பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 4941-4950

4941.
நின்றேனே பதினேழாம் வரையிலப்பா நீதியுள்ள சித்துமுனி கோடாகோடி
குன்றினிலே எந்தனையுங் கண்டுமல்லோ கொப்பெனவே யாரென்று வினவிக்கேட்க
வென்றிடவே யடியேனும் பயந்தொடுங்கி விருப்பமுடன் பதாம்புயத்தை பணிந்துநின்று
சென்றேனே மகாவிஷ்ணு சமாதிதன்னை சேர்வையெனக் கருள்தருக வென்றேன்தானே
4942.
தானான பதாம்புயத்தை பணிந்துகேட்க தகமையுடன் சொரூபமுனி சித்துதாமும்
மானான மகாவிஷ்ணு தன்னைக்காண மானிலத்தி லாராலும் ஆகுமோசொல்
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் நெடுங்காலங் கார்த்திருந்தார்
பானான பதாம்புயத்தைக் காணுதற்கு பாருலகில் யாராலும் முடியாதென்றே
4943.
முடியாத மகத்துவங்கள் உந்தமக்கு மூதுலகில் கிட்டாது யாருக்கென்று
அடியார்கள் சிவகூட்ட மாண்பரோடும் அம்மலையில் நெடுங்காலம் கார்த்திருந்தார்
படிதோறும் நாதாக்கள் காவலுண்டு பதாம்புயத்தைக் காணுதற்கு முடியாமற்றான்
கெடியான மேருகிரி தன்னைநீக்கி கெவனமுடன் குளிகைகொண்டு இறங்கினாரே
4944.
இறங்கினார் என்றல்லோ எந்தனுக்கு எழிலான சித்துமுனி ரிஷியார்தாமும்
உறமுடைய வார்த்தையது கூறும்போது ஓகோகோ நாதாக்கள் காண்பியார்கள்
திறமுடைய எந்தனது வலுமையாலே தீர்க்கமுடன் அடியேனுங் குளிகைகொண்டு
சிறகுடைய பட்சியது போலேயானும் சீறுடனே மேல்வரையிற் சென்றேன்பாரே
4945.
பாரேதான் மகாவிஷ்ணு சமாதிபக்கம் பட்சமுடன் அடியேனுஞ் சென்றுவந்து
நேரேதான் சமாதியது மேலேநோக்கி நிட்களங்க மானதொரு சொரூபர்தம்மை
தீரேதான் திரிகர்ண சொரூபமூர்த்தி திகழுடனே எந்தனுக்கு இதவுகூறி
வேரேதான் கதியெனக்கு என்னவென்று விட்டகுறை இருந்ததினால் வந்திட்டேனே
4946.
வந்தேனே எந்தனுக்கு சொரூபநாதர் வரமுடனே காட்சியது தருகவென்று
நொந்துமனந் தானுருகி தாள்பணிந்து நொடிக்குள்ளே சிரங்குனிந்து பணிந்தபோது
அந்தமுடன் மகதேவர் விஷ்ணுதாமும் அங்ஙனவே யசரீரி வாக்குகூற
மந்தமுடன் அடியேனுங் கால்நடுங்கி பட்சமுடன் உபதேசங் கேட்டிட்டேனே
4947.
கேட்டேனே மகதேவர் மனமிறங்கி கிருபையுடன் என்மீதில் மனதுவந்து
நாட்டமுடன் அசரீரி வாக்காலப்பா நயமுடனே எந்தனுக்கு வேகங்கூறி
நீட்டமுடன் காலாங்கி நாதசீஷர் நீதியுடன் நெடுங்காலங் குளிகைபூண்டு
தாட்டிகமாய் வையகத்தில் இருந்தாயப்பா தண்மையுள்ள குளிகையது வலுமைகாணே
4948.
காணவே இமயகிரி தன்னிலப்பா கருவான சித்தர்களும் முனிவருண்டு
பூணவே நாதாக்கள் வலுமையுண்டு புகழான மேருகிரி தன்னிலப்பா
ஆணவங்கள் கொண்டல்லோ குளிகைபூண்டு யவனியெலாம் சுற்றிவந்தாய் மகிமையாலே
வேணதொரு தேசாதி தேசமெலாம் வேகமுடன் மலைநதிகள் வென்றிட்டாயே
4949.
வென்றுமே நெடுங்காலந் தானிருந்து வேகமுடன் சீனபதிக் கேகியல்லோ
சென்றுமே சீனபதி மாண்பருக்கு செயலான மகிமையெல்லா மனைத்துங்கூறி
குன்றான மேருகிரி தன்னிலப்பா கொற்றவனே குளிகைகொண்டு வந்தாய்நீயும்
இன்றுநீ வந்ததினால் உந்தனுக்கு எழிலான வுபதேசங் கூறுவேனே
4950.
கூறுவேன் எந்தமக்கு என்றுவல்லோ குவலயத்தில் சித்தர்முனி காணாவண்ணம்
மாறுபட சித்துமுனி யுளவுகூறி மார்க்கமுடன் கையெனக்கு விடையுங்கூறி
தேறுதலாய் ஞானோப தேசஞ்சொல்லி தெளிவுறவே பதினெட்டாம் வரையிற்செல்ல
ஆறுதலஞ் சிகாரம்வரை முடியைக்காண வன்புடனே எந்தனுக்கு வருள்தந்தாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக