பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 4911-4920

4911.
சென்றேனே புலிப்பாணி மைந்தாகேளு சிறப்பான காலாங்கி கடாட்சந்தன்னில்
குன்றேறி குளிகைதனைக் கொண்டுமல்லோ கொற்றவனே மேருகிரி தன்னிற்சென்றேன்
அன்றுரித்த மான்தோலும் புலித்தோலுமாக வப்பனே வாயிரம்பேர் ரிஷிகள்கண்டேன்
தென்றிசையில் அகஸ்தியனார் முனிவர்போலும் தேற்றமுடன் ஆயிரம்பேர் ரிஷிகண்டேனே
4912.
கண்டேனே பதினைந்தாம் வரையிலப்பா கயிலாச நாதருட சீஷவர்க்கம்
பண்டுபோல் மேனியது ஜோதிமின்ன பாங்குடனே தேவரிஷி வாயிரம்பேர்
கொண்டல்லோ பாரிஜாத புட்பந்தன்னை கொம்பனையாள் மனோன்மணியாள் தன்றனக்கு
தொண்டுடனே யர்ச்சனைகள் மிகவுங்கூறி தோறாமல் யாகமது செய்வார்பாரே
4913.
பாரேதான் யாகமது செய்துகொண்டு பாங்குடனே சித்துமுனி இருக்கும்போது
நேரேதான் பதினைந்தாம் வரையில்யானும் கெடிதான குளிகைகொண்டு செல்லும்போது
தீரேதான் ஆயிரம்பேர் சித்துதாமும் தீர்க்கமுடன் எந்தனையும் கண்டுமல்லோ
சேரேதான் எந்தனது பக்கல்வந்து சிறப்புடனே யாரென்று கேட்டிட்டாரே
4914.
கேட்டவுடன் அடியேனும் காலாங்கிதம்மை கிருபையுடன் யென்மனதில் எண்ணங்கொண்டு
வாட்டமுடன் அவர்பாத சீஷனென்றேன் வளமையுடன் எந்தனுக்கு யிதவுகூறி
நீட்டமுடன் பதினைந்தாம் வரையில்தானும் நீதிதப்பி வந்ததினால் உந்தமக்கு
தாட்டிகமாய் சாபமது வந்துசேரும் தயவுள்ள பாலகனே என்றிட்டாரே
4915.
என்றுமே கூறலுமே யடியேன்தானும் எழிலான காலாங்கி கடாட்சத்தாலே
குன்றுமே சாபமதை நிவர்த்திசெய்து குளிகைகொண்டு ரிஷியாரை யானுங்கண்டு
வென்றிடவே எந்தனையும் ஆதரித்து வேகமுடன் கோபமதை நிவர்த்திசெய்து
தென்றிசையில் கும்பமுனி தன்னைப்போலே தேற்றமுடன் எந்தனையும் ஆட்கொள்வீரே
4916.
கொள்ளவே யடியேனும் மனதுவந்து கோடியுகம் தவஞ்செய்யும் ரிஷியார்தம்மை
மெள்ளவே யடியேனும் தாள்பணிந்து வேதாந்ததாயி மனோன்மணியாள் தன்னை 
தெள்ளமுர்த மானதொரு ஜோதிபீடம் தேற்றமுடன் அடியேனும் தான்பணிந்து
உள்ளபடி எந்தனுக்கு தெரிசனத்தை வுத்தமரே காட்டவென்று பணிந்திட்டேனே
4917.
பணிந்துமே நிற்கையிலே சித்தர்தாமும் பான்மையுடன் பதினைந்தாம் வரையின்மேலே
துணிவுடனே யடியேனைத் தாமழைத்து துப்புறவாய் மனோன்மணியாள் பீடந்தன்னை
கணிதமுடன் எந்தனுக்குக் காண்பித்தல்லோ கைலாச மனோன்மணியாள் ரூபந்தன்னை
துணிந்திடவே கண்டவர்கள் யாருமில்லை துப்புரவாய் ஜோதிமயங் காணலாச்சே
4918.
ஆச்சப்பா வையகத்தில் வெகுகோடிசித்து அம்தகையாள் மனோன்மணியைக் கண்டதில்லை
மூச்சடங்கி சென்றதொரு நெடுங்காலசித்து மூதுலகில் யாரேனுங் கண்டதில்லை
பாச்சலுடன் மனோன்மணியாள் சொரூபவொளி கண்டசித்து அனந்தசித்து கோடியுண்டே
4919.
கோடான கோடியும் நாலுயுகமப்பா குவலயத்தில் மனோன்மணியைக் கண்டதில்லை
நாடாண்மை தனில்வாழும் ரிஷிகள்தேவர் நலமான சித்துமுனி நாதர்தாமும்
காடாண்மை கொண்டதொரு மனோன்மணியாள்ரூபம் தாரணியில் யாவருந்தான் கண்டதில்லை
பாடாண்மை கொண்டதொரு ஜோதிமயந்தன்னை பாருலகில் கண்டவர்கள் கோடிபேரே
4920.
பேரான திருக்கமலம் வீற்றிருக்கும் பெருமையுள்ள மனோன்மணியாள் பீடந்தன்னை
கீரான சித்துமுனி நாதர்தாமும் சிறப்புடனே பாடிவைத்தார் பலநூல்தன்னில்
நேரான சாத்திரத்தின் வுளவுகண்டோர் நேர்மையுடன் சின்மயத்தை மனதிலுன்னி
ஆரான பீடமென்ற ஆராதாரம் வப்பனே யொடுங்கிநின்ற சமாதிதானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக