5211.
வண்மையாஞ் சொரூபநிலை பின்தொடர்ந்து வாகுடனே யுந்தனிடம் உலாவும்பாரு
திண்மையாய் சயனங்கள் செய்யும்போது தீர்க்கமுடன் பூமிதனில் நடக்கும்போது
புண்மையாய் யுளுக்கார்த் திருக்கும்போதும் தகமையுடன் ஒருவருடன் பேசும்போதும்
உண்மையாய் உந்தனுக்கு வருங்காலத்தை யுத்தமனே யுந்தமக்கு கூறும்பாரே
5212.
கூறுமே நன்மையென்ற தீமையாவும் குறிப்புடனே யுந்தமக்கு முன்னேசொல்லும்
மாறுபடா மேனியது வாசிகூறும் வளமான தேகமது கற்றூனாகும்
வீறுடனே வையகத்தில் கோடிகாலம் வித்தகனே இருப்பதுவும் நிட்சயந்தான்
நாறுமுடல் அழியாது கோடிகாலம் நாணிலத்தில் இருப்பதுவும் சமாதியாமே
5213.
ஆமேதான் சாயாவின் தரிசனத்தை வப்பனே கண்டவர்க்கு எல்லாஞ்சித்தி
தாமேதான் அட்டமாஞ் சித்தியாவும் தாரணியில் அடைவதற்கு ஐயமில்லை
போமேதான் பனிரண்டு வாண்டுமட்டும் பொங்கமுடன் கண்டவர்க்கே சித்தியாகும்
வேமேதான் காணாத மாண்பருக்கு விட்டகுறை யிருந்தாலும் வாய்க்காதன்றே
5214.
அன்றான தரிசனத்தைக் கண்டமாண்பர் வவனியிலே தானுமொரு சித்தனைப்போல்
குன்றான மலைதனிலே இருக்கலாகும் குவலயத்தில் நீயுமொரு சித்தனைப்போல்
வென்றிடவே தேவாதி ரிஷிகள்தம்மை விண்ணுலகில் காண்பதற்கு யிடமுண்டாகும்
தென்திசையில் அகத்தியனார் முனிவர்தானும் செப்பினார் இந்தமுறை சொன்னார்பாரே
5215.
பாரேதான் சரநூலாம் பஞ்சாட்சி பாரினிலே மாணாக்கர் பிழைக்கவென்று
நேரேதான் சாத்திரத்தைப் பாடிவைத்தார் நீதியுடன் சாயாவின் தரிசனத்தை
சேரேதான் தரிசனத்தை காண்பதற்கு செம்மலுடன் வழிசொன்னார் மைதானில்லை
கூரேதான் மையினது மார்க்கந்தன்னை கூறினேன் காலாங்கி கடாட்சந்தானே
5216.
தானான சித்துமுனி கும்பயோனி தாரணியில் கருவதனை மறைத்துப்போட்டார்
மானான காலாங்கி எந்தநாதர் மகாதேவர் கடாட்சமது கிருபையாலே
தேனான கருக்குருவை யானுங்கற்று தெளிவாக மாணாக்கள் பிழைக்கவென்று
பானான சாஸ்திரங்கள் யாவும்பார்த்து பாருலகில் பாலகர்க்கு பாலித்தேனே
5217.
பாலிப்பேன் இன்னமொரு மார்க்கங்கேளும் பாங்கான புலிப்பாணி மைந்தாகேளு
நீலியென்ற கருங்காலி மூலிதானும் நீட்சியுடன் கண்ணனுட மூலிவேரும்
சூலியென்ற நத்தையின் சூரியப்பா சூரியனார் காந்தியது மூலிவேரும்
வேலியென்ற பருத்தியப்பா இருவேலிதானும் வேகமுள்ள கருப்பு வூமத்தைவேரே
5218.
வேரான சடையனது மூலிதானும் வேகமுடன் பொன்னினூ மத்தைவேரும்
தூரான மையூரின் சிகையுங்கூட்டி துப்புறவாய்த் தான்சுருக்கிப் பொடியதாக்கி
சேரான பொடிதனிலே வைங்கோலத்தை செப்பமுடன் தானுரைத்து சொல்லக்கேளு
கூரான புழுகுரோ சனையுஞ்சேர்த்து குறிப்புடனே மைசேர்த்து வரைத்திடாயே
5219.
சேர்த்துமே பேரண்டந் தன்னிலப்பா செம்மலுடன் மையதனைப் பிடித்துக்கொண்டு
கோர்த்துமே குமரியுட மையுங்கூட்டி கொற்றவனே தானரைத்து சிமிளில்வைத்து
பார்த்துமே நேத்திரமாம் புருவந்தன்னில் பாலகனே மைதீட்டி வாகாயத்தை
தீர்த்துமே பார்க்குகின்ற ஜாலந்தன்னில் திறமுடனே தெரிசனமுந் தெரியுந்தானே
5220.
தானான சூரியனை மேகந்தானும் சட்டமுடன் மேகமது மறைத்திட்டாலும்
பானான மேகமதுக் குள்ளிருக்கும் பாலகனே சூரியனுங் கண்ணிற்றோற்றும்
மானான சந்திரனைக் காணும்போது மகத்தான தரிசனையுங் கண்ணிற்றோற்றும்
தேனான தேசொளியின் மயக்கத்தைப்போல ஜெகஜோதி மின்னல்போல் தோற்றும்பாரே
வண்மையாஞ் சொரூபநிலை பின்தொடர்ந்து வாகுடனே யுந்தனிடம் உலாவும்பாரு
திண்மையாய் சயனங்கள் செய்யும்போது தீர்க்கமுடன் பூமிதனில் நடக்கும்போது
புண்மையாய் யுளுக்கார்த் திருக்கும்போதும் தகமையுடன் ஒருவருடன் பேசும்போதும்
உண்மையாய் உந்தனுக்கு வருங்காலத்தை யுத்தமனே யுந்தமக்கு கூறும்பாரே
5212.
கூறுமே நன்மையென்ற தீமையாவும் குறிப்புடனே யுந்தமக்கு முன்னேசொல்லும்
மாறுபடா மேனியது வாசிகூறும் வளமான தேகமது கற்றூனாகும்
வீறுடனே வையகத்தில் கோடிகாலம் வித்தகனே இருப்பதுவும் நிட்சயந்தான்
நாறுமுடல் அழியாது கோடிகாலம் நாணிலத்தில் இருப்பதுவும் சமாதியாமே
5213.
ஆமேதான் சாயாவின் தரிசனத்தை வப்பனே கண்டவர்க்கு எல்லாஞ்சித்தி
தாமேதான் அட்டமாஞ் சித்தியாவும் தாரணியில் அடைவதற்கு ஐயமில்லை
போமேதான் பனிரண்டு வாண்டுமட்டும் பொங்கமுடன் கண்டவர்க்கே சித்தியாகும்
வேமேதான் காணாத மாண்பருக்கு விட்டகுறை யிருந்தாலும் வாய்க்காதன்றே
5214.
அன்றான தரிசனத்தைக் கண்டமாண்பர் வவனியிலே தானுமொரு சித்தனைப்போல்
குன்றான மலைதனிலே இருக்கலாகும் குவலயத்தில் நீயுமொரு சித்தனைப்போல்
வென்றிடவே தேவாதி ரிஷிகள்தம்மை விண்ணுலகில் காண்பதற்கு யிடமுண்டாகும்
தென்திசையில் அகத்தியனார் முனிவர்தானும் செப்பினார் இந்தமுறை சொன்னார்பாரே
5215.
பாரேதான் சரநூலாம் பஞ்சாட்சி பாரினிலே மாணாக்கர் பிழைக்கவென்று
நேரேதான் சாத்திரத்தைப் பாடிவைத்தார் நீதியுடன் சாயாவின் தரிசனத்தை
சேரேதான் தரிசனத்தை காண்பதற்கு செம்மலுடன் வழிசொன்னார் மைதானில்லை
கூரேதான் மையினது மார்க்கந்தன்னை கூறினேன் காலாங்கி கடாட்சந்தானே
5216.
தானான சித்துமுனி கும்பயோனி தாரணியில் கருவதனை மறைத்துப்போட்டார்
மானான காலாங்கி எந்தநாதர் மகாதேவர் கடாட்சமது கிருபையாலே
தேனான கருக்குருவை யானுங்கற்று தெளிவாக மாணாக்கள் பிழைக்கவென்று
பானான சாஸ்திரங்கள் யாவும்பார்த்து பாருலகில் பாலகர்க்கு பாலித்தேனே
5217.
பாலிப்பேன் இன்னமொரு மார்க்கங்கேளும் பாங்கான புலிப்பாணி மைந்தாகேளு
நீலியென்ற கருங்காலி மூலிதானும் நீட்சியுடன் கண்ணனுட மூலிவேரும்
சூலியென்ற நத்தையின் சூரியப்பா சூரியனார் காந்தியது மூலிவேரும்
வேலியென்ற பருத்தியப்பா இருவேலிதானும் வேகமுள்ள கருப்பு வூமத்தைவேரே
5218.
வேரான சடையனது மூலிதானும் வேகமுடன் பொன்னினூ மத்தைவேரும்
தூரான மையூரின் சிகையுங்கூட்டி துப்புறவாய்த் தான்சுருக்கிப் பொடியதாக்கி
சேரான பொடிதனிலே வைங்கோலத்தை செப்பமுடன் தானுரைத்து சொல்லக்கேளு
கூரான புழுகுரோ சனையுஞ்சேர்த்து குறிப்புடனே மைசேர்த்து வரைத்திடாயே
5219.
சேர்த்துமே பேரண்டந் தன்னிலப்பா செம்மலுடன் மையதனைப் பிடித்துக்கொண்டு
கோர்த்துமே குமரியுட மையுங்கூட்டி கொற்றவனே தானரைத்து சிமிளில்வைத்து
பார்த்துமே நேத்திரமாம் புருவந்தன்னில் பாலகனே மைதீட்டி வாகாயத்தை
தீர்த்துமே பார்க்குகின்ற ஜாலந்தன்னில் திறமுடனே தெரிசனமுந் தெரியுந்தானே
5220.
தானான சூரியனை மேகந்தானும் சட்டமுடன் மேகமது மறைத்திட்டாலும்
பானான மேகமதுக் குள்ளிருக்கும் பாலகனே சூரியனுங் கண்ணிற்றோற்றும்
மானான சந்திரனைக் காணும்போது மகத்தான தரிசனையுங் கண்ணிற்றோற்றும்
தேனான தேசொளியின் மயக்கத்தைப்போல ஜெகஜோதி மின்னல்போல் தோற்றும்பாரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக