4951.
அருளான விடையதுவும் பெற்றுமேதான் வன்பான குளிகையது யானும்பூண்டு
இருளான மலைதனிலே யான்கடந்து எழிலான பதினெட்டாம் வரையிற் சென்றேன்
மருளான மார்க்கண்டர் தன்னைக்காண மார்க்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு
பொருளான மேருகிரி யடியேன்தானும் பொங்கமுடன் பதினெட்டாம் வரைசென்றேனே
4952.
வரையான மார்கண்டன் சமாதிகாண வளமுடனே யடியேனும் சென்றபோது
திரைகடலுஞ் சத்தசாகரமுங் கடந்து திறளான மனுகோடி முனிவரெல்லாம்
நரையகற்றி காயாதி கொண்டுமல்லோ நவகோடி ரிஷியாரும் முனிவர்தானும்
வரைகோடி லக்கில்லை கணக்கோயில்லை வளமான பதினெட்டாம் வரையிற்றானே
4953.
வரையான சமாதியது வனேகங்கண்டேன் வளமான மார்கண்டன் லிங்கந்தன்னை
நிரையான நாளொன்று பூசைமார்க்கம் நீதியுடன் ஆயிரமாஞ் சொச்சந்தன்னை
கரையான லிங்கமகா பூசை கருவாக மார்க்கண்டன் செய்யும்மார்க்கம்
திரைகடலுங் கொள்ளாது வேதயாகந் திரளாழி லிங்கமதை கண்டிட்டேனே
4954.
கண்டேனே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கருவான புலிப்பாணி மைந்தாகேளு
கொண்டேனே காலாங்கி கிருபையாலே கோடியுகம் தானிருக்க குளிகைபெற்றேன்
துண்டரிக மாகவல்லோ குளிகைபூண்டு துப்புரவாய் பதினெட்டு ஒன்றிற்சென்றேன்
சண்டமாருதம் போல மேருதன்னில் சாங்கமுடன் குளிகையிட்டு யேறினேனே
4955.
ஏறினேன் பத்துஒன்பது வரையிற்சென்றேன் எழிலான குளிகைபோற்ற சித்தருண்டு
மாறினேன் மகாதேவர் சித்துபக்கம் மகத்தான வஞ்சலிகள் யானுஞ்செய்து
கூறினேன் பதாம்புயத்தை வணங்கியானும் கொற்றவனே முடிதாழ்ந்து வடிபணிந்தேன்
சீறியே என்மீதிற் கோபம்விட்டு சிறப்புடனே எந்தனை யாரென்றிட்டாரே
4956.
என்றாரே சித்துமுனி கூறும்போது எழிலான காலாங்கி நாதர்தம்மை
குன்றான மலைமீதிற் நின்றுகொண்டு கொற்றவரே சீனபதி யென்றேன்யானும்
சென்றிடவே என்மீதிற் பட்சம்வைத்து சிறப்புடனே யெந்தனுக்கு இதவுகூறி
நின்றதொரு எந்தனுக்கு வாதினங்கள் நிட்களங்க மாகவல்லோ கொடுத்தார்தானே
4957.
கொடுத்தவுடன் அடியேனும் முடிவணங்கி கொப்பெனவே பத்துவொன்பதியில் வந்தேன்
அடுத்ததொரு நூலிருக்குஞ் சமாதிதன்னை யன்புடனே யான்பார்க்க வேண்டுமென்றேன்
கொடுத்ததொரு காவியங்கள் ஆயுர்வேதம் தோறாமல் சமாதியது மலைபோற்கண்டேன்
படுத்ததொரு தென்பக்கம் மேருதன்னில் பாங்கான சமஸ்கிருத நூல்கண்டேனே
4958.
கண்டேனே மேருகிரி தன்னிலப்பா கருவான வடபாகம் நூல்கள்சொல்வேன்
விண்டதொரு நூலெல்லாம் வடமொழியேயாகும் வீரான சாத்திரங்கள் மலைபோல் கண்டேன்
அண்டமுடன் மேருகிரி தன்னிலப்பா வழகான கிழக்குமுகம் நூல்கள்சொல்வேன்
சண்டமாருதம் போல நூல்கள்தானும் சார்பாக கீர்வாணம் என்னலாமே
4959.
என்னலாம் மேருகிரி தன்னிலப்பா எழிலான மேற்குமுகஞ் சமாதிகண்டேன்
துன்னவே சாத்திரங்கள் மலைபோல்கண்டேன் துப்புரவாய் படிப்பதற்கு நாளுமில்லை
சொன்னதொரு பரிபாஷை நூல்களப்பா தோறாமல் மேருகிரி தன்னிற்சென்றேன்
பன்னவே பலபேருங் கூடிசொன்ன பாரினிலே சாத்திரங்கள் அனேகந்தானே
4960.
தானான சாத்திரங்கள் மேருதன்னில் தண்மையுடன் நாலுமுகஞ் சமாதிகண்டேன்
கோனான குருநூலும் பெருநூலுமாக கொற்றவனே மலைபோலே சமாதிகண்டேன்
பானான மூன்றுயுகப் பிரளயங்கள் பாங்குடனே வந்தநெடுங் காலந்தன்னில்
தேனான சாத்திரத்தை மேருதன்னில் தேற்றமுடன் சமாதிதனில் வைத்திட்டாரே
அருளான விடையதுவும் பெற்றுமேதான் வன்பான குளிகையது யானும்பூண்டு
இருளான மலைதனிலே யான்கடந்து எழிலான பதினெட்டாம் வரையிற் சென்றேன்
மருளான மார்க்கண்டர் தன்னைக்காண மார்க்கமுடன் குளிகையது பூண்டுகொண்டு
பொருளான மேருகிரி யடியேன்தானும் பொங்கமுடன் பதினெட்டாம் வரைசென்றேனே
4952.
வரையான மார்கண்டன் சமாதிகாண வளமுடனே யடியேனும் சென்றபோது
திரைகடலுஞ் சத்தசாகரமுங் கடந்து திறளான மனுகோடி முனிவரெல்லாம்
நரையகற்றி காயாதி கொண்டுமல்லோ நவகோடி ரிஷியாரும் முனிவர்தானும்
வரைகோடி லக்கில்லை கணக்கோயில்லை வளமான பதினெட்டாம் வரையிற்றானே
4953.
வரையான சமாதியது வனேகங்கண்டேன் வளமான மார்கண்டன் லிங்கந்தன்னை
நிரையான நாளொன்று பூசைமார்க்கம் நீதியுடன் ஆயிரமாஞ் சொச்சந்தன்னை
கரையான லிங்கமகா பூசை கருவாக மார்க்கண்டன் செய்யும்மார்க்கம்
திரைகடலுங் கொள்ளாது வேதயாகந் திரளாழி லிங்கமதை கண்டிட்டேனே
4954.
கண்டேனே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கருவான புலிப்பாணி மைந்தாகேளு
கொண்டேனே காலாங்கி கிருபையாலே கோடியுகம் தானிருக்க குளிகைபெற்றேன்
துண்டரிக மாகவல்லோ குளிகைபூண்டு துப்புரவாய் பதினெட்டு ஒன்றிற்சென்றேன்
சண்டமாருதம் போல மேருதன்னில் சாங்கமுடன் குளிகையிட்டு யேறினேனே
4955.
ஏறினேன் பத்துஒன்பது வரையிற்சென்றேன் எழிலான குளிகைபோற்ற சித்தருண்டு
மாறினேன் மகாதேவர் சித்துபக்கம் மகத்தான வஞ்சலிகள் யானுஞ்செய்து
கூறினேன் பதாம்புயத்தை வணங்கியானும் கொற்றவனே முடிதாழ்ந்து வடிபணிந்தேன்
சீறியே என்மீதிற் கோபம்விட்டு சிறப்புடனே எந்தனை யாரென்றிட்டாரே
4956.
என்றாரே சித்துமுனி கூறும்போது எழிலான காலாங்கி நாதர்தம்மை
குன்றான மலைமீதிற் நின்றுகொண்டு கொற்றவரே சீனபதி யென்றேன்யானும்
சென்றிடவே என்மீதிற் பட்சம்வைத்து சிறப்புடனே யெந்தனுக்கு இதவுகூறி
நின்றதொரு எந்தனுக்கு வாதினங்கள் நிட்களங்க மாகவல்லோ கொடுத்தார்தானே
4957.
கொடுத்தவுடன் அடியேனும் முடிவணங்கி கொப்பெனவே பத்துவொன்பதியில் வந்தேன்
அடுத்ததொரு நூலிருக்குஞ் சமாதிதன்னை யன்புடனே யான்பார்க்க வேண்டுமென்றேன்
கொடுத்ததொரு காவியங்கள் ஆயுர்வேதம் தோறாமல் சமாதியது மலைபோற்கண்டேன்
படுத்ததொரு தென்பக்கம் மேருதன்னில் பாங்கான சமஸ்கிருத நூல்கண்டேனே
4958.
கண்டேனே மேருகிரி தன்னிலப்பா கருவான வடபாகம் நூல்கள்சொல்வேன்
விண்டதொரு நூலெல்லாம் வடமொழியேயாகும் வீரான சாத்திரங்கள் மலைபோல் கண்டேன்
அண்டமுடன் மேருகிரி தன்னிலப்பா வழகான கிழக்குமுகம் நூல்கள்சொல்வேன்
சண்டமாருதம் போல நூல்கள்தானும் சார்பாக கீர்வாணம் என்னலாமே
4959.
என்னலாம் மேருகிரி தன்னிலப்பா எழிலான மேற்குமுகஞ் சமாதிகண்டேன்
துன்னவே சாத்திரங்கள் மலைபோல்கண்டேன் துப்புரவாய் படிப்பதற்கு நாளுமில்லை
சொன்னதொரு பரிபாஷை நூல்களப்பா தோறாமல் மேருகிரி தன்னிற்சென்றேன்
பன்னவே பலபேருங் கூடிசொன்ன பாரினிலே சாத்திரங்கள் அனேகந்தானே
4960.
தானான சாத்திரங்கள் மேருதன்னில் தண்மையுடன் நாலுமுகஞ் சமாதிகண்டேன்
கோனான குருநூலும் பெருநூலுமாக கொற்றவனே மலைபோலே சமாதிகண்டேன்
பானான மூன்றுயுகப் பிரளயங்கள் பாங்குடனே வந்தநெடுங் காலந்தன்னில்
தேனான சாத்திரத்தை மேருதன்னில் தேற்றமுடன் சமாதிதனில் வைத்திட்டாரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக