமைந்தா நலமுடனே தானரைக்க மருந்தைக்கேளே
6848.
கேளப்பா முருங்கைவேர் பட்டைதன்னை கிருபையுடன் தானிடித்து சார்பிழிந்து
பாளப்பா போகாமல் பத்துசாமம் பாங்குடனே தானரைப்பாய் சுன்னநீரும்
ஆளப்பா பலமதுவும் ஒன்றேயாகும் அப்பனே தான்போட்டு வரைத்துமல்லோ
சூளப்பா வில்லையது லகுவாய்ச்செய்து சுந்தரனே ரவிதனிலே காயப்போடே
6849.
காய்ந்தபின்பு பில்லையதை எடுத்துமைந்தா கருவாக வோட்டிலிட்டுச் சீலைசெய்து
வாய்ந்ததொரு புடமதுவும் கெஜமேயாகும் வளமுடனே போட்டபின்பு எடுத்துப்பாரு
தீய்ந்துமே போகாமல் செந்தூரந்தான் தீர்க்கமுடன் அருணனது நிறம்போலாகும்
மாய்ந்துமே அயமதுவும் மடிந்துமல்லோ மகத்தான செந்தூரஞ் சொல்லொண்ணாதே
6850.
சொல்லவென்றால் நாவில்லை பாவுமில்லை துப்புரவாய் நாதாக்கள் மறைத்தசித்து
வெல்லவே யிவ்வேதை யார்தான்செய்வார் விதியாளி செய்வாரே மற்றோர்காணார்
புல்லவே செந்தூர மகிமைதன்னை பூதலத்தில் மாண்பர்களுங் கண்டதில்லை
அல்லவென்றால் செந்தூரம் கோடிபாகம் வப்பனே கண்டதுண்டு மெத்தகாணே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக