பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6341-6350

6341.
வசித்ததொரு குளிகையினால் எந்தனுக்கு வாகான மகிமைகளு மனேகமுண்டு
பசியதுவு மில்லையப்பா பண்புள்ளோனே பாலகனே சித்தர்களுக் கிடைக்குமோசொல்
நிசிதமுள்ள காயாதி கற்பந்தன்னை நிகழ்ச்சியுடன் முன்னிருந்த நாதர்தாமும்
உசிதமுடன் கண்டவரும் யாருமில்லை வுத்தமனே நாதாக்கள் சொல்லார்பாரே
6342.
சொல்லாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் சுவர்ணமென்ற மலையிலப்பா மேற்பாகத்தில்
வெல்லவே குளிகைகொண்டு வடியேன்தானும் வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே
புல்லவே வனந்தனிலே கலைமான்தன்னை புகழ்ச்சியுடன் அடியேனுங் கண்டபோது
நல்லதொரு கலைமானும் என்னைக்கண்டு நலமுடனே ஓடிவந்து பணியலாச்சே
6343.
பணிந்துமே எந்தனிட பாதம்போற்றி பட்சமுடன் எந்தனையும் வினவிகேட்க
துணிந்துமே காலாங்கி நாதர்பாதம் துப்புரவாய் மனதுவந்து அடியேன்தானும்
அணிகடனின் பதாம்புயத்தின் சீஷனென்றேன் ஆத்தாளின் கடைபாத தூளியென்றேன்
மணிபோன்ற வார்த்தையது கூறும்போது மகத்தான என்குருவே என்னலாச்சு
6344.
என்னவே காலாங்கி நாதசீஷா எழிலாக எந்தனுக்கு வந்தசாபம்
பன்னவே புஜண்டரிஷி யார்தாமும் பாங்கான கானகத்தில் யாகஞ்செய்ய
துன்னவே யடியனால் வந்தநேர்மை துப்புரவாய் யாதென்று வினவிக்கேட்பீர்
முன்னமே பெரியோர்கள் செய்தயாகம் மூதுலகில் அடியேனும் அறியேன்தானே
6345.
தானான புஜண்டமகா ரிஷியார்தாமும் தன்மையுடன் தவஞ்செய்யுங் காலந்தன்னில்
கோனான வுமதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தாமுரைத்த நீதிபோலே
தேனான மனோன்மணியாள் கிருபையாலும் தேற்றமுடன் சாபமதை நீக்கவெண்ணி
பானான குருபரனார் ரிஷியாசீர்மம் பாங்குடனே யான்வணங்கி நின்றிட்டேனே
6346.
நின்றேனே புஜண்டமகா ரிஷியார்பக்கல் நிட்களங்க மானதொரு சமாதிதன்னை
சென்றேனே நெடுங்காலம் நானிருந்தேன் தேஜொளியின் கிருபையது வண்மையாலே
வென்றதொரு யான்செய்த பாவந்தன்னை வேட்கையுடன் அணிதவரா வண்ணம்யானும்
குன்றுடனே மலைதேடி சமாதிபக்கல் கொற்றவனே சாபமதால் சென்றிட்டேனே
6347.
இட்டதொரு சாபமதை நீக்கியல்லோ எழிலாக வெந்தனுக்குக் காட்சிதந்து
சட்டமுடன் ஞானோப தேசங்கொண்டு சாயுச்சிய பதவிதனைக் காணவென்று
திட்டமுடன் மனோலயத்தால் அருளுந்தந்து தீர்க்கமுடன் ஆசீர்மஞ் சாபம்நீக்கி
விட்டகுறை இருந்ததொரு நேர்மையாலே விடுதிக்கிப் போகவென வருள்கொள்வீரே
6348.
கொள்ளவென்று கலைமானுங் கூறும்போது கொப்பெனவே காலாங்கி கடாட்சத்தாலே
தெள்ளமுர்த மானபரா பரியின்பாதம் தேற்றமுடன் அடியேனும் முடிவணங்கி
எள்ளளவுந் தீங்குமிக நேராமற்றான் எழிலான மனோன்மணியைப் போற்றிச்செய்து
உள்ளபடி கலைமானைப் பாதுகாக்க உவமையுடன் என்மனதில் எண்ணினேனே
6349.
எண்ணியே கலைமானின் சாபம்தீர்ந்தேன் எழிலான காயாதிதான் கொடுக்க
உண்ணவே நெடுங்காலந் தானிருந்தேன் உத்தமனே சித்துமுனி ரிஷியார்கூட்டம்
வண்ணமுடன் கலைமானின் கற்பந்தன்னை வாகுபெற வுண்டவர்கள் ஆருமில்லை
கண்ணபிரான் கொண்டதொரு கற்பந்தானும் கலைமானின் கற்பத்துக் கீடாகாதே
6350.
ஈடான கற்பமதை உண்டேன்யானும் எழிலான வையகத்து மாண்பரெல்லாம்
தேடாமல் கற்பமதை யுண்டேன்யென்று தேசமதில் சன்னியாசி வேஷங்கொண்டு
கோடான கோடிபொருள் சம்பாதிக்க கூறினார் கற்பமது கொண்டேன்யென்று
தாடாண்மை கொண்டதொரு பொய்ழஞானிக்கு தாரணியில் தனங்கொடுத்து கெட்டார்பாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக