5231.
காண்பித்தார் மாண்பருக்கு வினோதவித்தை களிப்புறவே போகரிஷி நாதர்தாமும்
ஆண்பிள்ளை புலிப்பாணி எந்தன்பாலா வப்பனே யுந்தனுக்கு வினோதஜாலம்
நண்பான பானையது பாண்டமப்பா நவிலவே யானுரைப்பேன் மைந்தாகேளு
சாண்பான தவளமது கலசம்போல சட்டமுடன் செய்துமல்லோ செப்பக்கேளே
5232.
செப்பவென்றால் நாவில்லை பாவுமில்லை ஜெகதலத்தில் நாதாக்கள் சொன்னதில்லை
ஒப்பமுடன் பாண்டமது செய்துமல்லோ ஒளிவான நறுவளிய மாபழத்தையப்பா
இப்புவியில் மாண்பர்களுக் கறியாமற்றான் யெழிலான பழமதுவைப் பாண்டத்துள்ளே
அப்பியே பூசியல்லோ காயப்போடு அங்ஙனவே செய்யுமுறை வறையக்கேளே
5233.
கேளப்பா ஜலமதனை பாண்டமிட்டு செப்புகிறேன் கட்டுயென்ற கொடிதானப்பா
பாளப்பாப் போகாமல் யெனையுங்கூட்டி பாங்குபெற சார்பிழிந்து ஜலத்தினுள்ளே
நாளப்பா போகாமல் அப்போதேதான் நலம்பெறவே சார்பிழிந்து சீனிபோட்டு
ஆலேதான் எல்லவரும் பார்த்திருக்க வப்பனே பாண்டமதை வுடைத்திடாயே
5234.
உடைக்கவே ஜலமதுதான் வூறல்போல வுத்தமனே இறுகியல்லோ வெண்ணைபோலாம்
படைசேர்ந்த கொலுமுகத்தில் இந்தஜாலம் பாலகனே செய்துமல்லோ வெண்ணையீவாய்
தடையறவே மாண்பரெல்லாங் கண்டுயேங்கி தகமையுடன் பொசித்தல்லோ யுன்னைமெச்சி
சடைபோன்ற தம்பிரான் மகுத்துவந்தான் தாரிணியில் இவர்போலு மில்லையென்பாரே
5235.
என்னவே வேணதொரு பொருளுமீவார் எழிலான மாந்திரீக ரென்றுமல்லோ
துன்னவே யுந்தனுக்கு சோடசாரம் தோறாமல் செய்தல்லோ தனமுமீவார்
நன்னயமாய் வேதாந்த சித்துவென்று நாட்டினிலே யுந்தமக்குப் பேருண்டாகும்
பன்னவே பலபேரும் போற்றுவார்கள் பாலகனே நீயுமொரு சித்தனாமே
5236.
சித்தனா மின்னமொரு மார்க்கஞ்சொல்வோம் சிறப்பான புலிப்பாணி மைந்தாகேளு
பக்தியுடன் குளிகையது பூண்டுமல்லோ பார்லோகம் சத்தகடல் சுத்திவந்தேன்
முத்திபெற மாண்பரெல்லாங் கோடிகோடி முயன்றுமே காவிக ஷாயத்தோடும்
நித்தமுமே ஜெபதபங்கள் அதிகமுண்டு நீணிலத்தில் வெகுபேர்கள் கோடியாமே
5237.
கோடியாம் சாதியிலே யனந்தஞ்சாதி கொற்றவனே பதினெட்டு ஜாதியுண்டு
பேடிகளுஞ் சூரர்களு மெத்தவுண்டு பேரான பதிதனிலே லக்கோயில்லை
தேடியே பலதேசங் கண்டாராய்ந்தேன் தேசத்தில் சைவமது காணவில்லை
நீடிரே வெகுமாண்பர் தேசமெல்லாம் நிலையான சைவமென்று சொல்வார்பாரே
5238.
சொல்லுவது வாக்கியத்தைக் கேட்டதுண்டு சொற்பமுள்ள சைவர்களைக் கண்டதில்லை
பல்லவே இறைச்சிவகை புசியோமென்றும் புலால்வகைகள் புசிப்பதில்லை யென்றுகூறி
வெல்லவே மதாச்சார பேதாபேதம் வெகுவாகப் பினத்தியல்லோ திரிவார்பாரு
கொல்லவே நித்தியமும் புலாலைத்தின்று கூசாமல் சைவமென்று கூறுவாரே
5239.
கூறுவார் பலபேத ஜாதிதன்னில் குறிப்புடனே பிரம்மென்ற ஜாதியப்பா
மாறுதலாம் சைவத்தைக் கூறியல்லோ மகுத்துவங்கள் ஆகமங்கள் மிகவுஞ்சொல்லி
தாறுமா றாகவல்லோ வேதங்கள்கூறி தாரிணியில் வெகுமாண்பர் பிழைப்பாரப்பா
ஆறுதலம் கரைகண்ட யோகநிஷ்டை வப்பனே செய்தவர்கள் மட்டிமாடே
5240.
மாடான மாடல்லோ மாண்பரப்பா வையகத்தில் ஜாதிகெட்ட சைவரப்பா
கோடான கோடிபேர் சைவமென்று கூறியதோர் மொழியதனைக் காதிற்கேட்டேன்
தாடான மாமிஷத்தை தின்பார்பாதி சட்டமுடன் நெய்யதனைக் குடிப்பார்பாதி
நீடான தயிர்பாலில் சைவமுண்டோ நிட்சயமாய் சைவமென்று நம்புவாரே
காண்பித்தார் மாண்பருக்கு வினோதவித்தை களிப்புறவே போகரிஷி நாதர்தாமும்
ஆண்பிள்ளை புலிப்பாணி எந்தன்பாலா வப்பனே யுந்தனுக்கு வினோதஜாலம்
நண்பான பானையது பாண்டமப்பா நவிலவே யானுரைப்பேன் மைந்தாகேளு
சாண்பான தவளமது கலசம்போல சட்டமுடன் செய்துமல்லோ செப்பக்கேளே
5232.
செப்பவென்றால் நாவில்லை பாவுமில்லை ஜெகதலத்தில் நாதாக்கள் சொன்னதில்லை
ஒப்பமுடன் பாண்டமது செய்துமல்லோ ஒளிவான நறுவளிய மாபழத்தையப்பா
இப்புவியில் மாண்பர்களுக் கறியாமற்றான் யெழிலான பழமதுவைப் பாண்டத்துள்ளே
அப்பியே பூசியல்லோ காயப்போடு அங்ஙனவே செய்யுமுறை வறையக்கேளே
5233.
கேளப்பா ஜலமதனை பாண்டமிட்டு செப்புகிறேன் கட்டுயென்ற கொடிதானப்பா
பாளப்பாப் போகாமல் யெனையுங்கூட்டி பாங்குபெற சார்பிழிந்து ஜலத்தினுள்ளே
நாளப்பா போகாமல் அப்போதேதான் நலம்பெறவே சார்பிழிந்து சீனிபோட்டு
ஆலேதான் எல்லவரும் பார்த்திருக்க வப்பனே பாண்டமதை வுடைத்திடாயே
5234.
உடைக்கவே ஜலமதுதான் வூறல்போல வுத்தமனே இறுகியல்லோ வெண்ணைபோலாம்
படைசேர்ந்த கொலுமுகத்தில் இந்தஜாலம் பாலகனே செய்துமல்லோ வெண்ணையீவாய்
தடையறவே மாண்பரெல்லாங் கண்டுயேங்கி தகமையுடன் பொசித்தல்லோ யுன்னைமெச்சி
சடைபோன்ற தம்பிரான் மகுத்துவந்தான் தாரிணியில் இவர்போலு மில்லையென்பாரே
5235.
என்னவே வேணதொரு பொருளுமீவார் எழிலான மாந்திரீக ரென்றுமல்லோ
துன்னவே யுந்தனுக்கு சோடசாரம் தோறாமல் செய்தல்லோ தனமுமீவார்
நன்னயமாய் வேதாந்த சித்துவென்று நாட்டினிலே யுந்தமக்குப் பேருண்டாகும்
பன்னவே பலபேரும் போற்றுவார்கள் பாலகனே நீயுமொரு சித்தனாமே
5236.
சித்தனா மின்னமொரு மார்க்கஞ்சொல்வோம் சிறப்பான புலிப்பாணி மைந்தாகேளு
பக்தியுடன் குளிகையது பூண்டுமல்லோ பார்லோகம் சத்தகடல் சுத்திவந்தேன்
முத்திபெற மாண்பரெல்லாங் கோடிகோடி முயன்றுமே காவிக ஷாயத்தோடும்
நித்தமுமே ஜெபதபங்கள் அதிகமுண்டு நீணிலத்தில் வெகுபேர்கள் கோடியாமே
5237.
கோடியாம் சாதியிலே யனந்தஞ்சாதி கொற்றவனே பதினெட்டு ஜாதியுண்டு
பேடிகளுஞ் சூரர்களு மெத்தவுண்டு பேரான பதிதனிலே லக்கோயில்லை
தேடியே பலதேசங் கண்டாராய்ந்தேன் தேசத்தில் சைவமது காணவில்லை
நீடிரே வெகுமாண்பர் தேசமெல்லாம் நிலையான சைவமென்று சொல்வார்பாரே
5238.
சொல்லுவது வாக்கியத்தைக் கேட்டதுண்டு சொற்பமுள்ள சைவர்களைக் கண்டதில்லை
பல்லவே இறைச்சிவகை புசியோமென்றும் புலால்வகைகள் புசிப்பதில்லை யென்றுகூறி
வெல்லவே மதாச்சார பேதாபேதம் வெகுவாகப் பினத்தியல்லோ திரிவார்பாரு
கொல்லவே நித்தியமும் புலாலைத்தின்று கூசாமல் சைவமென்று கூறுவாரே
5239.
கூறுவார் பலபேத ஜாதிதன்னில் குறிப்புடனே பிரம்மென்ற ஜாதியப்பா
மாறுதலாம் சைவத்தைக் கூறியல்லோ மகுத்துவங்கள் ஆகமங்கள் மிகவுஞ்சொல்லி
தாறுமா றாகவல்லோ வேதங்கள்கூறி தாரிணியில் வெகுமாண்பர் பிழைப்பாரப்பா
ஆறுதலம் கரைகண்ட யோகநிஷ்டை வப்பனே செய்தவர்கள் மட்டிமாடே
5240.
மாடான மாடல்லோ மாண்பரப்பா வையகத்தில் ஜாதிகெட்ட சைவரப்பா
கோடான கோடிபேர் சைவமென்று கூறியதோர் மொழியதனைக் காதிற்கேட்டேன்
தாடான மாமிஷத்தை தின்பார்பாதி சட்டமுடன் நெய்யதனைக் குடிப்பார்பாதி
நீடான தயிர்பாலில் சைவமுண்டோ நிட்சயமாய் சைவமென்று நம்புவாரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக