பக்கங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

போகர் சப்த காண்டம் bogar sapdha kaandam 7000 6331-6340

6331.
சித்தான சித்துமுனி ரிஷிகளெல்லாம் தேசமதில் பலபலவாய் நூல்கள்கூறி
முத்தான பாஷாண கற்பஞ்சொல்ல மூதுலகில் மறைத்துவைத்தார் சித்தரெல்லாம்
சத்தசா கரங்கடந்து குளிகைபூண்டு சாயுச்சிய பதவிதனைக் காணவென்று
புத்தியுடன் காலாங்கி தாள்பணிந்து புகழான கற்பமதைக் கூறிட்டேனே
6332.
கூறினேன் கற்பமதைக் கொண்டபேர்க்கு குவலயத்தில் நெடுங்கால மிருக்கலாகும்
மாறிட்ட மேனியது தங்கம்போலாம் மகத்தான வாசியது மேல்நோக்காது
நின்றிட்ட மேனியது தவளம்போலாம் நிட்களங்க வாசியது மேலோடாது
வீறிட்டு வார்த்தையது மொழிசொன்னாலும் வீணாகித் தேகமது குண்ணாதன்றே
6333.
அன்றான புலிப்பாணி மைந்தாகேளு வப்பனே சொல்லுகிறேன் உந்தமக்கு
குன்றான மலையேறி குகைகடந்து கூறான சுவர்ணகிரி பதியமர்ந்து
வென்றிடவே குளிகையது பூண்டுகொண்டு வீறான சிகரமென்ற பதியைக்கண்டேன்
தென்றிசையில் தட்சணா மூர்த்திநாயன் தோற்றமுடன் கண்டதொரு கூர்மந்தானே
6334.
தானான கூர்மமது தன்னைக்கண்டேன் தாக்கான திரேதாயி னுகத்திலப்பா
மானான பிரளயங்கள் வந்தபோது மகத்தான கூர்மமது மலையிற்சென்று
தேனான மனோன்மணியாள் இருக்கும்பீடம் தெரிசனமே செய்வதற்கு மனதிலுன்னி
பானான பார்லோகப் பிரளயத்தில் பட்சமுடன் கூர்மமது வந்ததாச்சே
6335.
வந்ததொரு கூர்மத்தைக் கண்டேன்யானும் வளம்பெரிய சுவர்ணகிரி மலையிலப்பா
அந்தமுடன் மலையைவிட்டு கீழிறங்கி வப்பனே சுனையருகே சென்றேன்யானும் 
சிந்தனையாய் மனதுவந்து படியிறங்கி சிற்பரனைத் தெரிசிக்க தியானங்கொண்டு
சந்தோஷ மாகியல்லோ சுனையோரத்தில் சட்டமுடன் இறங்கையிலே கண்டிட்டேனே
6336.
கண்டவுடன் கூர்மமது எனைப்பணிந்து கைலாச நாதரென்று தாள்பணிந்து
தெண்டமுடன் பதாம்புயத்தை பணிந்துபோற்றி தெளிவாக சுனையேறி மேலேநின்று
அண்டர்பிரான் எந்தனையுங் காணவந்த வன்பான போகரிஷி நாதாகேளும்
துண்டரிக மாகவல்லோ தட்சணாயன் துப்புரவாய் சாபமது தந்திட்டாரே
6337.
தந்ததொரு சாபத்தால் திரேதாயுகத்தில் சட்டமுடன் பிரளயத்தில் வந்தேனிங்கே
அந்தமுடன் நெடுங்காலம் சுனையில்யானும் வன்புடனே வாசமது செய்திருந்தேன்
சித்ததொரு சுவர்ணகிரி சுனையில்தானும் சிறப்பான சித்துமுனி வந்ததில்லை
வந்தையுடன் எந்தனுக்கு சாபந்தீர்க்க விட்டகுறை இருந்ததினால் வந்தீர்பாரே
6338.
பாரேதான் காலாங்கி நாதபாதா பட்சமுடன் எந்தன்மேல் கிருபைவைத்து
சீரேதான் சாபமதை நிவர்த்திசெய்து தீர்க்கமுடன் எந்தனையு மீட்பீரானால்
நேரேதான் உந்தமக்குக் காயகற்பம் நெடுங்காலந் தானிருக்க யான்கொடுப்பேன்
கூரேதான் வார்த்தையது மொழியுங்கூறி குறிப்புடனே வரலாறு கூறலாச்சே
6339.
கூறவே கூர்மமது சொல்லும்போது கொற்றவனே சாபமது நிவர்த்திசெய்தேன்
மீறவே கூர்மமதை சாபம்நீக்கி மிக்கான கற்பமதைக் கேட்கும்போது
மாறவே எந்தனுக்குத் தெரியவோதி மகத்தான கற்பமதைக் கேட்கும்போது
நாறலுடன் கூர்மமது வயிற்றிருக்கும் நலமான குளிகைதனைத் தருகலாச்சே
6340.
தருகவே வயிற்றிலுள்ள காயகற்பம் தண்மையுடன் மனதுவந்து அடியேன்தானும்
பெருகவே யான்வாங்கி மண்டலந்தான் பேரான குளிகைதனில் குன்றியுண்ண
மெருகலுடன் தேகமது இறுகியல்லோ மேதினியில் நெடுங்கால மிருப்பதற்கு
பொருகவே காயாதி கற்பங்கொண்டு பேறான வுலகுதனில் வசித்திட்டேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக