பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6321-6330

6321.
தானான பூசையது செய்யும்போது தாக்கான சிவலிங்கந் தன்னில்நின்று
தேனான ஜலமதுவும் முத்துபோலே தேற்றமுடன் சிவலிங்கந் தன்னிற்பொங்கி
கோனான விஷமதுவும் பொங்கியல்லோ கொப்பெனவே ஜலமதுவாய் சுத்திநிற்கும்
பானான நிலமதனை எடுத்துசித்தர் பாங்குடனே சீசாவில் அடைப்பார்பாரே
6322.
பாரேதான் ஜலமதனை எடுத்துமல்லோ பாங்கான செம்பதனை யுருக்கிக்கொண்டு
நேரேதான் ஆயிரமாங் களஞ்சிதானும் நேர்மையுடன் தானுருவங் காலந்தன்னில்
சேரேதான் இருக்குமுகந் தன்னிலப்பா சேர்வைகண்டு விஷநீரை தாக்குவார்பார்
கூரேதான் ஆயிரத்துக்கோர் களஞ்சிகொடுத்து வுருக்கியல்லோ எடுப்பார்காணே
6323.
காணவே ஆயிரத்து எட்டுமாற்று கனமான தேவேந்திரன் தங்கமாச்சு
பூணவே தங்கமது பிறவித்தங்கம் புகழான சித்துமுனி வழங்குந்தங்கம்
வீணவே பூசைக்கு வுதவுந்தங்கம் வேறுபடாத் தங்கமது சுயம்புத்தங்கம்
நீணவே கைலாச நாதர்தாமும் நீதியுடன் வீற்றிருக்கும் பீடந்தானே
6324.
பீடமாம் ஆயிரங்கண் இந்திரர்க்கு பேரான வாசனத்தின் தங்கமாகும்
கூடகோ புரந்தனுக்கு சிகரந்தங்கம் குவலயத்தில் மாண்பர்களுங் காணாத்தங்கம்
மாடமாளிகை நெருங்கும் மன்னர்தாமும் மார்க்கமுடன் ஆதீனத் தங்கமாகும்
தேடறியா நாதாக்கள் ரிஷிகள்தேவர் தோற்றமுடன் கண்டதொரு தங்கமாமே
6325.
தங்கமாம் புவனகிரி தன்னில்நின்று தாக்கான விஷமீறி வந்ததங்கம்
லிங்கமாம் சமாதியென்ற பீடந்தன்னில் நிஷ்களங்க மாகிவந்த தங்கமாச்சு
புங்கசித்தி எட்டுடனே பிறந்ததங்கம் புகழான நாதாக்கள் வசிக்குந்தங்கம்
பங்கமிலாத் தங்கமது பாரில்மாண்பர் பார்க்காத பிறவியென்ற தங்கமாச்சே
6326.
ஆச்சப்பா யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி சுகுணமாரா
பாச்சலென்ற பாஷாண கற்பஞ்சொல்வேன் பாருலகில் நாதாக்கள் சொன்னதில்லை
நீச்சுடைய சர்ப்பமது தான்பிடித்து நீமகனே பாஷாணங் களஞ்சிரெண்டு
மூச்சுடனே சர்ப்பமது தானிருக்க முனியான பாஷாணந் தன்னைவாங்கே
6327.
வாங்கியே அரவத்தின் வாயில்தன்னில் வளமான பாஷாணங் களஞ்சிதன்னை
தூங்கியே திரியாமல் மைந்தாபாரு துப்புரவாய் வாயில் வைத்து தைத்துப்போடு
ஏங்கியே போகாமல் பாண்டந்தன்னில் எழிலாகத் தானடைத்து வாரமிட்டு
ஓங்கியே போகாமல் மேலுமூடி வுத்தமனே பதனமது நாள்தானெட்டே
6328.
எட்டான நாளதுவுஞ் சென்றபின்பு யெளிதான பாண்டமதை திறந்துமைந்தா
கட்டான அரவத்தின் வாயைத்தானும் கடுகெனவே தானவிழ்த்து பார்க்கும்போது
திட்டமுடன் அரவமது ஜீவன்செத்து தீர்க்கமுடன் உயிரதுவும் சற்றேநிற்கும்
சட்டமுடன் பாஷாணந் தனையெடுத்து சாங்கமுடன் பாம்புக்குப் பாலைவாரே
6329.
வார்க்கையிலே யரவமது உயிருண்டாகி வளமான அரவமது மலமேசெல்லும்
பார்க்கையிலே பாஷாணம் விஷந்தானேறி பாங்கான காயகற்ப மாச்சுதப்பா
தீர்க்கமுடன் பாஷாணந் தனையெடுத்து திணையளவு வாகவல்லோ மண்டலந்தான்
ஏற்கையிலே மண்டலமும் மூன்றுகொண்டால் யெழிலான காயமது இருக்கும்பாரே
6330.
அறுகுமே பாஷாண கற்பத்தாலே எழிலான கற்பமது கொண்டபேர்க்கு 
குறுகியே தேகமது வயிரம்போலாம் குவலயத்தில் சித்துமுனி தம்மைப்போலே
அறுவதுவும் மிகவாகி புத்தியுண்டாய் அவனியிலே நீயுமொரு சித்தனாவாய்
நறுவலென்ற திரைநரையும் அற்றுப்போகும் நாதாந்த சித்தொளிவு நிதியுமாச்சே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக