6311.
ஒட்டுமே பின்னுமந்த மாண்பர்தாமும் ஓகோகோ வழலைதனைத் தானெடுக்க
கிட்டியே மறுபடியும் வருவாரங்கே கீழான விரலதுவும் அவரைக்கண்டு
எட்டியே தான்துரத்தி கையிலொட்டி எழிலான வங்கமது பங்கம்நீக்கி
சுட்டியே சிவமாண்பர் தானுமப்பா சொந்தமுடன் கைகொண்டு வாழ்குவாரே
6312.
வாழ்ந்தாலே தந்தமக்கு மோட்சமுண்டு வளமான கீர்த்தியது வதிகமுண்டு
ஆழ்ந்ததொரு வார்த்தைக்குக் குறைவில்லாமல் அங்ஙனவே மூலியது வாராய்ந்தல்லோ
தாழ்ந்துமே குருபாதம் வாக்குதப்பி தானடைந்தால் குருவுக்குப் பாவமென்று
சூழ்ந்துமே குருவுரைத்த வாக்குபோலே சூட்சமுடன் செய்யவல்லோ எண்ணலாச்சே
6313.
எண்ணவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எளிதான புலிப்பாணி மகனேபாரு
வண்ணமுடன் காலாங்கி கிருபையாலே வளமையுடன் லோகபதி எல்லாங்காண
திண்ணமுடன் குளிகையது பூண்டுகொண்டு தீர்க்கமுடன் சீனபதி சென்றேன்யானும்
அண்ணலெனும் பதாம்புயத்தை யானுங்கண்டு வப்பனே காலாங்கி வரம்பெற்றேனே
6314.
பெற்றதொரு வரத்தினால் அனேகம்பெற்று பேரான பேரின்ப வீடறிந்து
கற்றதொரு சிவயோகி தவக்கியானி கைலாச சட்டமுனி நாதர்கூட்டம்
சுற்றுமுள்ள திருமூல வர்க்கத்தோரும் சுந்தரா னந்தரொடு ரோமந்தானும்
மற்றுமுள்ள சித்தாதி சித்தரெல்லாம் மகிட்சியுடன் மலைதனிலே பார்த்திட்டேனே
6315.
பார்த்தேனே யவரவர்கள் செய்தநூலை பாங்கான சமாதிமுகம் நின்றுகொண்டு
நேர்த்தியுள்ள பெருநூலாங் கிரந்தங்கோடி நெடிதான விரிநூலுஞ் சுருக்கங்கோடி
பூர்த்தியுடன் அவரவர்க்கு யிதவுகூறி புகழான சாத்திரத்தைக் கையிற்பற்றி
தீர்த்தமுடன் சிவலிங்க பதியில்சென்று சிற்பரனே நூல்களை யாம்பூசித்தேனே
6316.
பூசித்தேன் அதிதமென்ற நூல்கள்தம்மை புகழான சீனபதி மாண்பருக்கு
வாசித்தேன் சந்தேகந் தெளிவுநீங்கி வாகுடனே கருவிகர ணாதியந்தம்
நேசித்தேன் சீனபதி பெண்களைத்தான் நெடிதான சாத்திரத்தின் மார்க்கங்கண்டு
ஆசித்தேன் நெடுங்கால மங்கிருந்தேன் வப்பனே குளிகைகொண்டு பறந்திட்டேனே
6317.
பறந்தேனே குளிகையது பூண்டுகொண்டு பாங்கான யிமயகிரி மேற்கேயப்பா
சிறந்ததொரு புவனமென்ற கிரியில்யானும் சிற்பரனே குளிகைவிட்டு இறங்கியேதான்
நிறைந்ததொரு குகைதனிலே சென்றேன்யானும் நெடிதான தேவரிஷி கோடாகோடி
குறைந்ததொரு கணக்கதுவும் லக்கோயில்லை கோடான கோடிசித்து முனிகண்டேனே
6318.
கண்டதொரு சித்துமுனி ரிஷியார்தாமும் கைலாச புவனகிரி தன்னிற்றானும்
அண்டமுடி போகாமல் யாகஞ்செய்து வப்பனே தானிருக்குங் காலந்தன்னில்
தண்டறிக மானதொரு கானகத்தில் தாட்டீக முள்ளதொரு செந்தேளப்பா
சண்டமா ருதம்போலே ரெக்கைகொண்டு சட்டமுடன் இறங்கிநிற்கப் பார்த்திட்டேனே
6319.
பார்த்தேனே புவனகிரி சிகரந்தன்னில் பாங்கான செந்தேளின் கொடூரந்தன்னை
தீர்த்தமுடன் சிகரம்விட்டு மேலேநோக்கி திகழான கொடிமுனையைப் பற்றிநின்று
வேர்த்துடலும் விஷமதுவும் தலைகொண்டேறி மிக்கான சிகரமென்ற செம்புதன்னை
ஆர்த்துமே தானோக்கி கொட்டும்போது வழகான செம்பதுவும் உருகிப்போச்சே
6320.
உருக்கியே செம்பதுவும் மலையோரத்தில் வுத்தமனே பாய்ந்துமல்லோ லிங்கமாச்சு
மெருகான லிங்கமது செம்புமாகி மேன்மையுள்ள சமாதியென்ற பீடமாச்சு
திருவான பீடமது சித்தர்கண்டு தீரமுடன் சிவலிங்க மென்றுசொல்லி
பருவமுடன் அமாவாசை காலந்தன்னில் பட்சமது குருபூசை செய்வார்தானே
ஒட்டுமே பின்னுமந்த மாண்பர்தாமும் ஓகோகோ வழலைதனைத் தானெடுக்க
கிட்டியே மறுபடியும் வருவாரங்கே கீழான விரலதுவும் அவரைக்கண்டு
எட்டியே தான்துரத்தி கையிலொட்டி எழிலான வங்கமது பங்கம்நீக்கி
சுட்டியே சிவமாண்பர் தானுமப்பா சொந்தமுடன் கைகொண்டு வாழ்குவாரே
6312.
வாழ்ந்தாலே தந்தமக்கு மோட்சமுண்டு வளமான கீர்த்தியது வதிகமுண்டு
ஆழ்ந்ததொரு வார்த்தைக்குக் குறைவில்லாமல் அங்ஙனவே மூலியது வாராய்ந்தல்லோ
தாழ்ந்துமே குருபாதம் வாக்குதப்பி தானடைந்தால் குருவுக்குப் பாவமென்று
சூழ்ந்துமே குருவுரைத்த வாக்குபோலே சூட்சமுடன் செய்யவல்லோ எண்ணலாச்சே
6313.
எண்ணவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் எளிதான புலிப்பாணி மகனேபாரு
வண்ணமுடன் காலாங்கி கிருபையாலே வளமையுடன் லோகபதி எல்லாங்காண
திண்ணமுடன் குளிகையது பூண்டுகொண்டு தீர்க்கமுடன் சீனபதி சென்றேன்யானும்
அண்ணலெனும் பதாம்புயத்தை யானுங்கண்டு வப்பனே காலாங்கி வரம்பெற்றேனே
6314.
பெற்றதொரு வரத்தினால் அனேகம்பெற்று பேரான பேரின்ப வீடறிந்து
கற்றதொரு சிவயோகி தவக்கியானி கைலாச சட்டமுனி நாதர்கூட்டம்
சுற்றுமுள்ள திருமூல வர்க்கத்தோரும் சுந்தரா னந்தரொடு ரோமந்தானும்
மற்றுமுள்ள சித்தாதி சித்தரெல்லாம் மகிட்சியுடன் மலைதனிலே பார்த்திட்டேனே
6315.
பார்த்தேனே யவரவர்கள் செய்தநூலை பாங்கான சமாதிமுகம் நின்றுகொண்டு
நேர்த்தியுள்ள பெருநூலாங் கிரந்தங்கோடி நெடிதான விரிநூலுஞ் சுருக்கங்கோடி
பூர்த்தியுடன் அவரவர்க்கு யிதவுகூறி புகழான சாத்திரத்தைக் கையிற்பற்றி
தீர்த்தமுடன் சிவலிங்க பதியில்சென்று சிற்பரனே நூல்களை யாம்பூசித்தேனே
6316.
பூசித்தேன் அதிதமென்ற நூல்கள்தம்மை புகழான சீனபதி மாண்பருக்கு
வாசித்தேன் சந்தேகந் தெளிவுநீங்கி வாகுடனே கருவிகர ணாதியந்தம்
நேசித்தேன் சீனபதி பெண்களைத்தான் நெடிதான சாத்திரத்தின் மார்க்கங்கண்டு
ஆசித்தேன் நெடுங்கால மங்கிருந்தேன் வப்பனே குளிகைகொண்டு பறந்திட்டேனே
6317.
பறந்தேனே குளிகையது பூண்டுகொண்டு பாங்கான யிமயகிரி மேற்கேயப்பா
சிறந்ததொரு புவனமென்ற கிரியில்யானும் சிற்பரனே குளிகைவிட்டு இறங்கியேதான்
நிறைந்ததொரு குகைதனிலே சென்றேன்யானும் நெடிதான தேவரிஷி கோடாகோடி
குறைந்ததொரு கணக்கதுவும் லக்கோயில்லை கோடான கோடிசித்து முனிகண்டேனே
6318.
கண்டதொரு சித்துமுனி ரிஷியார்தாமும் கைலாச புவனகிரி தன்னிற்றானும்
அண்டமுடி போகாமல் யாகஞ்செய்து வப்பனே தானிருக்குங் காலந்தன்னில்
தண்டறிக மானதொரு கானகத்தில் தாட்டீக முள்ளதொரு செந்தேளப்பா
சண்டமா ருதம்போலே ரெக்கைகொண்டு சட்டமுடன் இறங்கிநிற்கப் பார்த்திட்டேனே
6319.
பார்த்தேனே புவனகிரி சிகரந்தன்னில் பாங்கான செந்தேளின் கொடூரந்தன்னை
தீர்த்தமுடன் சிகரம்விட்டு மேலேநோக்கி திகழான கொடிமுனையைப் பற்றிநின்று
வேர்த்துடலும் விஷமதுவும் தலைகொண்டேறி மிக்கான சிகரமென்ற செம்புதன்னை
ஆர்த்துமே தானோக்கி கொட்டும்போது வழகான செம்பதுவும் உருகிப்போச்சே
6320.
உருக்கியே செம்பதுவும் மலையோரத்தில் வுத்தமனே பாய்ந்துமல்லோ லிங்கமாச்சு
மெருகான லிங்கமது செம்புமாகி மேன்மையுள்ள சமாதியென்ற பீடமாச்சு
திருவான பீடமது சித்தர்கண்டு தீரமுடன் சிவலிங்க மென்றுசொல்லி
பருவமுடன் அமாவாசை காலந்தன்னில் பட்சமது குருபூசை செய்வார்தானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக