5201.
பாரேதான் எந்தனுக்குச் சொன்னமார்க்கம் பாருலகில் யாவருக்குஞ் சொன்னதில்லை
நேரேதான் வெகுகால கோடியப்பா நேர்மையுடன் காலாங்கி நாதர்தாமும்
தீரேதான் குருபாதங் கார்த்திருந்து தீரமுடன் வாங்கினதோர் வித்தையப்பா
சீரேதான் உந்தனுக்கு யானுமல்லோ சிறப்புடனே யோதிவைக்கும் வண்மைகேளே
5202.
கேளப்பா வையகத்தில் நன்மைதுன்மை கீர்த்தியுடன் தானிருக்கும் வளமைதானும்
சூளப்பா தேகமது வழியாவண்ணம் சுந்தரனே வெகுகால மிருப்பதற்கும்
நாளப்பா போகாமல் கற்பஞ்சொல்வேன் நளினமுடன் கற்பமது என்னவென்றால்
ஆளப்பா வாகாய கற்பமாகும் வப்பனே சொல்லுகிறேன் வரிசைபாரே
5203.
வரியான புலிப்பாணி கண்ணேகேளு வாகுபெற வாகாய தெரிசனந்தான்
துரிதமுடன் வையகத்தி லிருப்பதற்கு துப்புரவாய்ச் சாதனங்கள் உரைப்பேன்கேளிர்
சரியான பூமிதனில் மேடுபள்ளம் சட்டமுட னாராய்ந்து சரிதைகாண
பிரியமுடன் செங்கதிரோன் கிழக்குதிக்க பிசகாமல் மேற்குமுகந் தன்னைக்காணே
5204.
காணவே சாமமது ரெண்டுக்குள்ளே கருவான காயாதி கற்பங்கொண்டு
கோணவே போசனங்க ளுண்டுமேதான் தோறாமல் பூமிதனில் நின்றுகொண்டு
நாணவே முடிதனையே யசைக்காமற்றான் நன்மையுடன் இருகரமுந் தொங்கவிட்டு
பூணவே தன்னிழலைக் கண்ணிற்கண்டு பொங்கமுடன் நன்மைதுன்மை யறிந்திடாயே
5205.
அறியவே நுட்பமது என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை
முறியவே நேத்திரங்கள் இமைகொட்டாமல் முனையான தன்சிரசைத் தானும்பார்த்து
குறிப்புடனே வாகாயந் தன்னைநோக்கி கொற்றவனே பார்க்குமந்த சமயந்தன்னில்
நெறியுடனே யுமைப்போல ரூபங்காணும் நேர்மையுடன் ரூபமதில் வினயங்கேளே
5206.
வினயமது என்னவென்றால் செப்பக்கேளிர் வேதாந்தத் தாயினது சொரூபம்போல
நினவதுவுந் தவறாமல் மைந்தாநீதான் நீதியுடன் ஆகாயந் தன்னிற்றானும்
கனவுகண்ட கதைபோலே சுடரானந்தங் கண்ணிற்குத் தோன்றுமப்பா கடினவேதை
பனையளவு வுயரமப்பா வுந்தன்ரூபம் பாரினிலே தானிருந்து காணலாமே
5207.
காணவென்றால் சொரூபமது முறைமைசொல்வேன் கண்ணிற்கு வாகாயந் தன்னிலப்பா
தோணவே சுடரொளிபோல் உந்தன்ரூபம் தோற்றுமப்பா கண்ணிற்குக் கூச்சங்காணும்
சாணளவு ரூபமது கொண்டுமல்லோ சட்டமுடன் பனையளவாய்த் தோற்றும்பாரு
நீணவே மாயாதி ரூபந்தானும் நிட்களங்க மாகவல்லோ தோற்றும்பாரே
5208.
பார்க்கையிலே சிரசதும் தோன்றாவிட்டால் பாலகனே ஒருதிங்கள் சாவான்பாரு
தீர்க்கமுடன் இருகரமுங் காணாவிட்டால் தினமதுவும் மூன்றுதிங்கள் மறிப்பான்பாரு
சேர்க்கவே மார்பதனில் துவாரங்கண்டு செங்கதிரோன் கண்ணிற்குத் தோற்றுமாகில்
ஆற்றவே யறுதிங்கள் மரணமாவான் அப்பனே சாயாவின் ரூபந்தானே
5209.
தானான தரிசனங்கள் காணும்போது தகமையுள்ள சொரூபமது குறைவைகண்டால்
கோனான காலாங்கி வாக்குபோல கொற்றவனே முடிவதற்கு பிசகொன்றில்லை
தேனான மனோன்மணியாள் சொரூபம்போல தெளிவாக வுன்ரூபங் கண்டாயானால்
பானான பாருலகில் வெகுகாலந்தான் பாலகனே இருப்பதுவும் வுறுதியாமே
5210.
உறுதியாம் பனிரெண்டு வாண்டுதானும் வுத்தமனே தரிசனங்கள் காண்பாயானால்
நிறுதியாய் வுன்ரூபங் கண்டரூபம் நிட்களங்க மாகவல்லோ பின்தொடர்ந்து
சுருதியுடன் கருவிகர ணாதியோடு சுத்தமுடன் வுடலாவி கொண்டுமல்லோ
பரிதிவிட்டு யுந்தனிழல் கூடேநிற்கும் பாலகனே சாயாவின் வண்மைபாரே
பாரேதான் எந்தனுக்குச் சொன்னமார்க்கம் பாருலகில் யாவருக்குஞ் சொன்னதில்லை
நேரேதான் வெகுகால கோடியப்பா நேர்மையுடன் காலாங்கி நாதர்தாமும்
தீரேதான் குருபாதங் கார்த்திருந்து தீரமுடன் வாங்கினதோர் வித்தையப்பா
சீரேதான் உந்தனுக்கு யானுமல்லோ சிறப்புடனே யோதிவைக்கும் வண்மைகேளே
5202.
கேளப்பா வையகத்தில் நன்மைதுன்மை கீர்த்தியுடன் தானிருக்கும் வளமைதானும்
சூளப்பா தேகமது வழியாவண்ணம் சுந்தரனே வெகுகால மிருப்பதற்கும்
நாளப்பா போகாமல் கற்பஞ்சொல்வேன் நளினமுடன் கற்பமது என்னவென்றால்
ஆளப்பா வாகாய கற்பமாகும் வப்பனே சொல்லுகிறேன் வரிசைபாரே
5203.
வரியான புலிப்பாணி கண்ணேகேளு வாகுபெற வாகாய தெரிசனந்தான்
துரிதமுடன் வையகத்தி லிருப்பதற்கு துப்புரவாய்ச் சாதனங்கள் உரைப்பேன்கேளிர்
சரியான பூமிதனில் மேடுபள்ளம் சட்டமுட னாராய்ந்து சரிதைகாண
பிரியமுடன் செங்கதிரோன் கிழக்குதிக்க பிசகாமல் மேற்குமுகந் தன்னைக்காணே
5204.
காணவே சாமமது ரெண்டுக்குள்ளே கருவான காயாதி கற்பங்கொண்டு
கோணவே போசனங்க ளுண்டுமேதான் தோறாமல் பூமிதனில் நின்றுகொண்டு
நாணவே முடிதனையே யசைக்காமற்றான் நன்மையுடன் இருகரமுந் தொங்கவிட்டு
பூணவே தன்னிழலைக் கண்ணிற்கண்டு பொங்கமுடன் நன்மைதுன்மை யறிந்திடாயே
5205.
அறியவே நுட்பமது என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை
முறியவே நேத்திரங்கள் இமைகொட்டாமல் முனையான தன்சிரசைத் தானும்பார்த்து
குறிப்புடனே வாகாயந் தன்னைநோக்கி கொற்றவனே பார்க்குமந்த சமயந்தன்னில்
நெறியுடனே யுமைப்போல ரூபங்காணும் நேர்மையுடன் ரூபமதில் வினயங்கேளே
5206.
வினயமது என்னவென்றால் செப்பக்கேளிர் வேதாந்தத் தாயினது சொரூபம்போல
நினவதுவுந் தவறாமல் மைந்தாநீதான் நீதியுடன் ஆகாயந் தன்னிற்றானும்
கனவுகண்ட கதைபோலே சுடரானந்தங் கண்ணிற்குத் தோன்றுமப்பா கடினவேதை
பனையளவு வுயரமப்பா வுந்தன்ரூபம் பாரினிலே தானிருந்து காணலாமே
5207.
காணவென்றால் சொரூபமது முறைமைசொல்வேன் கண்ணிற்கு வாகாயந் தன்னிலப்பா
தோணவே சுடரொளிபோல் உந்தன்ரூபம் தோற்றுமப்பா கண்ணிற்குக் கூச்சங்காணும்
சாணளவு ரூபமது கொண்டுமல்லோ சட்டமுடன் பனையளவாய்த் தோற்றும்பாரு
நீணவே மாயாதி ரூபந்தானும் நிட்களங்க மாகவல்லோ தோற்றும்பாரே
5208.
பார்க்கையிலே சிரசதும் தோன்றாவிட்டால் பாலகனே ஒருதிங்கள் சாவான்பாரு
தீர்க்கமுடன் இருகரமுங் காணாவிட்டால் தினமதுவும் மூன்றுதிங்கள் மறிப்பான்பாரு
சேர்க்கவே மார்பதனில் துவாரங்கண்டு செங்கதிரோன் கண்ணிற்குத் தோற்றுமாகில்
ஆற்றவே யறுதிங்கள் மரணமாவான் அப்பனே சாயாவின் ரூபந்தானே
5209.
தானான தரிசனங்கள் காணும்போது தகமையுள்ள சொரூபமது குறைவைகண்டால்
கோனான காலாங்கி வாக்குபோல கொற்றவனே முடிவதற்கு பிசகொன்றில்லை
தேனான மனோன்மணியாள் சொரூபம்போல தெளிவாக வுன்ரூபங் கண்டாயானால்
பானான பாருலகில் வெகுகாலந்தான் பாலகனே இருப்பதுவும் வுறுதியாமே
5210.
உறுதியாம் பனிரெண்டு வாண்டுதானும் வுத்தமனே தரிசனங்கள் காண்பாயானால்
நிறுதியாய் வுன்ரூபங் கண்டரூபம் நிட்களங்க மாகவல்லோ பின்தொடர்ந்து
சுருதியுடன் கருவிகர ணாதியோடு சுத்தமுடன் வுடலாவி கொண்டுமல்லோ
பரிதிவிட்டு யுந்தனிழல் கூடேநிற்கும் பாலகனே சாயாவின் வண்மைபாரே