5241.
நம்பவென்றால் சைவங்க ளில்லையப்பா நாதாந்த சித்துகளுஞ் சொல்லவில்லை
வம்பென்று மறைத்துவைத்தார் சைவந்தன்னை வளமுடனே புலால்தின்னார் எவருமில்லை
வெம்பியதோர் ரோகமென்ற செம்மறிதானப்பா விருப்பமுடன் பொசிக்கின்றார் சூத்திரருமப்பா
தும்பியுடன் பிரம்மகுல ஷத்திரியர்தாமும் துகளகற்றி நெய்மோரை குடிப்பார்தாமே
5242.
குடிப்பாரே பால்தயிர்கள் நெய்குடிப்பார் குற்றமென்று யிறைச்சிதனை நீக்கிவிட்டார்
நடிப்புடனே சைவமென்று சொல்லலாமோ நாதாக்கள் கைமறைப்பாய்க் காட்டவில்லை
துடிப்புடனே மற்றதோர் ஜாதியெல்லாம் துப்புரவாய் புலால்வகைகள் மிகவுந்தின்பார்
அடிப்படைதான் மாமிஷங்கள் என்னலாகும் அப்பனே மேல்மிதக்கும் நெய்யுமாமே
5243.
நெய்யான வகைகளெல்லாம் கொஞ்சமல்ல நிட்சயமாய் சேருக்கு எட்டிலொன்று
துய்யதொரு மாமிஷங்கள் தின்போன்சைவன் துப்புரவாய் நெய்தின்போன் சைவனல்ல
வெய்யதொரு மாமிஷத்தில் நெய்யேயில்லை விருப்பமுடன் ரத்தமது சுண்டியல்லோ
பையவே பாலாகி வந்தநெய்தான் பாலகனே இறைச்சிக்கு வதிகமாமே
5244.
அதிகமாம் காய்கறிகள் புழுவேயுண்டு வப்பனே யெலைவகையில் புழுவுமுண்டு
கதிதமுடன் தண்ணீரிற் புழுவுமுண்டு கண்காணா யெச்சலது மலுமுமுண்டு
துதிதமுடன் சுத்தமது யெதிலேயுண்டு சுகமுண்டோ சைவத்தி லதிகமுண்டோ
பதிதமுடன் பொய்ச்சைவ மல்லாலப்பா பாரினிலே மெய்ச்சைவ முண்டோபாரே
5245.
பாரப்பா யின்னம்வெகு வினோதமப்பா பாரினிலே மாணாக்கர் செய்யுமார்க்கம்
ஆரப்பா கற்பகத் தருவின்மூலம் வப்பனே யார்தின்ற யெச்சிலப்பா
சீரப்பா மாண்பரெல்லாம் ஆதாரந்தான் சிறப்புடைய கிழங்கென்று பொசித்தாரப்பா
நேரப்பா பலபேரும் பொசித்தமூலம் நினைவழிந்து நின்றுமல்லோ கெட்டார்மாண்பரே
5246.
கெட்டாரே யிப்படியே வையகத்தோர் கேடழிந்து சீரழிந்து சைவங்கெட்டு
இட்டபடி பிறவியென்ற சைவமாக எழிலுடனே மாண்பரெல்லாம் நம்புறார்கள்
தொட்டதொரு பொருளெல்லாம் சைவமில்லை தோராமல் மாண்பரெல்லாம் புலாலேதின்போர்
சட்டமுடன் எந்தன்குரு காலாங்கிநாதர் சாங்கமுடன் எந்தனுக்கு வுரைத்தநூலே
5247.
நூலான நூலுக்குள் அதிதங்காணும் நுட்பமென்ற பொருளெல்லாம் இதிலேதோயும்
காலான காலாங்கி சொன்னவாக்கு காசினியில் பொய்யாது மெய்யேயாகும்
மாலான மாண்பரெல்லாம் சிற்றின்பத்தில் மதிகெட்டு தேவதா மங்கையோடு
கோலான லீலையது மிகவுமாடி குவலயத்தில் யெல்லிதனை விரும்பினாரே
5248.
விரும்பியே கலவிதனி லிருவரெச்சை மெய்யுட லாவிபொருள் எல்லாந்தந்து
சுரும்பியன கைப்பொருள்கள் யாவுந்தந்து சுந்தரமே மோட்சமிது யோனியென்று
கரும்புடனே மூத்திரக் குழியையப்பா கைலாச மேருகிரி யென்றுநம்பி
துரும்பாகப் போனவர்கள் கோடாகோடி தூங்கியே மாண்டவர்கள் கோடியாமே
5249.
கோடியாம் ரிஷிதேவர் முதலாயுள்ளோர் குவலயத்தில் மாண்டவர்கள் கணக்கோயில்லை
தேடியே மாயவலை சிக்கியல்லோ தேசத்தில் கெட்டவர்கள் அதிகமாண்பர்
நீடியே வையகத்தி லிருந்தாரில்லை நிட்சயமாய் காலங்கி சொன்னநீதி
வாடியே போகரிஷி யடியேனப்பா வன்புடனே தாமுரைத்த நீதிதாமே
5250.
தானான நீதியது யாருக்கென்றால் தாரணியில் சீனபதி யுலகத்தோர்கள்
மானான வாக்கியத்தை மெய்யென்றெண்ணி மகவதிலும் பதின்மடங்கு வதிகமாக
கோனான காலாங்கி நாதர்சொல்லை கொப்பெனவே மெய்யென்று நம்பியல்லோ
வேனான வொழுக்கம் ஆசாரத்தோடும் மேதினியில் நடப்பதுவும் உண்மையாமே
நம்பவென்றால் சைவங்க ளில்லையப்பா நாதாந்த சித்துகளுஞ் சொல்லவில்லை
வம்பென்று மறைத்துவைத்தார் சைவந்தன்னை வளமுடனே புலால்தின்னார் எவருமில்லை
வெம்பியதோர் ரோகமென்ற செம்மறிதானப்பா விருப்பமுடன் பொசிக்கின்றார் சூத்திரருமப்பா
தும்பியுடன் பிரம்மகுல ஷத்திரியர்தாமும் துகளகற்றி நெய்மோரை குடிப்பார்தாமே
5242.
குடிப்பாரே பால்தயிர்கள் நெய்குடிப்பார் குற்றமென்று யிறைச்சிதனை நீக்கிவிட்டார்
நடிப்புடனே சைவமென்று சொல்லலாமோ நாதாக்கள் கைமறைப்பாய்க் காட்டவில்லை
துடிப்புடனே மற்றதோர் ஜாதியெல்லாம் துப்புரவாய் புலால்வகைகள் மிகவுந்தின்பார்
அடிப்படைதான் மாமிஷங்கள் என்னலாகும் அப்பனே மேல்மிதக்கும் நெய்யுமாமே
5243.
நெய்யான வகைகளெல்லாம் கொஞ்சமல்ல நிட்சயமாய் சேருக்கு எட்டிலொன்று
துய்யதொரு மாமிஷங்கள் தின்போன்சைவன் துப்புரவாய் நெய்தின்போன் சைவனல்ல
வெய்யதொரு மாமிஷத்தில் நெய்யேயில்லை விருப்பமுடன் ரத்தமது சுண்டியல்லோ
பையவே பாலாகி வந்தநெய்தான் பாலகனே இறைச்சிக்கு வதிகமாமே
5244.
அதிகமாம் காய்கறிகள் புழுவேயுண்டு வப்பனே யெலைவகையில் புழுவுமுண்டு
கதிதமுடன் தண்ணீரிற் புழுவுமுண்டு கண்காணா யெச்சலது மலுமுமுண்டு
துதிதமுடன் சுத்தமது யெதிலேயுண்டு சுகமுண்டோ சைவத்தி லதிகமுண்டோ
பதிதமுடன் பொய்ச்சைவ மல்லாலப்பா பாரினிலே மெய்ச்சைவ முண்டோபாரே
5245.
பாரப்பா யின்னம்வெகு வினோதமப்பா பாரினிலே மாணாக்கர் செய்யுமார்க்கம்
ஆரப்பா கற்பகத் தருவின்மூலம் வப்பனே யார்தின்ற யெச்சிலப்பா
சீரப்பா மாண்பரெல்லாம் ஆதாரந்தான் சிறப்புடைய கிழங்கென்று பொசித்தாரப்பா
நேரப்பா பலபேரும் பொசித்தமூலம் நினைவழிந்து நின்றுமல்லோ கெட்டார்மாண்பரே
5246.
கெட்டாரே யிப்படியே வையகத்தோர் கேடழிந்து சீரழிந்து சைவங்கெட்டு
இட்டபடி பிறவியென்ற சைவமாக எழிலுடனே மாண்பரெல்லாம் நம்புறார்கள்
தொட்டதொரு பொருளெல்லாம் சைவமில்லை தோராமல் மாண்பரெல்லாம் புலாலேதின்போர்
சட்டமுடன் எந்தன்குரு காலாங்கிநாதர் சாங்கமுடன் எந்தனுக்கு வுரைத்தநூலே
5247.
நூலான நூலுக்குள் அதிதங்காணும் நுட்பமென்ற பொருளெல்லாம் இதிலேதோயும்
காலான காலாங்கி சொன்னவாக்கு காசினியில் பொய்யாது மெய்யேயாகும்
மாலான மாண்பரெல்லாம் சிற்றின்பத்தில் மதிகெட்டு தேவதா மங்கையோடு
கோலான லீலையது மிகவுமாடி குவலயத்தில் யெல்லிதனை விரும்பினாரே
5248.
விரும்பியே கலவிதனி லிருவரெச்சை மெய்யுட லாவிபொருள் எல்லாந்தந்து
சுரும்பியன கைப்பொருள்கள் யாவுந்தந்து சுந்தரமே மோட்சமிது யோனியென்று
கரும்புடனே மூத்திரக் குழியையப்பா கைலாச மேருகிரி யென்றுநம்பி
துரும்பாகப் போனவர்கள் கோடாகோடி தூங்கியே மாண்டவர்கள் கோடியாமே
5249.
கோடியாம் ரிஷிதேவர் முதலாயுள்ளோர் குவலயத்தில் மாண்டவர்கள் கணக்கோயில்லை
தேடியே மாயவலை சிக்கியல்லோ தேசத்தில் கெட்டவர்கள் அதிகமாண்பர்
நீடியே வையகத்தி லிருந்தாரில்லை நிட்சயமாய் காலங்கி சொன்னநீதி
வாடியே போகரிஷி யடியேனப்பா வன்புடனே தாமுரைத்த நீதிதாமே
5250.
தானான நீதியது யாருக்கென்றால் தாரணியில் சீனபதி யுலகத்தோர்கள்
மானான வாக்கியத்தை மெய்யென்றெண்ணி மகவதிலும் பதின்மடங்கு வதிகமாக
கோனான காலாங்கி நாதர்சொல்லை கொப்பெனவே மெய்யென்று நம்பியல்லோ
வேனான வொழுக்கம் ஆசாரத்தோடும் மேதினியில் நடப்பதுவும் உண்மையாமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக