பக்கங்கள்

சனி, 3 ஆகஸ்ட், 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 4921-4930

4921.
தானான சமாதிநிலை நின்றுகொண்டு தன்மையுள்ள ஓங்காரந் தன்னைநோக்கி
கோனான குருபதத்தை மேலேயுன்னி கும்பகத்தை மேல்நோக்கி பதியமர்ந்து
தேனான மனோன்மணியைக் காணவல்லோ தேசத்தில் வெகுமாண்பர் சிவயோகிதானும்
பானான பராபரத்தை தியானித்தேதான் பான்மையுடன் நெடுங்காலம் தவம்செய்வாரே
4922.
செய்தாலும் மனோன்மணியைக் காண்பதில்லை தேசமதில் நாலுயுகங் கடந்தாலென்ன
வையகங்கள் தான்முழுதும் அழிந்திட்டாலும் புகழுஞ்சித்தர் புகழானஜோதிமயங் காண்பதல்லால்
மெய்யான ரூபமதைக் காண்பதேது வேதாந்த நூல்களிலுஞ் சொன்னார்தாமே
4923.
சொன்னாரே சித்துமுனி ரிஷியார்தானும் துப்புரவாய் எந்தனுக்கு சொன்னார்கோடி
தென்னான கும்பமுனி கூறும்நூலில் தோற்றமுடன் உபதேசம் சொன்னார்போலும்
நன்னயமாய் எந்தனுக்கு வேதங்கூறி நாதாந்த காலாங்கி பெயரைமாறி
உன்னிதமாய் உபதேசஞ் செய்துமல்லோ உவமையுடன் விடையெனக்கு தந்திட்டாரே
4924.
தந்தாரே ஜோதிமயந் தன்னைக்கண்டு தன்மையுடன் கிரிதனிலே விடையும்பெற்று
அந்தமுடன் பதினாறாம் வரையிற்காண வன்புடனே குளிகையது பூண்டுகொண்டு
சொந்தமுள்ள காலாங்கி நாதர்தம்மை சுந்தரனார் பதாம்புயத்தை மனதிலுன்னி
இந்தவரை விட்டுமல்லோ மேலேயப்பா எழிலான கிரிபோக வெண்ணினேனே
4925.
எண்ணினேன் பதினாறாம் வரையைக்காண யெழிலான மேருகிரி தன்னில்யானும்
குண்ணான மலையதுவும் குகைகள்தாண்டி கொற்றவனே சுனையதுவும் கடந்துமேதான்
தண்னான கிரிவளத்தைக் காணவென்று தாக்குடனே குளிகையது பூண்டுகொண்டு
கண்ணான காலாங்கி நாதர்தம்மை கருத்திலே மனதுவந்து நடந்திட்டேனே
4926.
நடந்தேனே இமயகிரி தன்னிலப்பா நலமான மேருகிரி சாரலோரம்
கடந்தேனே பதினாறாம் வரையில்தானும் கருவான சுனையுண்டு தடாகமுண்டு
அடந்ததொரு சுனையருகே சுரங்கமுண்டு அதன்புறத்தே யிருளடைந்த சோலையுண்டு
தொடர்ந்ததொரு சித்துமுனி நாதர்கூட்டம் தோறாத சீஷவர்க்க மனேகமுண்டே
4927.
உண்டான மலைதனிலே கோடிசேனை உலகமதில் மெத்தவுண்டு சொல்லொண்ணாது
அண்டர்முனி ராட்சதர்கள் இருக்கும்நாடு அடைவான நாளதனில் அதிசயத்தை
கண்டதொரு காரியங்கள் என்னவென்றால் கடிதான வதிசயத்தை என்னசொல்வேன்
தொண்டனைப்போல் அடியேனும் குளிகைபூண்டு துப்புரவாய் வெகுகால மிருந்திட்டேனே
4928.
இருந்தேனே கானகத்தின் வழியில்தானும் எழிலான குகையோரம் தன்னில்நின்றேன்
குருந்தமரந் தன்னருகே சித்துதாமும் கொப்பெனவே சீஷவர்க்கம் தன்னிற்சேர்ந்து
பொருந்தவே நெடுங்காலந் தவமிருந்து பொங்கமுடன் சுனையோரம் சாரல்தன்னில்
விருந்தமுர்த மானதொரு பசளைதன்னை விருப்பமுடன் சித்துமுனியும் பார்த்தாரே
4929.
தானான கறுப்பசளை யுண்டபோது தகமையுள்ள சித்துமுனி ரிஷியார்தாமும்
கோனான குருசொன்ன மூலிதன்னை கூறான சித்துமுனி நாதர்தாமும்
பானான மூலிதன்னை அந்திசந்தி பாகமுடன் தானருந்தி வருங்காலத்தில்
மானான மூலியது முனிவருக்கு மகத்தான இலையதுவும் பதினாரெட்டே
4930.
எட்டான மூலிதனை சித்துதாமும் எழிலான அந்திசந்தி காயகற்பம்
திட்டமுடன் சதாகாலங் கொள்ளும்போது திரமான மூலியது ஒருநாள்தன்னில்
பட்டமரந் தனிலல்லோ தழைகள்மென்று பாங்குடனே தானிருக்கும் வண்மைதன்னை
தொட்டவர்கள் யாரென்று சித்துதாமும் தோற்றமுடன் வுள்ளமதில் எண்ணிட்டாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக