4931.
எண்ணியே நாதாந்த சித்துதாமும் யெழிலான மூலியது சென்றபேர்க்கு
கண்ணமுடன் ஞானமென்ற குளிகைதன்னால் தகமையுடன் தான்பார்க்கும் வேளைதன்னில்
வண்ணமுடன் கரும்பசுவும் மலையோரத்தில் மார்க்கமுடன் தினந்தோறும் மேய்ந்துமல்லோ
புண்ணியனார் சித்துமுனி வைத்தமூலி புகழான காயாதி கற்பந்தின்னலாச்சே
4932.
தின்னவே காயாதி கற்பமூலி தீரமுடன் எந்தனுக்கு வாய்த்ததாலே
மன்னவனார் தேவாதி சித்துதாமும் மார்க்கமுடன் விட்டகுறை இருந்ததாலே
பன்னவே காயாதி கற்பமூலி பாங்குடனே வாய்த்துதென்று மனதிலுன்னி
தென்பொதிகைத் தனிலமைந்த கதையைப்போலும் தேவனது கடாட்சமதால் வாய்க்கலாச்சே
4933.
ஆச்சென்று கரும்பசுவும் மனதிலெண்ணி ஆண்மைகொண்டு இருக்குமந்த காலந்தன்னில்
மூச்சடங்கி தானிருக்கும் மாயாசித்து முனையான கரும்பசுவைத் தன்னைப்பார்த்து
மாச்சலென்ற சினமதுவு மதிகமாகி மகத்தான சாபமது கொடுத்தபோது
கூச்சலுடன் கரும்பசுவும் மண்ணில்வீழ்ந்து கொப்பெனவே யலறியல்லோ விழுகலாச்சே
4934.
விழுந்துமே காராவும் கதறும்போது விருப்பமுடன் கன்றதுவும் ஓடிவந்து
அழுதுமே காராவைத் தான்முகந்து அலறியே பசளையென்ற மூலிதன்னை
தொழுதுமே சித்துமுனி பாதந்தன்னில் துப்புறவாய் வாய்தனிலே யூட்டும்போது
பழுதுபடா சித்துமுனி மனதுவந்து பான்மையுடன் விசனமது கொண்டிட்டாரே
4935.
கொண்டுமே மனக்கவலை யதிகமாகி குவலயத்தில் பசுதனையே கொன்றதாலே
விண்டுமே பாவமது நேரலாச்சு வீண்பழிக்கு ஆளானோம் விண்ணிலப்பா
துண்டரிக மானதொரு கோபத்தாலே துப்புறவாய் விசனமது வதிகமாகி
பண்டுளவு மாலையணி கிருஷ்ணபூபன் பட்சமுடன் தான்வளர்த்த கோவுமாமே
4936.
தேதான ரத்னகிரி மலையிலப்பா கொப்பெனவே நாதாக்கள் கண்டதுண்டு
ஆவலுடன் தாயுடனே கன்றுமாக ஆண்மையுடன் கிரிதனையே சுற்றிமேய்ந்து
பாவமது நேராமல் நாதர்கட்கு பான்மையுடன் தானடக்கும் கோவுமல்லோ
சாவதுவும் நேர்ந்ததொரு துன்தையாலே சாங்கமுடன் சித்துமுனி புலம்பிட்டாரே
4937.
புலம்பியே மனந்தேறி சித்துதாமும் புகழான காராவின் பசுவுக்கல்லோ
நலம்பெறவே சாபமதை நிவர்த்திசெய்து நன்மையுடன் காரா கன்றுக்கேதான்
ஜலமதுவும் குகைதனையே தானுங்கண்டு சட்டமுடன் இருப்பதற்கு புலமுங்கண்டு
வலம்பெரிய கானகத்தில் நெடுங்காலந்தான் வளமையுடன் வாழ்கவென்று வரந்தந்தாரே
4938.
தந்தாரே பதினாறாம் வரையிலப்பா தன்மையுடன் காராவின் கன்றுதானும்
சொந்தமுடன் அவ்வரையி லிருக்கக்கண்டேன் சுந்தரனே புலிப்பாணி மைந்தாகேளு
விந்தையுள்ள காதைதனை வையகத்தில் விட்டகுறை இருந்தவர்க்கு யெய்துமென்று
அந்தமுடன் என்மனதில் எண்ணியல்லோ வப்பனே குளிகைகொண்டு பறந்திட்டேனே
4939.
பறந்தேனே இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாங்கான புலிப்பாணி மைந்தாகேளு
இறந்ததொரு காராவின் பசுவின்காதை எழிலாக குளிகைகொண்டு வறிந்தமட்டும்
துறந்தேனே சொல்லிவிட்டேன் உண்மையாக துப்புரவாய் பதினேழாம் வரையில்சென்றேன்
சிறந்ததொரு வதிசயங்கள் சொல்வேனப்பா துப்புரவாய் மனதுவந்து கேட்பீர்தானே
4940.
தானான மேருகிரி தன்னிலப்பா தாக்கான விஷ்ணுவின் சமாதிதன்னை
கோனான என்குருவாங் காலாங்கிநாதர் கொற்றவனார் சொரூபரது கடாட்சத்தாலே
கேனான மலைமேலே சென்றேனங்கே தேற்றமுடன் பதினேழாம் வரையிற்கிட்டி
மானான மகதேவர் கடாட்சத்தாலே மார்க்கமுடன் குளிகைகொண்டு நின்றிட்டேனே
எண்ணியே நாதாந்த சித்துதாமும் யெழிலான மூலியது சென்றபேர்க்கு
கண்ணமுடன் ஞானமென்ற குளிகைதன்னால் தகமையுடன் தான்பார்க்கும் வேளைதன்னில்
வண்ணமுடன் கரும்பசுவும் மலையோரத்தில் மார்க்கமுடன் தினந்தோறும் மேய்ந்துமல்லோ
புண்ணியனார் சித்துமுனி வைத்தமூலி புகழான காயாதி கற்பந்தின்னலாச்சே
4932.
தின்னவே காயாதி கற்பமூலி தீரமுடன் எந்தனுக்கு வாய்த்ததாலே
மன்னவனார் தேவாதி சித்துதாமும் மார்க்கமுடன் விட்டகுறை இருந்ததாலே
பன்னவே காயாதி கற்பமூலி பாங்குடனே வாய்த்துதென்று மனதிலுன்னி
தென்பொதிகைத் தனிலமைந்த கதையைப்போலும் தேவனது கடாட்சமதால் வாய்க்கலாச்சே
4933.
ஆச்சென்று கரும்பசுவும் மனதிலெண்ணி ஆண்மைகொண்டு இருக்குமந்த காலந்தன்னில்
மூச்சடங்கி தானிருக்கும் மாயாசித்து முனையான கரும்பசுவைத் தன்னைப்பார்த்து
மாச்சலென்ற சினமதுவு மதிகமாகி மகத்தான சாபமது கொடுத்தபோது
கூச்சலுடன் கரும்பசுவும் மண்ணில்வீழ்ந்து கொப்பெனவே யலறியல்லோ விழுகலாச்சே
4934.
விழுந்துமே காராவும் கதறும்போது விருப்பமுடன் கன்றதுவும் ஓடிவந்து
அழுதுமே காராவைத் தான்முகந்து அலறியே பசளையென்ற மூலிதன்னை
தொழுதுமே சித்துமுனி பாதந்தன்னில் துப்புறவாய் வாய்தனிலே யூட்டும்போது
பழுதுபடா சித்துமுனி மனதுவந்து பான்மையுடன் விசனமது கொண்டிட்டாரே
4935.
கொண்டுமே மனக்கவலை யதிகமாகி குவலயத்தில் பசுதனையே கொன்றதாலே
விண்டுமே பாவமது நேரலாச்சு வீண்பழிக்கு ஆளானோம் விண்ணிலப்பா
துண்டரிக மானதொரு கோபத்தாலே துப்புறவாய் விசனமது வதிகமாகி
பண்டுளவு மாலையணி கிருஷ்ணபூபன் பட்சமுடன் தான்வளர்த்த கோவுமாமே
4936.
தேதான ரத்னகிரி மலையிலப்பா கொப்பெனவே நாதாக்கள் கண்டதுண்டு
ஆவலுடன் தாயுடனே கன்றுமாக ஆண்மையுடன் கிரிதனையே சுற்றிமேய்ந்து
பாவமது நேராமல் நாதர்கட்கு பான்மையுடன் தானடக்கும் கோவுமல்லோ
சாவதுவும் நேர்ந்ததொரு துன்தையாலே சாங்கமுடன் சித்துமுனி புலம்பிட்டாரே
4937.
புலம்பியே மனந்தேறி சித்துதாமும் புகழான காராவின் பசுவுக்கல்லோ
நலம்பெறவே சாபமதை நிவர்த்திசெய்து நன்மையுடன் காரா கன்றுக்கேதான்
ஜலமதுவும் குகைதனையே தானுங்கண்டு சட்டமுடன் இருப்பதற்கு புலமுங்கண்டு
வலம்பெரிய கானகத்தில் நெடுங்காலந்தான் வளமையுடன் வாழ்கவென்று வரந்தந்தாரே
4938.
தந்தாரே பதினாறாம் வரையிலப்பா தன்மையுடன் காராவின் கன்றுதானும்
சொந்தமுடன் அவ்வரையி லிருக்கக்கண்டேன் சுந்தரனே புலிப்பாணி மைந்தாகேளு
விந்தையுள்ள காதைதனை வையகத்தில் விட்டகுறை இருந்தவர்க்கு யெய்துமென்று
அந்தமுடன் என்மனதில் எண்ணியல்லோ வப்பனே குளிகைகொண்டு பறந்திட்டேனே
4939.
பறந்தேனே இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் பாங்கான புலிப்பாணி மைந்தாகேளு
இறந்ததொரு காராவின் பசுவின்காதை எழிலாக குளிகைகொண்டு வறிந்தமட்டும்
துறந்தேனே சொல்லிவிட்டேன் உண்மையாக துப்புரவாய் பதினேழாம் வரையில்சென்றேன்
சிறந்ததொரு வதிசயங்கள் சொல்வேனப்பா துப்புரவாய் மனதுவந்து கேட்பீர்தானே
4940.
தானான மேருகிரி தன்னிலப்பா தாக்கான விஷ்ணுவின் சமாதிதன்னை
கோனான என்குருவாங் காலாங்கிநாதர் கொற்றவனார் சொரூபரது கடாட்சத்தாலே
கேனான மலைமேலே சென்றேனங்கே தேற்றமுடன் பதினேழாம் வரையிற்கிட்டி
மானான மகதேவர் கடாட்சத்தாலே மார்க்கமுடன் குளிகைகொண்டு நின்றிட்டேனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக