5251.
உண்மையாம் சீனபதி தேசத்தோர்க்கு ஓகோகோ சைவங்கள் இல்லையப்பா
கண்மையாய் மாமிஷங்கள் புலால்தானும் கபடன்றி புசிப்பது நீதியாகும்
வண்மையுடன் ஜெபதபங்கள் குளியலுண்டு வளமான நேமநிஷ்டை யனேகமுண்டு
திண்மையாம் மாமிஷம் மிலாதவர்க்கம் திகழுடனே தின்பார்கள் சைவந்தானே
5252.
சைவமென்பார் பேதாபேதங் களில்லை சாதுரிய பதார்த்தவகை புசித்திட்டாலும்
கைதவங்கள் பிசகாத சுழிகள்போலும் கைலாய நாதரைப்போல் தவமும்செய்வார்
மைவனங்கள் மெத்தவுண்டு சீனத்தார்க்கு மகாவிஷ்ணு கிருஷ்ணாவ தாரமென்பார்
வெய்தவம் பூண்டாலும் சீனத்தார்கள் விருப்பமுடன் சைவமது யில்லைதானே
5253.
தானான புலிப்பாணி மைந்தாகேளு தகமையுட னின்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் பாதமது கடாட்சத்தாலே
தேனான தேசமெலாம் குளிகைகொண்டு தெளிவுடனே எழுகடலுஞ் சுற்றிவந்தேன்
மானான மாண்பரிட சைகைகண்டேன் மகத்தான சாஸ்திரங்கள் மெத்தவுண்டே
5254.
உண்டான லோகபதி மாண்பரெல்லாம் ஓகோகோ நாதாக்கள் சொன்னவாக்கு
கண்டல்லோ சாஸ்திரங்கள் அதிகம்பார்த்து காசினியில் தத்துவத்தில் மிகுந்தோர்போல
மிண்டான வார்த்தைகளும் மிகவுங்கூறி மேதினியில் கரைகண்ட வித்துவான்போல்
அண்டர்முனி முதலானோர் கண்டுயேங்க வவனியிலே சித்தனைப்போல் பேசுவாரே
5255.
பேசியே வெகுகோடி மாண்பரெல்லாம் பினத்தினார் சாஸ்திரத்தின் குப்பல்தன்னை
பூசிதங்கள் கொண்டல்லோ பகட்டுகாட்டி புகழுடனே சாஸ்திரத்தை மெய்போல்சொல்லி
ஊசிதமாந் தத்துவங்கள் தியானமார்க்கம் உறுதியுடன் நாதாக்கள் சொன்னதில்லை
வாசித்து நால்வேத மாறுசாஸ்திரம் வகையுடனே கதைகட்டி வுரைத்திட்டாரே
5256.
உரைத்திட்ட கதையெல்லாம் பொய்யேயாகும் வுத்தமனே சாஸ்திரங்கள் அதர்வணந்தான்
கரைத்திட்ட மாகவல்லோ மாண்பருக்குக் காசினியில் தாமுரைத்தார் சாஸ்திரங்கள்
நிறைத்திட்ட மாகவல்லோ யானுஞ்சென்று நீடாழி யுலகுபதி சுத்திவந்தேன்
வரைக்கமலம் வீற்றிருக்கும் தாயார்பாதம் வளமையுடன் எந்நாளும் பதங்கண்டேனே
5257.
பதமான பதமதுவும் சாஸ்திரங்கள் பாங்குடனே மேதினியில் கண்டேன்யானும்
மிதமுடனே தர்க்கங்கள் யாகமங்கள் மேதினியில் வெகுபேர்கள் சொல்வாரப்பா
நிதமுடனே சாஸ்திரத்தின் தொகுப்பையெல்லாம் நீதியுடன் மெய்போலே பேசுவார்பார்
சதகோடி சாஸ்திரங்கள் கூறிட்டாலும் சட்டமுடன் சீனபதிக் கீடாகாரே
5258.
இணையான தென்காசி பதியிலப்பா யெழிலான தேசமது வனேகமுண்டு
சணமதிலே குளிகையது பூண்டுகொண்டு தாரிணியில் சதகோடி தூரமட்டும்
கணமதுவும் நில்லாமல் அடியேன்தானும் காசிபதி மாண்பரெல்லாங் கண்டுவந்தேன்
பிணமதுவும் மடிந்தாக்கால் சாஸ்திரங்கள் பேரான சாங்கியங்கள் மெத்தவுண்டே
5259.
உண்டான சமுசாரி கோடிமாண்பர் வுத்தமர்கள் வேதாந்தங் கடந்தஞானி
செண்டான முறைமைகெட்டு மையல்கொண்டு ஜெகந்தனிலே மடிந்தவர்கள் கோடாகோடி
அண்டமுடன் ஆகாயந் தன்னளவாய் அகிலமெல்லாங் கொடிகட்டி வாழ்ந்தார்கோடி
புண்டரீக கிருஷ்ணாவ தாரனைப்போல் புகழான கீர்த்தியுடன் மடிந்தோர்தாமே
5260.
மடிந்ததோர் மாணாக்கள் மானிலத்தில் மகதேவர் பாதமது வடைந்தோர்கோடி
கடினமுடன் வையகத்தில் வாழ்வுபெற்று காசினியில் சாஸ்திரங்கள் மிகவுங்கற்று
அடியளவு வேதமுதல் ஆகமங்கள் அறுபத்து நாலுகலை சாத்திரங்கள்
முடியோடு முனிவர்பதந் தாள்பணிந்து மூதுலகில் கற்றென்ன ஒன்றுங்காணே
உண்மையாம் சீனபதி தேசத்தோர்க்கு ஓகோகோ சைவங்கள் இல்லையப்பா
கண்மையாய் மாமிஷங்கள் புலால்தானும் கபடன்றி புசிப்பது நீதியாகும்
வண்மையுடன் ஜெபதபங்கள் குளியலுண்டு வளமான நேமநிஷ்டை யனேகமுண்டு
திண்மையாம் மாமிஷம் மிலாதவர்க்கம் திகழுடனே தின்பார்கள் சைவந்தானே
5252.
சைவமென்பார் பேதாபேதங் களில்லை சாதுரிய பதார்த்தவகை புசித்திட்டாலும்
கைதவங்கள் பிசகாத சுழிகள்போலும் கைலாய நாதரைப்போல் தவமும்செய்வார்
மைவனங்கள் மெத்தவுண்டு சீனத்தார்க்கு மகாவிஷ்ணு கிருஷ்ணாவ தாரமென்பார்
வெய்தவம் பூண்டாலும் சீனத்தார்கள் விருப்பமுடன் சைவமது யில்லைதானே
5253.
தானான புலிப்பாணி மைந்தாகேளு தகமையுட னின்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் பாதமது கடாட்சத்தாலே
தேனான தேசமெலாம் குளிகைகொண்டு தெளிவுடனே எழுகடலுஞ் சுற்றிவந்தேன்
மானான மாண்பரிட சைகைகண்டேன் மகத்தான சாஸ்திரங்கள் மெத்தவுண்டே
5254.
உண்டான லோகபதி மாண்பரெல்லாம் ஓகோகோ நாதாக்கள் சொன்னவாக்கு
கண்டல்லோ சாஸ்திரங்கள் அதிகம்பார்த்து காசினியில் தத்துவத்தில் மிகுந்தோர்போல
மிண்டான வார்த்தைகளும் மிகவுங்கூறி மேதினியில் கரைகண்ட வித்துவான்போல்
அண்டர்முனி முதலானோர் கண்டுயேங்க வவனியிலே சித்தனைப்போல் பேசுவாரே
5255.
பேசியே வெகுகோடி மாண்பரெல்லாம் பினத்தினார் சாஸ்திரத்தின் குப்பல்தன்னை
பூசிதங்கள் கொண்டல்லோ பகட்டுகாட்டி புகழுடனே சாஸ்திரத்தை மெய்போல்சொல்லி
ஊசிதமாந் தத்துவங்கள் தியானமார்க்கம் உறுதியுடன் நாதாக்கள் சொன்னதில்லை
வாசித்து நால்வேத மாறுசாஸ்திரம் வகையுடனே கதைகட்டி வுரைத்திட்டாரே
5256.
உரைத்திட்ட கதையெல்லாம் பொய்யேயாகும் வுத்தமனே சாஸ்திரங்கள் அதர்வணந்தான்
கரைத்திட்ட மாகவல்லோ மாண்பருக்குக் காசினியில் தாமுரைத்தார் சாஸ்திரங்கள்
நிறைத்திட்ட மாகவல்லோ யானுஞ்சென்று நீடாழி யுலகுபதி சுத்திவந்தேன்
வரைக்கமலம் வீற்றிருக்கும் தாயார்பாதம் வளமையுடன் எந்நாளும் பதங்கண்டேனே
5257.
பதமான பதமதுவும் சாஸ்திரங்கள் பாங்குடனே மேதினியில் கண்டேன்யானும்
மிதமுடனே தர்க்கங்கள் யாகமங்கள் மேதினியில் வெகுபேர்கள் சொல்வாரப்பா
நிதமுடனே சாஸ்திரத்தின் தொகுப்பையெல்லாம் நீதியுடன் மெய்போலே பேசுவார்பார்
சதகோடி சாஸ்திரங்கள் கூறிட்டாலும் சட்டமுடன் சீனபதிக் கீடாகாரே
5258.
இணையான தென்காசி பதியிலப்பா யெழிலான தேசமது வனேகமுண்டு
சணமதிலே குளிகையது பூண்டுகொண்டு தாரிணியில் சதகோடி தூரமட்டும்
கணமதுவும் நில்லாமல் அடியேன்தானும் காசிபதி மாண்பரெல்லாங் கண்டுவந்தேன்
பிணமதுவும் மடிந்தாக்கால் சாஸ்திரங்கள் பேரான சாங்கியங்கள் மெத்தவுண்டே
5259.
உண்டான சமுசாரி கோடிமாண்பர் வுத்தமர்கள் வேதாந்தங் கடந்தஞானி
செண்டான முறைமைகெட்டு மையல்கொண்டு ஜெகந்தனிலே மடிந்தவர்கள் கோடாகோடி
அண்டமுடன் ஆகாயந் தன்னளவாய் அகிலமெல்லாங் கொடிகட்டி வாழ்ந்தார்கோடி
புண்டரீக கிருஷ்ணாவ தாரனைப்போல் புகழான கீர்த்தியுடன் மடிந்தோர்தாமே
5260.
மடிந்ததோர் மாணாக்கள் மானிலத்தில் மகதேவர் பாதமது வடைந்தோர்கோடி
கடினமுடன் வையகத்தில் வாழ்வுபெற்று காசினியில் சாஸ்திரங்கள் மிகவுங்கற்று
அடியளவு வேதமுதல் ஆகமங்கள் அறுபத்து நாலுகலை சாத்திரங்கள்
முடியோடு முனிவர்பதந் தாள்பணிந்து மூதுலகில் கற்றென்ன ஒன்றுங்காணே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக