5221.
பாரேதான் மையினால் மேகஜாலம் பாங்குடனே தெரிசனையுங் காணலாகும்
நேரேதான் இக்கருவை சித்தர்தானும் நெறிமுறைமை தானறிந்து கூறாமற்றான்
சீரேதான் கருக்குருவை மறைத்துவிட்டு சீர்தப்பி தெரிசனத்தைப் பாடிவைத்தார்
ஆரோதான் எனைப்போல சொன்னாரப்பா வப்பனே வுண்மையது வுரைத்திட்டோமே
5222.
உண்மையாய் சாத்திரங்கள் கண்டாராய்ந்து உவமையுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
திண்மையாய் காலாங்கி கிருபையாலே திறமுடனே யுந்தமக்கு வோதிவைத்தேன்
வண்மையாய் நீயுமொரு சித்தனைப்போல் வளமுடனே யுலகுதனி லிருந்துகொண்டு
நன்மையாய் நாதாக்கள் பாதம்போற்றி நாட்டமுடன் எப்போதும் வாழ்வீர்காணே
5223.
காணவே போகரிஷி நாதர்தானும் கனமான காலாங்கி நாதர்பாதம்
பூணவே யவர்பாதந் தொட்டுமல்லோ புகழுடனே மதியமுர்தம் பூண்டுமல்லோ
தோணவே குளிகைதனை பூண்டுகொண்டு துப்புரவாய் சீனபதிக் கேகியல்லோ
நீணவே காலாங்கி சமாதிபக்கல் நின்றாரே நெடுநேரம் நின்றிட்டாரே
5224.
நின்றதொரு போகரிஷி வந்தசேதி நீதியுள்ள காலாங்கி நாதருக்கு
சொந்தமுடன் மனோலயத்தி லறிந்துகொண்டு தோற்றமுடன் போகரிஷி நாதருக்கு
அந்தமுடன் அசரீரி வாக்கினாலே யங்ஙனவே சப்தமது கேட்கலாச்சு
விந்தையுடன் சப்தமது கேட்டபோது விருப்பமுடன் போகரிஷி வணங்கிட்டாரே
5225.
வணங்கியதோர் போகரிஷி நாதர்தானும் வாகான ஞானோப தேசங்கேட்டு
இணங்கியே சிரம்பணிந்து கைகுவித்து யெழிலான காலாங்கி நாதருக்கு
மணங்கமழும் வேதாந்த தாயாருக்கு மகிழ்ச்சியுடன் இருபாதந் தெண்டனிட்டு
சுணங்கமது வாராமல் போகர்தாமும் துப்புரவாய் சீனபதி வந்திட்டாரே
5226.
இட்டதொரு போகரிஷி நாதர்தாமும் எழிலான சீனபதிப் பெண்களுக்கு
சட்டமுடன் சாயாவின் தரிசனத்தை சாங்கமுடன் போதித்தார் போகர்தாமும்
அட்டதிசை தான்புகழும் சாயாவின்தன் வன்பான தரிசனத்தை கூறும்போது
திட்டமுடன் மாதரெல்லாம் கண்டுமல்லோ திறமுடனே மனதுவந்து களிப்புற்றாரே
5227.
களிப்பான தெரிசனத்தைப் பெண்களெல்லாம் கருத்துடனே பார்த்தல்லோ சந்தோஷித்து
தளிர்போன்ற கரமதனை கண்ணில்வொத்தி சார்புடனே சாயாவின் தரிசனத்தை
பளிங்குடனே எங்களுக்கு போதித்தாலே பாங்குடனே தரிசித்து மனங்களித்து
அளியாமல் எங்களது காயந்தன்னை வவனியிலே தாமிருக்கச் செய்வோம்பாரே
5228.
பாரேதான் காயாதி கற்பங்கொண்டு பாங்குபெற எந்நாளும் பாரின்மீது
சீரேதான் தாமிருந்து யோகசாதம் சிறப்புடனே கண்டல்லோ நாங்களுந்தான்
நேரேதான் பனிரண்டு வாண்டுமட்டும் நேர்புடனே சாதனைகள் மிகவுஞ்செய்து
வீரேதான் விண்ணுலகு வதிசயத்தை விருப்பமுடன் காண்பமென்று வினவிட்டாரே
5229.
இட்டதொரு பெண்களுக்கு போகர்தாமும் யெழிலான வித்தையென்ற சாதனத்தை
தொட்டகுறி போலல்லோ காண்பித்தேதான் தேறாமல் எப்போதும் காண்பதற்கு
பட்டதொரு குறிபோல தரிசனத்தை பாங்குபெற போதித்துப் பெண்களுக்கு
சட்டமுடன் குளிகையது கொண்டுமல்லோ சாங்கமுடன் மறுபடியும் வந்திட்டாரே
5230.
வந்தாரே மேருவுக்குத் தெற்கேயப்பா வளமுடனே நர்மதா நதிக்குப்பின்னால்
அந்தமுடன் போகரிஷி நாதர்தாமும் அன்பாக குளிகையது பூண்டுகொண்டு
நிந்தனைக ளில்லாமல் ரிஷியார்தாமும் நீதியுடன் வேடிக்கை சிமிட்டுவித்தை
சொந்தமுடன் செய்தல்லோ மாண்பருக்கு சூட்சாதி சூட்சமெல்லாம் காண்பித்தாரே
பாரேதான் மையினால் மேகஜாலம் பாங்குடனே தெரிசனையுங் காணலாகும்
நேரேதான் இக்கருவை சித்தர்தானும் நெறிமுறைமை தானறிந்து கூறாமற்றான்
சீரேதான் கருக்குருவை மறைத்துவிட்டு சீர்தப்பி தெரிசனத்தைப் பாடிவைத்தார்
ஆரோதான் எனைப்போல சொன்னாரப்பா வப்பனே வுண்மையது வுரைத்திட்டோமே
5222.
உண்மையாய் சாத்திரங்கள் கண்டாராய்ந்து உவமையுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
திண்மையாய் காலாங்கி கிருபையாலே திறமுடனே யுந்தமக்கு வோதிவைத்தேன்
வண்மையாய் நீயுமொரு சித்தனைப்போல் வளமுடனே யுலகுதனி லிருந்துகொண்டு
நன்மையாய் நாதாக்கள் பாதம்போற்றி நாட்டமுடன் எப்போதும் வாழ்வீர்காணே
5223.
காணவே போகரிஷி நாதர்தானும் கனமான காலாங்கி நாதர்பாதம்
பூணவே யவர்பாதந் தொட்டுமல்லோ புகழுடனே மதியமுர்தம் பூண்டுமல்லோ
தோணவே குளிகைதனை பூண்டுகொண்டு துப்புரவாய் சீனபதிக் கேகியல்லோ
நீணவே காலாங்கி சமாதிபக்கல் நின்றாரே நெடுநேரம் நின்றிட்டாரே
5224.
நின்றதொரு போகரிஷி வந்தசேதி நீதியுள்ள காலாங்கி நாதருக்கு
சொந்தமுடன் மனோலயத்தி லறிந்துகொண்டு தோற்றமுடன் போகரிஷி நாதருக்கு
அந்தமுடன் அசரீரி வாக்கினாலே யங்ஙனவே சப்தமது கேட்கலாச்சு
விந்தையுடன் சப்தமது கேட்டபோது விருப்பமுடன் போகரிஷி வணங்கிட்டாரே
5225.
வணங்கியதோர் போகரிஷி நாதர்தானும் வாகான ஞானோப தேசங்கேட்டு
இணங்கியே சிரம்பணிந்து கைகுவித்து யெழிலான காலாங்கி நாதருக்கு
மணங்கமழும் வேதாந்த தாயாருக்கு மகிழ்ச்சியுடன் இருபாதந் தெண்டனிட்டு
சுணங்கமது வாராமல் போகர்தாமும் துப்புரவாய் சீனபதி வந்திட்டாரே
5226.
இட்டதொரு போகரிஷி நாதர்தாமும் எழிலான சீனபதிப் பெண்களுக்கு
சட்டமுடன் சாயாவின் தரிசனத்தை சாங்கமுடன் போதித்தார் போகர்தாமும்
அட்டதிசை தான்புகழும் சாயாவின்தன் வன்பான தரிசனத்தை கூறும்போது
திட்டமுடன் மாதரெல்லாம் கண்டுமல்லோ திறமுடனே மனதுவந்து களிப்புற்றாரே
5227.
களிப்பான தெரிசனத்தைப் பெண்களெல்லாம் கருத்துடனே பார்த்தல்லோ சந்தோஷித்து
தளிர்போன்ற கரமதனை கண்ணில்வொத்தி சார்புடனே சாயாவின் தரிசனத்தை
பளிங்குடனே எங்களுக்கு போதித்தாலே பாங்குடனே தரிசித்து மனங்களித்து
அளியாமல் எங்களது காயந்தன்னை வவனியிலே தாமிருக்கச் செய்வோம்பாரே
5228.
பாரேதான் காயாதி கற்பங்கொண்டு பாங்குபெற எந்நாளும் பாரின்மீது
சீரேதான் தாமிருந்து யோகசாதம் சிறப்புடனே கண்டல்லோ நாங்களுந்தான்
நேரேதான் பனிரண்டு வாண்டுமட்டும் நேர்புடனே சாதனைகள் மிகவுஞ்செய்து
வீரேதான் விண்ணுலகு வதிசயத்தை விருப்பமுடன் காண்பமென்று வினவிட்டாரே
5229.
இட்டதொரு பெண்களுக்கு போகர்தாமும் யெழிலான வித்தையென்ற சாதனத்தை
தொட்டகுறி போலல்லோ காண்பித்தேதான் தேறாமல் எப்போதும் காண்பதற்கு
பட்டதொரு குறிபோல தரிசனத்தை பாங்குபெற போதித்துப் பெண்களுக்கு
சட்டமுடன் குளிகையது கொண்டுமல்லோ சாங்கமுடன் மறுபடியும் வந்திட்டாரே
5230.
வந்தாரே மேருவுக்குத் தெற்கேயப்பா வளமுடனே நர்மதா நதிக்குப்பின்னால்
அந்தமுடன் போகரிஷி நாதர்தாமும் அன்பாக குளிகையது பூண்டுகொண்டு
நிந்தனைக ளில்லாமல் ரிஷியார்தாமும் நீதியுடன் வேடிக்கை சிமிட்டுவித்தை
சொந்தமுடன் செய்தல்லோ மாண்பருக்கு சூட்சாதி சூட்சமெல்லாம் காண்பித்தாரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக